சினிமா

`மெர்சல்' படத்தில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றம்?

Published On 2017-08-04 10:50 GMT   |   Update On 2017-08-04 10:50 GMT
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்' படத்தில் விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஒன்று காத்திருக்கிறது.
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் `மெர்சல்' படத்தில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் இப்படத்தில் விஜய் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படத்தில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக உருவாகி வரும் `மெர்சல்' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடக்கிறது.

துப்பாக்கி படம் முதல் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த பைரா படம் வரை அனைத்து படங்களிலும் விஜய் ஒரு பாடலை பாடியிருந்தார். இந்நிலையில், தற்போது உருவாகி வரும் `மெர்சல்' படத்திலும் விஜய் ஒரு பாடலை பாடுவார் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்து வருகிறார்கள்.



ஆனால் அந்த ஆவல் நிறைவேறுவதில் கொஞ்சம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக விஜய் நடித்த `உதயா', `அழகிய தமிழ்மகன்' உள்ளிட்ட படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். ஆனால் அந்த படங்களில் விஜய் எந்த பாட்டும் பாடவில்லை. இந்நிலையில், `மெர்சல்' படத்தில் விஜய் பாடுவார் என்ற எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. ஆனால் விஜய் இந்த படத்தில் பாடவில்லை என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு வெளியான `அச்சம் என்பது மடமையடா' படத்திலும் சிம்பு முதலில் பாடல் பாடவில்லை. ஆனால் திரையில் தேவைப்பட்டதால் ஷோக்காளி பாடலை சிம்புவும் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் விஜய்யும் பாடுவாரா என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Tags:    

Similar News