என் மலர்tooltip icon
    • நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்
    • தூய்மையான கடற்கரை அனைவரின் பொறுப்பு எனவும் தெரிவிப்பு

    மெரினா உள்ளிட்ட பிற கடற்கரைகளில் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

    இது தொடர்பாக சென்னி மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், "சென்னையின் பெருமையாகவும், சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகை தரும் முக்கிய சுற்றுலாதலமாகவும் விளங்கும் மெரினா கடற்கரை, சென்னை மாநகரின் அடையாளமாகத் திகழ்கிறது. மெரினா கடற்கரையை சர்வதேசதரத்தில் மேம்படுத்தி பாதுகாத்திட பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மெரினா கடற்கரையை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிப்பது அனைவரின் பொது பொறுப்பாகும். திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016 (Solid Waste Management Rules, 2016)ன்படி, பொது இடங்கள் மற்றும் கடற்கரைகளில் குப்பைகள், பிளாஸ்டிக்கழிவுகள், உணவுப் பொருள் எச்சங்கள் உள்ளிட்ட எந்தவிதமான கழிவுகளையும் கொட்டுவது சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது.

    பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பாக, மெரினா கடற்கரையின் தூய்மையை உறுதி செய்வதற்காக Chennai Enviro Solutions Pvt. Ltd (SPV) என்ற தனியார் நிறுவனம் மூலம் கடற்கரை மணற்பரப்பை சுத்தம் செய்யும் 7 இயந்திரங்கள் (Beach Cleaning Machines) மற்றும் நாள்தோறும் சுழற்சி முறைகளில் மொத்தம் 274 தூய்மைப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு தொடர்ந்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளிலிருந்து மட்டும் நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றது.

    மேலும், பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை, திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் நாள்தோறும் சுழற்சி முறைகளில் மொத்தம் 53 தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணிக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    இத்தனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், பொதுமக்களின் போதியஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால், கடற்கரையில் பல இடங்களில் குப்பைகள் மற்றும் உணவுக்கழிவுகள் காணப்படுவதால் அழகற்றதாகவும், சுகாதார குறைபாடுகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. குறிப்பாக, கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் கழிவுகளை போடாமல், திறந்த வெளிகளில் வீசப்படுகிறது.

    இதன் காரணமாக சென்னையில் அமைந்துள்ள மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரையின் அழகும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதோடு, உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே சென்னை நகரின் நற்பெயருக்கும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.

    எதிர்வரும் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் அமைந்துள்ள மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரைகளுக்கு பெருமளவில் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையின் போது, அனைவரும் பொறுப்புனர்வோடு குப்பை கழிவுகளை அதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் மட்டும் போட்டு, மாநகராட்சியின் தூய்மை பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இதனை மீறி சென்னையில் அமைந்துள்ள மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரையில் குப்பை கொட்டுபவர்கள் மீது உரிய சட்ட விதிகளின் படி ரூ.5,000/– அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதும் இதன்மூலம் கடுமையாக எச்சரிக்கப்படுகிறது. தூய்மையான கடற்கரை – சுகாதாரமான சென்னை – அனைவரின் பொறுப்பு" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தனது மனைவி தனது அனுமதியின்றி 14 வாரக் கருவைக் கலைத்துவிட்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
    • சம்மனை எதிர்த்து அந்தப் பெண் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

    கர்ப்பத்தைத் தொடரக் கட்டாயப்படுத்துவது பெண்ணின் உரிமையைப் பறிக்கும் செயல் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    பிரிந்து வாழும் கணவர் ஒருவர், தனது மனைவி தனது அனுமதியின்றி 14 வாரக் கருவைக் கலைத்துவிட்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

    கருக்கலைப்பு சட்டத்தின் பிரிவு 312-ன் கீழ் அந்தப் பெண் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரினார்.

    இது தொடர்பாக அந்தப் பெண்ணிற்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்தச் சம்மனை எதிர்த்து அந்தப் பெண் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

    இதை விசாரித்த நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா, ஒரு பெண் தனது கர்ப்பத்தைத் தொடர விரும்பாதபோது, அவரை அதற்காகக் கட்டாயப்படுத்துவது அவரது உடல் மீதான உரிமையை பறிப்பதாகும்.

    இது பெண்ணை மன ரீதியான பாதிக்கும். மற்றவர்களின் உதவியின்றி குழந்தையைத் தனியாக வளர்க்கும் பொறுப்பு பெண்ணின் மீதே விழுகிறது. சட்டபூர்வமாக செய்யும் கருக்கலைப்பு குற்றமாகாது. 

