search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "main culprit"

    • சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. வேனை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.
    • மூட்டை மூட்டைகளாக பதுக்கி கடத்தி சென்றதை போலீ சார் கண்டுபிடித்தனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடியில் சத்தியமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து வெங்காய லோடு களை ஏற்றுக் கொண்டு சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. வேனை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது வேனில் இருந்தவர்கள் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் லிங்கையாத்தார் தெருவை சேர்ந்த மகேந்திரன்(32) சாம்ராஜ் நகர் பண்டிகரையை சேர்ந்த பிரமோத் (22) ஆகியோர் வேன் டிரைவர், கிளீனராக இருந்தது தெரிய வந்தது.

    பின்னர் வேனில் ஏறி சோதனை செய்த போது வெங்காய லோடுகள் அடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டைகளாக பதுக்கி கடத்தி சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    விமல் பாக்கு 30 சாக்கு மூட்டைகள், பான் மசாலா 30 சாக்கு மூட்டைகள், ஹான்ஸ் 15 சாக்கு மூட்டைகள், கூலிப்பு இரண்டு மூட்டைகள் என மொத்தம் 82 மூட்டைகளில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து மகேந்திரன், பிரோமோத்தை சத்திய மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது கர்நாடக மாநிலம் மைசூர் ஆர். எம். சி. பண்டிபாளையத்தை சேர்ந்த பவன் (25) என தெரிய வந்தது. அவர் சொல்லி தான் மேட்டு ப்பாளையத்தில் உள்ள வியாபாரிகளுக்கு சரக்கு வேனில் புகையிலை பொருட்கள் கடத்தி செல்ல ப்பட்டதாக இருவரும் தெரிவித்தனர்.

    இதனையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தலைமுறைவாக இருக்கும் முக்கிய குற்ற வாளியான பவனை பிடிக்க சத்தியமங்கலம் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். பவன் பிடிபட்டால்தான் புகையிலை கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தெரிய வரும் என போலீசார் தெரி வித்தனர்.

    தூத்துக்குடி நடந்த கொடை விழாவில் வாலிபர் குத்திகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை பிடிக்க போலீசார் தேடி வருகிறார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி 3 சென்ட் பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் முத்து இருளப்பன் என்ற அஜித்குமார் (வயது 21) கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஊருக்கு வந்தார். சம்பவத்தன்று அவர் அந்த பகுதியில் நடந்த கோவில் கொடை விழாவிற்கு சென்று விட்டு, ராஜபாண்டிநகர் கெபி அருகே வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சங்கர், அவருடைய மகன் பாரதி (23), அவரின் நண்பர்கள் மோகன், நாகராஜ் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் அஜித்குமார் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் சங்கர், பாரதி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் சங்கர், பாரதியின் நண்பர் நாகராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அஜித்குமாரை வாளால் குத்தி விட்டு உயிருக்கு போராடி கொண்டு இருந்த அவரை, அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே போட்டு விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

    அஜித்குமார் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பாரதி மற்றும் நண்பர் மோகன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 2 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    புதுவை ஏ.டி.எம். மோசடியில் முக்கிய குற்றவாளியான சந்துருஜியை மும்பையில் போலீசார் கைது செய்தனர். அவரை புதுவை அழைத்து வருவதற்காக கூடுதல் படை மும்பை விரைந்துள்ளது. #ATMscam
    புதுச்சேரி:

    புதுவையில் போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து நாடு முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

    என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் சத்யா, அ.தி.மு.க. பிரமுகர் சந்துருஜியின் தம்பி மணிசந்தர் உள்பட இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதில், முக்கிய குற்றவாளியான சந்துருஜி மும்பையில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தனிப்படையினர் மும்பை விரைந்தனர்.

    அவர்கள் சந்துருஜியை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். அவரிடம் அங்குள்ள ஓட்டலில் வைத்து விசாரித்து வருகின்றனர். அவரை புதுவை கொண்டு வருவதற்காக கூடுதல் படை மும்பை விரைந்துள்ளது.

