செய்திகள்

2வது முறை முதல் மந்திரியாக பதவியேற்ற சந்திரசேகர ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2018-12-13 13:55 GMT   |   Update On 2018-12-13 13:55 GMT
தெலுங்கானாவில் இரண்டாவது முறையாக முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள சந்திரசேகர ராவுக்கு பிரதமர் மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். #TelanganaElections #ChandrashekharRao #Modi
ஐதராபாத்:

ஆந்திராவை இரண்டாகப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது. தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க அவர் தயாரானார்.

தெலுங்கானாவில் கடந்த 7-ம்தேதி நடந்த சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில்,  மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.



இதையடுத்து, தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரான சந்திரசேகர ராவ், இரண்டாவது முறையாக இன்று முதல் மந்திரியாக பதவியேற்றார்.  முதல் மந்திரி பதவியேற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில், தெலுங்கானாவில் இரண்டாவது முறையாக முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள சந்திரசேகர ராவுக்கு பிரதமர் மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தெலுங்கானா முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்ட சந்திரசேகர் ராவுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். #TelanganaElections #ChandrashekharRao #Modi
Tags:    

Similar News