    எனவே, கருக்கலைப்பு குறித்து முடிவெடுக்கும் முழு உரிமை அந்தப் பெண்ணிற்கே உண்டு" என தெரிவித்து அவர் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    • பேந்தர் ஹப் என்பது உணவகத்துடன் கூடிய மனமகிழ் மன்றமாக உருவாக்கப்பட்டுள்ளது.
    • பிரமாண்ட திறப்பு விழாவில் ஷாருக்கானை காண ஏராளமான ரசிகர் கூட்டம் குவிந்தது.

    துபாய் தேராவில் ஜுவல் ஆப் கிரீக் வளாகத்தில் நிறுவப்பட்ட 'பேந்தர் ஹப் மற்றும் ஏ.டி.கே. ஸ்கொயர் உணவக திறப்பு விழா பிரமாண்டமாக நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

    துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கண்ணன் ரவி குழுமத்தின் (கே.ஆர்.ஜி) சார்பில் தேரா பகுதியில் உள்ள ஜுவல் ஆப் கிரீக் வளாகத்தில் 'பேந்தர் ஹப் மற்றும் ஏ.டி.கே. ஸ்கொயர் உணவகம் நிறுவப்பட்டது. பேந்தர் ஹப் என்பது உணவகத்துடன் கூடிய மனமகிழ் மன்றமாக உருவாக்கப்பட்டுள்ளது.

    அதேபோல ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் உணவு வகைகளை வழங்கும் விதமாக ஏ.டி.கே. ஸ்கொயர் என்ற பெயரில் உணகவமும் நிறுவப்பட்டது.

     

    இந்த பேந்தர் ஹப் மற்றும் ஏ.டி.கே. ஸ்கொயர் உணவகத்தை திறந்து வைக்க பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வருகை புரிந்தார்.

    அவரை கே.ஆர் குழுமத்தின் தலைவர் கண்ணன் ரவி மற்றும் பராக் ரெஸ்டாரண்ட் மேலாண்மை இயக்குனர் தீபக் ரவி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

     பிறகு அந்த நிறுவனங்களை நடிகர் ஷாருக்கான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பிரமாண்ட திறப்பு விழாவில் அவரை காண ஏராளமான ரசிகர் கூட்டம் குவிந்தது.

    தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் சுவீடன் நாட்டை சேர்ந்த பிரபல மேஜிக் நிபுணர் ஜோ லேபரோவின் நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    அவருடன் கனடாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி நடிகையும், நடனக்கலைஞருமான நோரா பத்தேஹி கலந்துகொண்டு ரசிகர்களை மகிழ்வித்தார்.

     

    தொடர்ந்து 2-வது நாளும் அந்த வளாகத்தில் திறப்பு விழா நிகழ்ச்சிகள் தொடர்ந்தது. இதில் குஷ்பு, ரோஜா, ஆர்.கே செல்வமணி, ஜெய், ஜெயப்பிரகாஷ், லைக்கா சுபாஸ்கரன், யுவன் சங்கர் ராஜா, மிர்ச்சி சிவா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, சித்ரா லட்சுமணன், சுப்பு பஞ்சு, வைபவ், அஜய் ராஜ், ராஜீவ் கோவிந்தன், மாதம்பட்டி ரங்கராஜ், அரவிந்த் ஆகாஷ் மற்றும் வழக்கறிஞர் விஜயன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரபலங்கள் வருகை புரிந்திருந்தனர்.

    • தமிழ் மொழி மட்டுமே அனைவரையும் ஒன்றாக இணைக்கும் பாலம்.
    • ஒன்றாக இணையாத எந்த இனமும் உலகில் வென்றதாக வரலாறு கிடையாது

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 'அயலக தமிழர் தினம்' கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் பார்வைக்கு தொடங்கி வைத்தார்.

    உணவு, கலாச்சாரம், வணிகம், கைவினைப் பொருட்கள் மற்றும் தமிழ் இலக்கியம் சார்ந்த 252 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழ் மொழி மட்டுமே அனைவரையும் ஒன்றாக இணைக்கும் பாலம்

    தமிழ் மொழி யாரையும் வேறுபடுத்தி பார்க்காது, எந்த பேதமும் பார்க்காது

    ஒன்றாக இணையாத எந்த இனமும் உலகில் வென்றதாக வரலாறு கிடையாது

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 35 இடங்களைக் குறிவைத்து 90-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
    • மொத்தம் 20 விமானங்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டன.

    சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளின் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்குறிவைத்து அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த டிசம்பர் 13-ம் தேதி ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

    அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 35 இடங்களைக் குறிவைத்து 90-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. மொத்தம் 20 விமானங்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டன.