    ஏ.டி.எம். மோசடியில் புதுவையை சேர்ந்த வங்கி அதிகாரிகள் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    ஏனென்றால், ஏ.டி.எம். மோசடி கும்பல் போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து அந்த கார்டுகளை கடைகளில் பயன்படுத்தும் ஸ்வைப்பிங் எந்திரத்தில் தேய்த்து தங்கள் வங்கி கணக்குக்கு பணத்தை மாற்றி உள்ளனர்.

    இதற்காக 50-க்கும் மேற்பட்ட ஸ்வைப்பிங் எந்திரங்களை சொந்தமாக வாங்கி பயன்படுத்தி உள்ளனர். இந்த ஸ்வைப்பிங் எந்திரங்களை யாரும் எளிதாக வாங்கி விட முடியாது.

    ஸ்வைப்பிங் எந்திரம் தேவைப்படுவோர் வங்கிகளில் கரண்ட் அக்கவுண்ட் வைத்திருக்க வேண்டும். அவர்கள் எந்த நிறுவனம் நடத்துகிறோம் என்ற தகவலை தெரிவிக்க வேண்டும். அதனுடைய வர்த்தகம் பற்றிய விவரங்களையும், ஒரு நாளைக்கு எவ்வளவு வர்த்தகம் நடைபெறும் என்ற விவரங்களையும் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும்.

    அவர்களுக்கு ஸ்வைப்பிங் எந்திரம் கண்டிப்பாக தேவை என வங்கி முடிவு செய்தால் தான் ஸ்வைப்பிங் எந்திரத்தை வழங்கும். அதிலும் ஒன்று அல்லது இரண்டு ஸ்வைப்பிங் எந்திரங்கள் மட்டும்தான் வழங்கப்படும். மிகப்பெரிய வர்த்தக நிறுவனமாக இருந்தால் பல ஸ்வைப்பிங் எந்திரங்களை வாங்கி கொள்ளலாம்.

    இந்த விதிமுறைகளை மீறி யாருக்கும் ஸ்வைப்பிங் எந்திரங்களை வழங்காது. ஆனால், புதுவை ஏ.டி.எம். மோசடி கும்பல் எந்த வர்த்தகமும் செய்யாமலே 50-க்கும் மேற்பட்ட ஸ்வைப்பிங் எந்திரங்களை வாங்கி இருக்கிறார்கள்.

    இதில், ஒரு கம்ப்யூட்டர் சென்டருக்கு மட்டுமே 19 ஸ்வைப்பிங் எந்திரங்களை வங்கி வழங்கி உள்ளனர். பொதுவாக கம்ப்யூட்டர் சென்டரில் புரவுசிங் செய்வோர்கள் 10 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரை இண்டர்நெட் பயன்படுத்துவார்கள்.

    இது, மிக குறைவான தொகை என்பதால் அவர்கள் நிச்சயமாக ஸ்வைப்பிங் எந்திரத்தில் பணம் செலுத்த மாட்டார்கள். எனவே, கம்ப்யூட்டர் சென்டருக்கு ஸ்வைப்பிங் எந்திரமே தேவையில்லை.

    அப்படி தேவை என்றாலும் கூட ஒன்று அல்லது இரண்டு ஸ்வைப்பிங் எந்திரம் வழங்கி இருக்கலாம். ஆனால், 19 எந்திரம் வழங்கி இருப்பதால் இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

    அங்கு மோசடி நடப்பது தெரிந்தே வங்கி அதிகாரிகள் தாராளமாக ஸ்வைப்பிங் எந்திரங்களை வழங்கி இருக்கிறார்கள். அதாவது, வங்கி அதிகாரிகளும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

    அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஸ்வைப்பிங் எந்திரத்தில் பெரும்பாலானவை தனியார் வங்கிகளில் இருந்தே பெறப்பட்டுள்ளது.

