search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகலாந்து"

    நாகலாந்து மாநிலம் முழுவதையும் இடையூறு மிக்க பகுதியாக அறிவித்து அங்கு அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மத்திய அரசு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. #NagalandAFSPA #AFSPA
    புதுடெல்லி:

    பயங்கரவாதிகள் மற்றும் உள்நாட்டு போராளி குழுக்களின் நடமாட்டம் அதிகம் உள்ள ஜம்மு-காஷ்மீர் மற்றும் அசாம், மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரச்) சட்டம் அமலில் உள்ளது.

    போடோலாந்து, நக்சலைட், மாவோயிஸ்ட், நாகா விடுதலை முன்னணி ஆகிய அமைப்பினரின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளில் வன்முறையில் ஈடுபடுவோர் மற்றும் பொதுச் சொத்துகளை நாசப்படுத்துவோரை உடனடியாக கைது செய்யவும், தேவை ஏற்படும்போது தற்காப்புக்காக சுட்டுக் கொல்லவும், சந்தேகத்துக்குரிய பகுதிகளில் முன் அனுமதியின்றி சோதனை நடத்தவும் துணை ராணுவம், போலீசாருக்கு இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது

    மேகாலயா மாநிலத்தில் அமலில் இருந்த ஆயுதப்படை (சிறப்பு அதிகாரச்) சட்டம் கடந்த 31-3-2018 முதல் முற்றிலுமாக வாபஸ் பெறப்பட்டது.



    இந்நிலையில், நாகலாந்து மாநிலம் முழுவதையும் இடையூறு மிக்க பகுதியாக அறிவித்து அங்கு பல ஆண்டுகளாக அமலில் உள்ள ஆயுதப்படை (சிறப்பு அதிகாரச்) சட்டத்தை மத்திய அரசு மேலும் 6 மாதங்களுக்கு  நீட்டித்துள்ளது.

    சமீபகாலமாக இம்மாநிலத்தில் நடைபெற்றுவரும் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் ஆகிய குற்றச்செயல்களை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு துணை புரிவதற்காக வரும் ஜூன் மாதம் 30-ம் தேதி வரை நாகலாந்து மாநிலத்தில் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரச்) சட்டம் நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #NagalandAFSPA #AFSPA
    நாகலாந்து மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல் மந்திரி ரியோவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். #NagalandFlood
    கொஹிமா:

    இந்தியா முழுவதும் இந்த ஆண்டு பருவமழை நன்கு பெய்து வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது.  

    கடந்த ஒரு மாதமாக நாகலாந்தில் பெய்து வரும் கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரை ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பிற்கு, 12 பேர் உயிரிழந்துள்ளனர். 800 கோடி ரூபாய் அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய அரசிடம் இருந்து 100 கோடி ரூபாய் நிதியுதவி வேண்டி நாகலாந்து முதல் மந்திரி நெய்பு ரியோ கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிலையில், நாகலாந்து மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல் மந்திரி ரியோவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், நாகலாந்தில் பெய்து வரும் கனமழை பாதிப்பு குறித்து முதல் மந்திரியிடம் கேட்டறிந்தேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாகலாந்து மக்களுக்கு தோளோடு தோள் நிற்போம்.  மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என பதிவிட்டுள்ளார். #NagalandFlood
    நாகலாந்து மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் நிவாரண நிதியாக முதல்மந்திரி ரியோ கோரியுள்ளார். #NagalandFlood
    கொஹிமா:

    இந்தியா முழுவதும் இந்த ஆண்டு பருவ மழை நன்கு பெய்து வருகிறது.  இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது.  

    இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக நாகாலாந்தில் பெய்து வரும் கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பிற்கு, 12 பேர் உயிரிழந்துள்ளனர். 800 கோடி ரூபாய் அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நாகலாந்து மாநிலத்திற்கு அண்டை மாநிலங்கள் நிதியுதவி அளித்து வருகின்றது.



    கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் போக்குவரத்து வசதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதிலும் அதிக சிக்கல் நிலவி வருகிறது.

    இதையடுத்து, முதற்கட்டமாக சாலைகளை சீரமைப்பதற்காக மத்திய அரசிடம் இருந்து 100 கோடி ரூபாய் நிதியுதவி வேண்டி நாகலாந்து முதல்மந்திரி கோரிக்கை விடுத்துள்ளார். 3 நாட்களுக்கு முன்பு இவர் நிவாரண உதவி கோரியிருந்த நிலையில் மத்திய அரசிடம் இருந்து எவ்வித நிவாரணமும் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட மிகப்பெரிய சேதத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரண உதவியாக நாகலாந்து அளித்தது குறிப்பிடத்தக்கது. #NagalandFlood
    நாகலாந்து மாநிலத்தின் தலைநகர் கோஹிமா பகுதியில் ரசாயனம் கலந்த ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #ChemicalMixedFish #Nagaland
    கோஹிமா:

    மீன்கள் விரைவில் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அதன் மீது பென்ஸோயேட் மற்றும் அம்மோனியா ஆகிய வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் வெளியானது. இந்த வகை வேதிப்பொருட்களால் உடலில் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் எனவும், இந்த வகை வேதிப்பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும் எனவும் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

    இதனை அடுத்து கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வேதிப்பொருட்கள் கலந்த மீன்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும், மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த வேதிப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிவுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், நாகலாந்து மாநிலத்தின் தலைநகரான கோஹிமாவில் உள்ள மீன்கடைகளில் சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் பல்வேறு கடைகளில் இருந்து மீன்கள் எடுத்து செல்லப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வில் மீன்களில் வேதிப்பொருட்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டு, சுமார் ஆயிரத்து 666 கிலோ எடை கொண்ட மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. மேலும், மீன்கள் இறக்குமதி செய்பவர்களிடமும் இந்த சோதனையை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #ChemicalMixedFish #Nagaland
    ×