ஆன்மிகம்
தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரருக்கு தீபாராதனை காண்பித்த காட்சி.

பழனி முருகன் கோவிலில் தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் உலா

Published On 2017-09-12 04:10 GMT   |   Update On 2017-09-12 04:10 GMT
பழனி முருகன் கோவிலில் ஆவணி மாத கார்த்திகை விழாவையொட்டி தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உலா வந்தார்.
பழனி முருகன் கோவிலில் ஆவணி மாத கார்த்திகை விழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. முருகன் விஸ்வரூப தரிசனமும் நடைபெற்றது. இதை தொடர்ந்து காலை 6.30 மணிக்கு விளா பூஜையில் முருகனுக்கு சன்னியாசி அலங்காரமும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடன் அலங்காரமும், 9 மணிக்கு கால சந்திபூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது.

பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகர் அலங்காரமும், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரமும், இரவு 9 மணிக்கு ராக்காலபூஜையில் வெள்ளை நிற மலர்களால் சாமிக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.


108 திருவிளக்கு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்ட போது எடுத்த படம்.

விழாவையொட்டி மலைக்கோவிலில் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம், கட்டளை தரிசனம், கால பூஜை தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மலைக்கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் உலா வந்தார். தொடர்ந்து 7.15 மணிக்கு சின்னக்குமாரர் தங்கரதத்தில் எழுந்தருளினார். தங்கரத புறப்பாட்டுக்கு 74 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News