என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 18-ம் தேதி சட்டசபை தேர்தல்: மேகாலயா, நாகலாந்தில் பிப்.27-ல் வாக்குப்பதிவு
Byமாலை மலர்18 Jan 2018 7:09 AM GMT (Updated: 18 Jan 2018 8:28 AM GMT)
திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 18-ம் தேதியும், மேகாலயா மற்றும் நாகலாந்தில் பிப்ரவரி 27-ம் தேதியும் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #Election #AssemblyElection #Tripura #Meghalaya #Nagaland
புதுடெல்லி:
மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளதால் இன்று முதல் அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.
திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 18-ம் தேதியும், மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ம் தேதியும் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். மூன்று மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 3-ம்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூன்று மாநிலங்களிலும் தலா 60 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. மேகாலயாவில் காங்கிரசும், திரிபுராவில் இடதுமுன்னணியும், நாகலாந்தில் பா.ஜ.க. கூட்டணியுடன் நாகா மக்கள் முன்னணியும் ஆட்சியில் உள்ளன.
இந்த தேர்தலை மையப்படுத்தி பா.ஜ.க. தலைவர்கள் சமீப காலமாக வடமாநிலங்களில் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். வடகிழக்கு பிராந்தியத்தில் தங்கள் கட்சியை வலிமைப்படுத்தும் வகையில் காங்கிரசும் களப்பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. #Election #AssemblyElection #Tripura #Meghalaya #Nagaland
மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளதால் இன்று முதல் அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.
திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 18-ம் தேதியும், மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ம் தேதியும் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். மூன்று மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 3-ம்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூன்று மாநிலங்களிலும் தலா 60 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. மேகாலயாவில் காங்கிரசும், திரிபுராவில் இடதுமுன்னணியும், நாகலாந்தில் பா.ஜ.க. கூட்டணியுடன் நாகா மக்கள் முன்னணியும் ஆட்சியில் உள்ளன.
இந்த தேர்தலை மையப்படுத்தி பா.ஜ.க. தலைவர்கள் சமீப காலமாக வடமாநிலங்களில் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். வடகிழக்கு பிராந்தியத்தில் தங்கள் கட்சியை வலிமைப்படுத்தும் வகையில் காங்கிரசும் களப்பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. #Election #AssemblyElection #Tripura #Meghalaya #Nagaland
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X