    இந்தத் தாக்குதல்கள் சிரியாவின் எந்தப் பகுதியில் நடத்தப்பட்டது அல்லது இதில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற  விவரங்களை அமெரிக்க ராணுவம் இன்னும் வெளியிடவில்லை.

    இருப்பினும், பயங்கரவாத மையங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.  

    • FIFA கால்பந்து கோப்பையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.
    • இந்த கோப்பை 3 நாட்கள் இந்தியாவில் இருக்க உள்ளது

    உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.

    இந்நிலையில், உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக FIFA உலகக்கோப்பை இந்தியாவிற்கு வந்துள்ளது. இந்தியாவில் FIFA கால்பந்து கோப்பையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.

    உலகக் கோப்பை வென்ற முன்னாள் பிரேசில் வீரரும் ஃபிஃபா ஜாம்பவானுமான கில்பர்டோ டி'சில்வா மற்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா ஆகியோர் முன்னிலையில் நடந்த விழாவில் கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது.

    உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்த கோப்பை 3 நாட்கள் இந்தியாவில் இருக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ஈரானில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
    • ஒரே இரவில் 70 பேரின் உடல்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் மக்களின் போராட்டங்கள் 2-வது வாரத்தை எட்டி உள்ளது. ஈரான் முழுவதும் போராட்டம் பரவி தீவிரமடைந்துள்ளது. சாலைகளில் ஆயிரகணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்புகிறார்கள்.

    போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதில் ஏற்பட்ட மோதல்களால் வன்முறை வெடித்தது. வாகனங்கள், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் ஈரானில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. ஆனாலும் போராட்டம் கட்டுக்குள் வராமல் தீவிரமடைந்து உள்ளது.

    இந்தநிலையில் ஈரானில் போராட்டம்-வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 116-ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. 2600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே தலைநகர் தெக்ரானில் போராட்டங்களில் காயம் அடைந்தவர்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. முதலுதவி செய்வதற்குக்கூட நேரம் இல்லை என்ற மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர். ரஷ்டில் உள்ள பூர்சினா மருத்துவமனைக்கு ஒரே இரவில் 70 பேரின் உடல்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே போராட்டக்காரர்களுக்கு ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதுதொடர்பாக ஈரானின் அட்டர்னி ஜெனரல் முகமது மொவஹேதி ஆசாத் கூறும்போது, போராட்டத்தில் பங்கேற்கும் எவரும் கடவுளின் எதிரி என்று கருதப்படுவார்கள். அது மரண தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவித்து உள்ளார்.

    மேலும் ஈரான் அரசு தொலைக்காட்சியில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கலவரக்காரர்களுக்கு உதவியவர்கள் கூட இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ள நேரிடும். வக்கீல்கள் கவனமாகவும் தாமதமின்றியும் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்து, தேசத் துரோகம் மற்றும் பாதுகாப்பின்மையை உருவாக்கி, நாட்டின் மீது வெளிநாட்டு ஆதிக்கத்தை நாடுபவர்களுக்கு எதிராக விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்.

    நடவடிக்கைகள் எந்தவித மென்மை, கருணை அல்லது சலுகையும் இன்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஈரானில் போராட்டங்களை அமெரிக்கா தூண்டிவிடுவதாக ஈரான் உச்சதலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றம்சாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினால் ஈரான் விவகாரத்தில் தலையிடுவோம் என்றும் ஈரான் மக்களுக்கு துணை நிற்போம் என்றும் அமெரிக்கா தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் ஈரானில் போராட்டக்காரர்களுக்கு உதவ தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    ஈரான் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் சுதந்திரத்தை நோக்கியுள்ளது. அதற்கு அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

    மேலும், ஈரானுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை விடுத்த எச்சரிக்கையில், அதிபர் டிரம்ப்புடன் விளையாட வேண்டாம். அவர் ஒன்றைச் செய்வேன் என்று சொன்னால், அதை அவர் நிச்சயமாகச் செய்வார் என்று தெரிவித்து உள்ளது.

    இதற்கிடையே ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான ராணுவத் திட்டங்கள் டிரம்ப்பிடம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் அவர் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் அமெரிக்க ஊட கங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

    • மேஷம் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும் வாரம்.
    • கன்னி உற்சாகம் பொங்கும் மகிழ்ச்சியான வாரம்.

