செய்திகள்
இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் திடீர் மாயம்
கோவை துடியலூரில் இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்:
கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை சஞ்சீவி நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகள் சங்கீதா (வயது 22). இவருக்கும் மதுக்கரையை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அதன்படி இன்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் சங்கீதா கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கம் மற்றும் தோழிகள் வீட்டில் தேடிப்பார்த்தனர். ஆனால் சங்கீதாவை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து பெற்றோர் துடியலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சங்கீதாவை தேடி வருகிறார்கள்.
இன்று காலை நடக்க இருந்த திருமணம் நின்றுபோனதால் உறவினர்கள், நண்பர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை சஞ்சீவி நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகள் சங்கீதா (வயது 22). இவருக்கும் மதுக்கரையை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அதன்படி இன்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் சங்கீதா கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கம் மற்றும் தோழிகள் வீட்டில் தேடிப்பார்த்தனர். ஆனால் சங்கீதாவை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து பெற்றோர் துடியலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சங்கீதாவை தேடி வருகிறார்கள்.
இன்று காலை நடக்க இருந்த திருமணம் நின்றுபோனதால் உறவினர்கள், நண்பர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.