என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வருகிற 4-ந்தேதி திருமணம் நடைபெற இருந்த புதுப்பெண் திடீர் மாயம்: போலீசார் விசாரணை
Byமாலை மலர்1 Jun 2018 9:43 AM GMT (Updated: 1 Jun 2018 9:43 AM GMT)
திருமங்கலம் அருகே வருகிற 4-ந்தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் புதுப்பெண் திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:
திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டியை அடுத்துள்ள வி.அம்மா பட்டியை சேர்ந்தவர் சின்னக்காளை. இவரது மகள் பவானி (வயது 20). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு வருகிற 4-ந்தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.
திருமணத்திற்கு சில நாட்களே இருந்ததால் சின்னக்காளை மற்றும் உறவினர்கள் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை பவானி வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி சென்றார். அதன் பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த சின்னக்காளை மகளை காணாமல் உறவினர் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே டி.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகின்றனர். திருமணத்துக்கு இரண்டு நாட்களே இருந்த நிலையில் மணப்பெண் மாயமானதால் குடும்பமே சோகத்தில் மூழ்கியது. #Tamilnews
திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டியை அடுத்துள்ள வி.அம்மா பட்டியை சேர்ந்தவர் சின்னக்காளை. இவரது மகள் பவானி (வயது 20). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு வருகிற 4-ந்தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.
திருமணத்திற்கு சில நாட்களே இருந்ததால் சின்னக்காளை மற்றும் உறவினர்கள் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை பவானி வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி சென்றார். அதன் பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த சின்னக்காளை மகளை காணாமல் உறவினர் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே டி.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகின்றனர். திருமணத்துக்கு இரண்டு நாட்களே இருந்த நிலையில் மணப்பெண் மாயமானதால் குடும்பமே சோகத்தில் மூழ்கியது. #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X