செய்திகள்
திருவள்ளூர் அருகே புதுப்பெண் திடீர் மாயம்- போலீஸ் விசாரணை
திருவள்ளூர் அருகே நாளை மறுநாள் திருமணம் நடக்கவிருந்த நிலையில் புதுப்பெண் திடீர் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த செஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் சம்பத். இவரது மகள் நிஷாந்தி (18).
இவருக்கும் தாவுத்கான் பேட்டை சேர்ந்த விஜி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 22-ந்தேதி திருமணம் நடக்க இருந்தது.
இரு வீட்டாரும் திருமண வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். அனைவருக்கும் திருமண பத்திரிகை கொடுத்து இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிஷாந்தி திரும்பிவரவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரிந்தது.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடியும் நிஷாந்தியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து கடம்பத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுப்பெண் நிஷாந்தியை யாரேனும் கடத்தினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
நாளை மறுநாள் திருமணம் நடக்க இருந்த நிலையில் பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருத்தணி பைபாஸ் ரோட்டை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் புவனேஸ்வரி. திருத்தணியில் உள்ள பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தேர்வு எழுத பள்ளிக்குச் சென்ற புவனேஸ்வரி பின்னர் திரும்பி வரவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகளின் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து திருத்தணி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாயமான மாணவி புவனேஸ்வரியை தேடி வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த செஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் சம்பத். இவரது மகள் நிஷாந்தி (18).
இவருக்கும் தாவுத்கான் பேட்டை சேர்ந்த விஜி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 22-ந்தேதி திருமணம் நடக்க இருந்தது.
இரு வீட்டாரும் திருமண வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். அனைவருக்கும் திருமண பத்திரிகை கொடுத்து இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிஷாந்தி திரும்பிவரவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரிந்தது.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடியும் நிஷாந்தியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து கடம்பத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுப்பெண் நிஷாந்தியை யாரேனும் கடத்தினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
நாளை மறுநாள் திருமணம் நடக்க இருந்த நிலையில் பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருத்தணி பைபாஸ் ரோட்டை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் புவனேஸ்வரி. திருத்தணியில் உள்ள பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தேர்வு எழுத பள்ளிக்குச் சென்ற புவனேஸ்வரி பின்னர் திரும்பி வரவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகளின் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து திருத்தணி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாயமான மாணவி புவனேஸ்வரியை தேடி வருகின்றனர்.