செய்திகள்
வேப்பம்பட்டில் கோவிலுக்குள் புகுந்து நகை-உண்டியல் கொள்ளை
செவ்வாப்பேட்டை அருகே வேப்பம்பட்டில் கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பணத்தை திருடி விட்டு உண்டியலை புதரில் வீசி சென்றுள்ளனர்.
செவ்வாப்பேட்டை:
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பஜனை கோவில் தெருவில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இன்று காலை பூஜை செய்வதற்காக அர்ச்சகர் வந்தார்.
அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்றபோது பூதேவி, ஸ்ரீதேவி சாமி கழுத்தில் இருந்த 1½ பவுன் தாலி செயின் கொள்ளை போயிருந்தது. மேலும் உண்டியலும் காணாமல் போயிருந்தது.
இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது கோவில் அருகே உள்ள புதரில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த சுமார் ரூ.3 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பணத்தை திருடி விட்டு உண்டியலை புதரில் வீசி சென்றுள்ளனர்.
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பஜனை கோவில் தெருவில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இன்று காலை பூஜை செய்வதற்காக அர்ச்சகர் வந்தார்.
அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்றபோது பூதேவி, ஸ்ரீதேவி சாமி கழுத்தில் இருந்த 1½ பவுன் தாலி செயின் கொள்ளை போயிருந்தது. மேலும் உண்டியலும் காணாமல் போயிருந்தது.
இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது கோவில் அருகே உள்ள புதரில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த சுமார் ரூ.3 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பணத்தை திருடி விட்டு உண்டியலை புதரில் வீசி சென்றுள்ளனர்.