    மேஷம்

    எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் வார இறுதியில் உச்சம் பெற்று ராசியை தனது 4ம் பார்வையால் பார்க்கிறார். இதனால் குடும்பத்தில் நிம்மதி கூடும். சாதிக்கும் எண்ணம் மேலோங்கும். நீண்டநாளாக தீராத, தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். தலைமைப்பதவி தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு தகுதிக்கும், திறமைக்கும் தகுந்த வேலை கிடைக்கும். விவேகமாக சிந்தித்து தொழிலை வளப்படுத்துவீர்கள். எதையும் எதிர்கொண்டு லாபகரமான நிலையை அடையப் போகிறீர்கள் தேக ஆரோக்கியத்தில் தெளிவும், சுகமும் ஏற்படும்.உயர் கல்வியால் மேன்மை உண்டாகும். கல்லூரி அரியர்ஸ் பாடத்தை எழுதி முடிக்க ஏற்ற காலம். 13.1.2026 அன்று மாலை 5.21 முதல்16.1.2026 மாலை 5.48 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்தவொரு செயலிலும் யோசித்து செயல்பட்டால் பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.சிக்கனத்துடன் செயல்பட்டால் விரயங்களை தவிர்க்க முடியும். முருகனை செவ்வரளி மலர்களால் அர்ச்சித்து வழிபட நினைத்தது நடக்கும்.

    ரிஷபம்

    முன்னேற்றமான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தை நோக்கி செல்கிறார். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும். எதிர்பார்த்த வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலருக்கு வீடு மாற்றம் வேலை மாற்றம் செய்ய வேண்டிய சூழல் வரலாம். எதிர்பார்த்த வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தந்தை மகன் உறவில் பாசமும் மனநிறைவும் உண்டாகும். குல தெய்வ அருளால் பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளும், சிக்கல்களும் தீரும். சவுக்கியமும், சுகமும், நோய் நிவர்த்தியும் உண்டாகும். திருமணயோகம் கை கூடி வரும்.16.1.2026 மாலை 5.48 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் ஆடம்பர செலவு களை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பதுடன் ஓய்வு நேரம் குறையும். அலைச்சல் மிகுந்த பயணங்களைத் தள்ளி வைப்பது நல்லது. நெய் தீபம் ஏற்றி அம்பிகையை வழிபடுவது நல்லது.

    மிதுனம்

    குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும் வாரம். ராசி அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெறுகிறார். வார இறுதி நாளில் அஷ்டம ஸ்தானம் செல்கிறார். உங்கள் செயலில் ஆற்றலும், வேகமும் கூடும். முக்கிய கடமைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். உடலிலும் மனதிலும் புதிய தெம்பு , உற்சாகம் பிறக்கும்.மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். சிலர் பயன்படாத சொத்துக்களை விற்று லாபம் பார்க்கலாம். தன யோகம் சிறப்பாக அமையும். சமூக அந்தஸ்து அதிகரிக்கும். குடும்பத்தில் சுபமங்கள விரயச் செலவு உண்டாகும். திருமண முயற்சி விரைவில் நிறைவேறும். பெண்கள் புதிய ஏலச் சீட்டு தொடங்குவார்கள். குழந்தைப்பேறு உண்டாகும். நண்பர்கள், உடன் பிறந்தோர் நட்பும், நல்லுறவும் ஏற்படும்.தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் சீராகும். குல தெய்வத்தின் அருள் கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். கணவன், மனைவியிடம் நல்ல புரிதல் உண்டாகும். புதன்கிழமை கருடாழ்வாரை வழிபடவும்.

    கடகம்

    மகிழ்ச்சியான வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் சமசப்தம ஸ்தானத்தில் நின்று ராசியை பார்க்கிறார். உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். பொருளாதாரம் உயர்வதோடு, குடும்பத்தில் அமைதியும், நிம்மதியும் ஏற்படும். ஆரோக்கியம், தொழில், கல்வி உத்தியோகம் போன்றவற்றில் நிலவிய தடை, பிரச்சனைகள் சீராகும். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள், மூத்த சகோதரர் வகையில் ஆதரவும், அன்பும் கிடைக்கும். தந்தை வழி உறவு மேம்படும். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். பிரிந்த தம்பதிகள் அல்லது பிரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற தம்பதிகள் இடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். கொடுக்கல், வாங்கல் சீராகும். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். இழுபறியாக இருந்த வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும்.வாழ்க்கைத் துணையால் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டு. ஸ்ரீ காலபைரவரை வழிபடவும்.

