search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ரசிகர்கள் மூலம் கேரளாவுக்கு ரூ.45 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பிய விஜய்
    X

    ரசிகர்கள் மூலம் கேரளாவுக்கு ரூ.45 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பிய விஜய்

    மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவ, தனது ரசிகர்கள் மூலம் நடிகர் விஜய் ரூ.45 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளார். #KeralaFloods #KeralaRains #Vijay
    கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் தனது ரசிகர்மன்ற பொறுப்பாளர்கள் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

    இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த தனது ரசிகர்மன்ற 15 மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் தலா ரூ.3 லட்சம் அனுப்பினார். இந்தப் பணத்தைக் கொண்டு முகாமில் தஞ்சமடைந்தவர்களுக்கும் மற்றும் பிற பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தேவையான நிவாரண பொருட்களை வாங்கித் தருமாறு கூறியுள்ளார்.

    இந்த நிவாரண பொருட்கள் தமிழ்நாட்டில் 15 மாவட்டத்திலிருந்து 15 லாரிகள் மூலமாக கேரளாவில் பாதிக்கப்பட்ட 12 மாவட்டத்திற்கு வழங்கப்படுகிறது.

    நிவாரண பொருட்கள் அடங்கிய லாரிகள் அனைத்தும் கேரளாவில் உள்ள எர்ணாகுளம், ஆலப்புழா, பத்தானம் திட்டா, பாலக்காடு மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டது.



    அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை மாவு, ரவை, மைதா, ஆடைகள், போர் வைகள், பெட் சீட், பால் பவுடர், நாப்கின்கள் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகளால் நேரடியாக வழங்கப்படுகிறது.

    கேரளாவில் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்குக்கும், விஜய் நிதி அனுப்பியுள்ளார். ரசிகர் மன்ற நிர்வாகிகள் கேரள வெள்ள நிவாரண முகாம்களைப் பார்வையிட்டு அங்கு தேவையான பொருட்களை வாங்கித் தருவதோடு, உதவிகளையும் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

    வரி விலக்கு பெறுவதற்காக பிரபலங்கள் வெள்ள நிவாரண நிதியை அரசிடம் முறைப்படி வழங்கி வருகிறார்கள்.

    ஆனால் அதை விரும்பாத விஜய் நேரடியாக ரசிகர்களுக்கு அனுப்பி அவர்கள் மூலம் உதவுவது குறிப்பிடத்தக்கது. #KeralaFloods #KeralaRains #Vijay
    Next Story
    ×