என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸ் மறுப்பு - ராஜீவ் சுக்லா
Byமாலை மலர்11 April 2018 3:27 PM GMT (Updated: 11 April 2018 3:27 PM GMT)
சென்னையில் நடக்க உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு தமிழக போலீசார் பாதுகாப்பு தர மறுப்பதால் போட்டிகளை இடமாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதாக ஐபிஎல் அமைப்பின் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். #IPL
புதுடெல்லி:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை - கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியானது கடும் போராட்டங்களுக்கு இடையே நடத்தப்பட்டது.
தமிழ் அமைப்புகள், சினிமா பிரபலங்கள் என சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி போராட்டங்கள் நடந்தன. போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் போலீஸ் தடியடி நடத்தினர். இந்நிலையில், சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த மீதமுள்ள 6 போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதற்கேற்ப நாளை நடக்க இருந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம் அல்லது புனே ஆகிய மைதானங்கள் பரிசீலனையில் இருந்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சென்னையில் நடக்க உள்ள போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழக போலீசார் மறுத்து விட்டதால் போட்டிகள் வேறு மாநிலத்திற்கு மாற்ற ஆலோசித்து வருகிறோம் என ஐபிஎல் அமைப்பின் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
விரைவில் புதிய மைதானம் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார். #IPL #Chennai #TamilNews
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை - கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியானது கடும் போராட்டங்களுக்கு இடையே நடத்தப்பட்டது.
தமிழ் அமைப்புகள், சினிமா பிரபலங்கள் என சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி போராட்டங்கள் நடந்தன. போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் போலீஸ் தடியடி நடத்தினர். இந்நிலையில், சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த மீதமுள்ள 6 போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதற்கேற்ப நாளை நடக்க இருந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம் அல்லது புனே ஆகிய மைதானங்கள் பரிசீலனையில் இருந்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சென்னையில் நடக்க உள்ள போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழக போலீசார் மறுத்து விட்டதால் போட்டிகள் வேறு மாநிலத்திற்கு மாற்ற ஆலோசித்து வருகிறோம் என ஐபிஎல் அமைப்பின் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
விரைவில் புதிய மைதானம் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார். #IPL #Chennai #TamilNews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X