    எனவே, தனியார் வங்கி அதிகாரிகள் பலர் இதில் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.



    ஸ்வைப்பிங் எந்திரம் வாங்குவதற்குள்ள கட்டுப்பாடுகள் குறித்து வங்கி மேலாளர் ஒருவர் கூறியதாவது:-

    ஒரு வர்த்தக நிறுவனம் ஸ்வைப்பிங் எந்திரம் வாங்க வேண்டும் என்றால் முறைப்படி எங்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் வியாபாரம் தொடர்பான பல விவரங்களை விண்ணப்பத்தில் நாங்கள் கேட்டு இருப்போம். அதில் அனைத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.

    அவர்கள் குறிப்பிட்ட விவரங்கள் சரியாக இருக்கிறதா? என்பது குறித்து எங்களுடைய வங்கி கள அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்வார்கள். அது சரியாக இருந்தால் மட்டும்தான் ஸ்வைப்பிங் எந்திரம் வழங்கப்படும்.

    ஒன்றிரண்டு எந்திரங்களுக்கு மேல் வழங்க மாட்டோம். அதற்கு மேல் தேவைப்பட்டால் அந்நிறுவனம் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமாக இருக்க வேண்டும். அதற்கான விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.

    ஸ்வைப்பிங் எந்திரம் மூலம் தினமும் எவ்வளவு வர்த்தகம் நடைபெறும் என்பதையும் நாங்கள் கண்காணிப்போம். திடீரென அதிக பணம் பரிமாற்றம் இருந்தாலும் நாங்கள் அது பற்றி ஆய்வு செய்வோம்.

    எனவே, ஸ்வைப்பிங் எந்திரத்தை தவறாக பயன் படுத்துவதற்கு வாய்ப்பு இல்லாமலேயே வங்கிகள் எல்லா நடைமுறைகளையும் பின்பற்றும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் ஒரு நபர் வங்கியில் கணக்கு வைத்திருந்தால் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தாலே வருமான வரித்துறைக்கும், மற்ற அரசு புலனாய்வு துறைகளுக்கும் வங்கியில் இருந்து தகவல் சென்று விடும்.

    ஏ.டி.எம். மோசடியில் ஈடுபட்ட நபர்கள் வங்கி கணக்குக்கு திடீரென கோடிக்கணக்கில் பணம் வந்துள்ளது. அதுபற்றிய தகவல்களை வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகளுக்கு வங்கி அதிகாரிகள் சரியாக தெரிவித்தார்களா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

    2017-ம் ஆண்டு பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட போது, அறிமுகம் செய்யப்பட்ட ரூ.2 ஆயிரம் நோட்டை வங்கிகளில் இருந்து எடுப்பதற்கு பல கட்டுப்பாடுகள் இருந்தன. ரூ. 4 ஆயிரத்து மேல் யாரும் பணம் எடுக்க முடியாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தன.

    ஆனால், அந்த நேரத்தில் இந்த மோசடி கும்பலிடம் தாராளமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டு புழங்கி உள்ளது. மேலும் ரூ.500, ரூ. 1000 நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த பல நபர்கள் இந்த மோசடி கும்பல் மூலம் ரூ. 2 ஆயிரமாக மாற்றி இருக்கிறார்கள்.

    இவர்களுக்கு மட்டும் ரூ. 2 ஆயிரம் எப்படி கிடைத்தது? என்பதிலும் மர்மம் நிலவுகிறது. இதிலும் வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருந்து அவர்களுக்கு உதவி இருக்கலாம் என கருதப்படுகிறது.

    இதனால் வங்கி அதிகாரிகளுக்கும், மோசடி கும்பலுக்கும் இருந்த தொடர்பு குறித்து போலீசார் இப்போது விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். இதில் வங்கி அதிகாரிகள் பலர் சிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. #ATMscam
    ×