search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்பின் ஜாமீன் மனு ஏற்பு
    X

    கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்பின் ஜாமீன் மனு ஏற்பு

    நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப்பின் ஜாமீன் மனுவை ஏற்ற நீதிபதிகள் விசாரணை வியாழக்கிழமை நடைபெறும் என்று உத்தரவிட்டார்.
    பாவனா கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டு உள்ள நடிகர் திலீப் ஆலுவா ஜெயிலில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார். மூன்றுக்கும் மேற்பட்ட முறை ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை திலீப் தரப்பு நாடியிருக்கிறது.

    ஆனால், திலீப் தரப்பில் கொடுக்கப்பட்ட மனுக்கள் அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட திலீப்பை வருகிற ஜுலை 25-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



    இதற்கிடையில் நடிகர் திலீப் சார்பில் இன்று கேரள ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே அவரிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடந்து முடிந்துவிட்டதால் திலீப்புக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரது வக்கீல் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி, மனு குறித்த விசாரணை வியாழக்கிழமை நடைபெறும் என்று உத்தரவிட்டார்.

    Next Story
    ×