search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new bride missing"

    திருமங்கலம் அருகே வருகிற 4-ந்தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் புதுப்பெண் திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டியை அடுத்துள்ள வி.அம்மா பட்டியை சேர்ந்தவர் சின்னக்காளை. இவரது மகள் பவானி (வயது 20). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு வருகிற 4-ந்தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

    திருமணத்திற்கு சில நாட்களே இருந்ததால் சின்னக்காளை மற்றும் உறவினர்கள் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை பவானி வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி சென்றார். அதன் பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த சின்னக்காளை மகளை காணாமல் உறவினர் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    எனவே டி.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகின்றனர். திருமணத்துக்கு இரண்டு நாட்களே இருந்த நிலையில் மணப்பெண் மாயமானதால் குடும்பமே சோகத்தில் மூழ்கியது. #Tamilnews
    ×