என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழனி அருகே ரெயிலில் அடிபட்டு தி.மு.க. பிரமுகர் பலி
Byமாலை மலர்11 Sep 2017 11:26 AM GMT (Updated: 11 Sep 2017 11:26 AM GMT)
பழனி அருகே ரெயிலில் அடிபட்டு தி.மு.க. பிரமுகர் பலியானார். இது குறித்து பழனி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பழனி:
பழனி அருகே உள்ள கோதைமங்கலத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 55). பழனி ஒன்றிய தி.மு.க. பிரமுகராக இருந்தார். இவருக்கு சொந்தமான தோட்டம் ஆவுடையார் கோவில் அருகே உள்ளது. இவர் தினசரி தோட்டத்தை பார்ப்பதற்காக அந்த பகுதியில் உள்ள தண்டவாளம் வழியாக நடந்து செல்வது வழக்கம்.
அதன்படி இன்று காலை கருப்பசாமி தண்டவாள பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் பாலக்காடு பகுதியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி ரெயில் வந்து கொண்டு இருந்தது. இதனை கருப்பசாமி கவனிக்கவில்லை. அப்போது எதிர்பாராதவிதமாக ரெயில் அவர் மீது மோதியது. இதில் அவர் உடல் துண்டாகி பலியானார்.
இறந்து போன கருப்பசாமிக்கு மனைவி ஈஸ்வரி, பஞ்சு, வித்யா ஆகிய மகள்கள் உள்ளனர். இவர்கள் அவரது உடலைப்பார்த்து உறவினர்கள் கதறி அழுதது கல்மனதையும் கரைய வைத்தது.
இது குறித்து பழனி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பழனி அருகே உள்ள கோதைமங்கலத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 55). பழனி ஒன்றிய தி.மு.க. பிரமுகராக இருந்தார். இவருக்கு சொந்தமான தோட்டம் ஆவுடையார் கோவில் அருகே உள்ளது. இவர் தினசரி தோட்டத்தை பார்ப்பதற்காக அந்த பகுதியில் உள்ள தண்டவாளம் வழியாக நடந்து செல்வது வழக்கம்.
அதன்படி இன்று காலை கருப்பசாமி தண்டவாள பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் பாலக்காடு பகுதியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி ரெயில் வந்து கொண்டு இருந்தது. இதனை கருப்பசாமி கவனிக்கவில்லை. அப்போது எதிர்பாராதவிதமாக ரெயில் அவர் மீது மோதியது. இதில் அவர் உடல் துண்டாகி பலியானார்.
இறந்து போன கருப்பசாமிக்கு மனைவி ஈஸ்வரி, பஞ்சு, வித்யா ஆகிய மகள்கள் உள்ளனர். இவர்கள் அவரது உடலைப்பார்த்து உறவினர்கள் கதறி அழுதது கல்மனதையும் கரைய வைத்தது.
இது குறித்து பழனி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X