search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெலுங்கானா ராஷ்டிர சமிதி"

    தெலுங்கானாவில் இரண்டாவது முறையாக முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள சந்திரசேகர ராவுக்கு பிரதமர் மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். #TelanganaElections #ChandrashekharRao #Modi
    ஐதராபாத்:

    ஆந்திராவை இரண்டாகப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது. தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க அவர் தயாரானார்.

    தெலுங்கானாவில் கடந்த 7-ம்தேதி நடந்த சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில்,  மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.



    இதையடுத்து, தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரான சந்திரசேகர ராவ், இரண்டாவது முறையாக இன்று முதல் மந்திரியாக பதவியேற்றார்.  முதல் மந்திரி பதவியேற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இந்நிலையில், தெலுங்கானாவில் இரண்டாவது முறையாக முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள சந்திரசேகர ராவுக்கு பிரதமர் மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தெலுங்கானா முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்ட சந்திரசேகர் ராவுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். #TelanganaElections #ChandrashekharRao #Modi
    தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரான சந்திரசேகர ராவ், இரண்டாவது முறையாக நாளை முதல் மந்திரியாக பதவியேற்கிறார். #TelanganaElections #ChandrashekharRao
    ஐதராபாத்:

    ஆந்திராவை இரண்டாகப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது.

    அவர் தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயார் ஆனார்.

    இதற்கிடையே, தெலுங்கானாவில் கடந்த 7-ம்தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    இதில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.



    இந்நிலையில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரான சந்திரசேகர ராவ், இரண்டாவது முறையாக நாளை முதல் மந்திரியாக பதவியேற்கிறார். 

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நாளை மதியம் 1.30 மணியளவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரான சந்திரசேகர ராவ் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என தெரிவித்தனர்.

    முதல் மந்திரி பதவியேற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு கவர்னர் மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் போலீசர் ஈடுபட்டு வருகின்றனர். #TelanganaElections #ChandrashekharRao
    தெலுங்கானா மாநில சட்டசபையில் ஆளும் கட்சி தலைவராக சந்திரசேகர ராவ் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். #TelanganaElections #ChandrashekharRao
    ஐதராபாத்:

    ஆந்திராவை இரண்டாகப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதன் முதலாக முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது. அவர் தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயார் ஆனார்.

    இதற்கிடையே, தெலுங்கானாவில் கடந்த 7-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது.



    காஜ்வெல் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் ரெட்டியை 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சந்திரசேகர  ராவின் மகன் கே.டி.ராமா ராவ், மருமகன் ஹரிஷ் ராவ் ஆகியோரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். 

    இந்நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட புதிய எம் எல் ஏக்களின் கூட்டம் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்தின் முடிவில் தெலுங்கானா மாநில சட்டசபையின் ஆளும் கட்சி தலைவராக சந்திரசேகர ராவ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதையடுத்து, சந்திரசேகர ராவ் தனது ஆதரவாளர்களுடன் தெலுங்கானா மாநில கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார் என தெரிகிறது. #TelanganaElections #ChandrashekharRao
    தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து விலகிய செவ்வாலா தொகுதி எம்.பி. கொன்டா விஷ்வேஷ்வர் ரெட்டி டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். #ChevellaMP #KondaVishweshwarReddy #RahulGandhi
    புதுடெல்லி:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 113 சட்டசபை தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் முடிந்து தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ள நிலையில் அம்மாநிலத்தை ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி  கட்சியில் இருந்து  செவ்வாலா தொகுதி எம்.பி. கொன்டா விஷ்வேஷ்வர் ரெட்டி நேற்று ராஜினாமா செய்தார்.

    அவரை தொடர்ந்து மேலும் சில எம்.பி.க்கள் விலகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விலகிய கொன்டா விஷ்வேஷ்வர் ரெட்டி டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.



    அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டாரா? அல்லது, இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானதா? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #ChevellaMP #KondaVishweshwarReddy #RahulGandhi  

    ×