search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் காவல்"

    • 24 மணி நேரமும் மது குடித்துக் கொண்டே இருந்தேன்.
    • சிகிச்சைக்காக அனுமதிக்க கேட்டபோது மருத்துவ மனையில் சேர்க்க இயலாது என தெரிவித்து விட்டனர்.

    சென்னை:

    சென்னை பாரிமுனை கொத்தவால் சாவடியில் வீரபத்திரசாமி கோவிலில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான முரளி கிருஷ்ணன் போலீஸ் காவலில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். அதன் விவரம் வருமாறு:-

    மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில் மனரீதியாக மிகுந்த பிரச்சினைகள் இருந்ததால் மதுவிற்கு அடிமையாகி தினம்தோறும் குடித்து வருகிறேன். அடிக்கடி எனது காதில் வீட்டின் மேலே இருந்து குதித்து விடு, தற்கொலை செய்து கொள், எப்படி யாவது இறந்து விடு என ஒரு குரல் கேட்டுக் கொண்டே உள்ளது.

    அதனை மறக்க 24 மணி நேரமும் மது குடித்துக் கொண்டே இருந்தேன். இதுகுறித்து மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்க கேட்டபோது மருத்துவ மனையில் சேர்க்க இயலாது என தெரிவித்து விட்டனர்.

    எனக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு மருத்துவர்கள் உதவ முன்வராததால் உயிரிழந்து விடலாம் என பெட்ரோலை வாங்கி உதவி செய்யாத வீரபத்திரர் மீது வீசி விட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்தபோது கோவில் பூட்டி இருந்ததால் மறைத்து வைத்திருந்ததேன். மறுநாள் காலை பல நாட்களாக வழிபட்டு வரும் எனக்கு எந்த உதவியும் வீரபத்திரன் அளிக்கவில்லை என ஆத்திரத்தில் பீர் பாட்டிலை மது போதையில் இருந்த போது வீசிவிட்டு தற்கொலை செய்து கொள்ள நினைத்த போது அருகில் இருந்தவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்து விட்டனர்.

    இவ்வாறு வாக்கு மூலம் அளித்துள்ளான்.

    • பெட்ரோல் குண்டை வீசியதாக கைதான முரளி கிருஷ்ணன் வாக்குமூலம் அளித்தார்.
    • போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்கிற சந்தேகம் ஏற்பட்டது.

    ராயபுரம்:

    சென்னை பாரிமுனை கொத்தவால்சாவடி கோவிந்தப்பன் நாயக்கன் தெரு சந்திப்பில் ஸ்ரீ வீரபத்ர சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் மீது கடந்த 10-ந்தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொத்தவால் சாவடி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சவுகார் பேட்டை ஆதியப்ப நாயக்கன் தெருவை சேர்ந்த வியாபாரி முரளி கிருஷ்ணா என்பவர் பெட்ரோல் குண்டுகளை வீசியது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பீர்பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி கோவில் மீது அவர் வீசியது தெரியவந்தது. தினமும் சாமி தரிசனம் செய்து வந்த போதிலும் எனக்கு கடவுள் அருள் தரவில்லை என்று கூறி பெட்ரோல் குண்டை வீசியதாக கைதான முரளி கிருஷ்ணன் வாக்குமூலம் அளித்தார்.

    இருப்பினும் போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்கிற சந்தேகம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து வியாபாரி முரளி கிருஷ்ணனை காவலில் எடுக்க முடிவு செய்தனர். இதன்படி கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இன்று 7 நாட்கள் காவலில் எடுத்தனர். பெட் ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    "கடவுள் எனக்கு அருள் தரவில்லை. அதனால் பெட்ரோல் குண்டை வீசினேன்" என்று முரளிகிருஷ்ணன் வாக்குமுலம் அளித்திருந்தாலும், வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்பது பற்றி விசாரணை நடத்துவதற்காகவே முரளி கிருஷ்ணனை காவலில் எடுத்துள்ளோம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவில்தான் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • பா.ஜக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் 22-ந் தேதி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.
    • இன்று கைதானவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    கோவை:

    கோவையில் பா.ஜ.க, இந்து முன்னணி நிர்வாகிகள் வீடுகள் மற்றும் கடைகள் சித்தாபுதூரில் உள்ள பா.ஜக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் 22-ந் தேதி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.

    தொடர்ந்து குனியமுத்தூர் மற்றும் டவுன்ஹால் பகுதியில் அரசு பஸ் கண்ணாடி கல் வீசி உடைக்கப்பட்டது. அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சம்பவங்கள் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியதோடு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் அரசு பஸ் கண்ணாடி உடைத்த வழக்கில் கோவை குனியமுத்தூர், ரத்தினபுரி மற்றும் வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைதானவர்கள் எஸ்டிபிஐ மற்றும் பி எப் ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டது. கைதானவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். எனவே இன்று கைதானவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும் பட்சத்தில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் மேலும் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது தெரியவரும்.

    • போலீஸ் காவலில் இருந்த வாலிபர் மர்மமாக இறந்தார்.
    • அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்ைடயை அடுத்த செம்பட்டியை சேர்ந்த வாலிபர் தங்க பாண்டியன். இவர் ஒரு வழக்கு தொடர்பாக கடந்த 13-ந்தேதி போலீசாரால் அழைத்து செல்லப்பட்டார்.

    அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட தால் அவரை ஆஸ்பத்திரி யில் அனுமதித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தங்க பாண்டியன் இறந்து விட்டார். அவரை போலீ சார் அடித்து கொன்று விட்டதாக தெரிவித்து அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி அறிந்த மதுரை டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மனோகரன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து தங்கபாண்டியன் உடல் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரி சோதனை செய்யப்பட்டது.

    அதன் பின்னர் உற வினர்கள் தங்கபாண்டியன் உடலை வாங்க மறுத்து அவரது உடல் பாகங்களை மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அதனை ஏற்று அவ ரது உடல் பாகங்கள் எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி நீதிமன்ற காவலில் உள்ள கருணாஸ் மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். #Karunas
    சென்னை:

    முதல்வர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ கருணாஸ் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த 23-ம் தேதி காலை அவரை கைது செய்தனர். 3 மணி நேர விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை அடுத்த மாதம் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனை அடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே, கருணாசை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக்கோரி போலீசார் எழும்பூர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில், ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களை தாக்கிய வழக்கு உள்பட 2 வழக்குகளில் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் நாளை அவர் சிறையில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைதான எம்.எல்.ஏ கருணாசை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக்கோரி போலீசார் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #Karunas
    சென்னை:

    முதல்வர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ கருணாஸ் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த 23-ம் தேதி காலை அவரை கைது செய்தனர். 

    3 மணி நேர விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை அடுத்த மாதம் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனை அடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே, கருணாசை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக்கோரி போலீசார் எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்நிலையில், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீசாரின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

    கருணாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு நாளை விசாரிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார்.
    ×