    சிம்மம்

    தேவையற்ற கடனை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் 6ம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். விரக்தி மனப்பான்மை அதிகமாகும். ஆனால் குருவின் பார்வைபட்ட இடங்கள் பல மாற்றத்தையும் ஏற்றத்தையும் தரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. எந்தக்கை உங்களை விட்டாலும் நம்பிக்கையை விடாமல் இருப்பது முக்கியம். புதிய முதலீடுகளை தவிர்த்தல் நலம். பார்க்கும் வேலையை மாற்றக்கூடாது. சிலருக்கு அசையாச் சொத்து, பிள்ளைகளின் திருமணம், கல்வி போன்ற சுப விரயம் உண்டாகும். திறமையான வேலையாட்கள் இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். தன லாப அதிபதி புதனால் பணப் புழக்கம் சரளமாக இருக்கும். சீட்டு, ரேஸ், பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். சில தம்பதிகள் தொழில் அல்லது உத்தியோகத்திற்காக பிரிந்து வாழலாம். பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டாகும். ஆரோக்கியம் அதிகரிக்கும். படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபடவும்.

    கன்னி

    உற்சாகம் பொங்கும் மகிழ்ச்சியான வாரம்.ராசி அதிபதி புதன் 4,7ம் அதிபதி குருவுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். தனித் திறமையை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். தாய் அன்பும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் கிடைக்கும். சிலர் சொந்த வீட்டில் இருந்து மன மாற்றத்திற்காக வாடகை வீடு செல்லலாம். அரசு ஊழியர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு, சிறப்பு சலுகைகள் கிடைக்கும். திருமணத்தடை அகலும். சிலருக்கு மறுமண யோகம் உண்டாகும். கண், காது, மூக்கு தொடர்பான உபாதைகள் வைத்தியத்தில் சீராகும். சொத்து தொடர்பான செயல்களில் இடைத் தரகர்களை நம்பி பணம் கொடுப்பதை தவிர்க்கவும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். பெண்களுக்கு தாய் வழிச் சீதனம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிரிகளின் பலம் குறையும். கருடாழ்வாரை வழிபட நிரந்தரமான முன்னேற்றம் உண்டாகும்.

    துலாம்

    நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் வாரம்.ராசி அதிபதி சுக்கிரன் லாப அதிபதி சூரியனுடன் இணைந்து சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பல்வேறு வளமான பலன்களை அடையும் யோகம் உள்ளது. வாழ்வில் மறக்க முடியாத இனிய நல்ல சம்பவங்கள் நடைபெறும். கடந்த கால நெருக்கடிகள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகளும் அதற்கான உதவிகளும் கிடைக்கும். வீடு, தோட்டம் என அசையாச் சொத்துக்களின் சேர்க்கை மனதை மகிழ்விக்கும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் மறுமுதலீடாக மாறும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். தொழிலில், உத்தியோகத்தில் நிலவிய பிரச்சினைகள் குறையும். அரசு வழி ஆதரவு கிடைக்கும். சகோதர, சகோதரியால் ஆதாயம் உண்டு. பெண்களுக்கு புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு தொழில் ரீதியாகவோ, வேறு காரணத்திற்காகவோ வெளியூர், வெளிநாடு செல்ல நேரும். புதிய சொத்துக்கள் வாங்க ஏற்ற காலம். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும். அடமானப் பொருட்களை மீட்க தேவையான பணம் கிடைக்கும்.

    விருச்சிகம்

    தன்னம்பிக்கையான வாரம். ராசி அதிபதி செவ்வாய் மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்தில் உச்சம் அடைகிறார்.ஜாதகரின் முயற்சி எளிதில் வெற்றி பெறும். வார ஆரம்பத்தில் தொழிலில் மந்த போக்கு நிலவினாலும் நிலையான முன்னேற்றத்தை எட்டி பிடிப்பீர்கள். பெயர், புகழ், அந்தஸ்து, கவுரவம் உயரும். பெரிய மனிதர்களின் தொடர்பு அரசியல் செலவு ஏற்படலாம். உடன் பிறந்தவர்களின் அன்பும் அனுசரணையும் இருக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாகும். ஒரு நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அதற்கு நீங்களே காரணமாக இருப்பீர்கள். மனதில் நிலவிய வெறுமை தேவையில்லாத கற்பனை பய உணர்வு குறையும். இடப்பெயர்ச்சி நடக்கும். கடன் தொல்லை அதிகரிக்கும். தேவையற்ற வழக்குகள் மற்றும் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் அதிர்ஷ்ட சொத்து, நகை, பணம், பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும். நவீனகரமான பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். பெண்களுக்கு புகுந்த வீட்டினரின் பாராட்டும் அன்பும் கிடைக்கும்.விநாயகரை வழிபட தடைகள் அகலும்.

    தனுசு

    தடை தாமதங்கள் அகலும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் 7,10ம் அதிபதி புதனுடன் பரிவர்த்தனை பெறுகிறார். எந்தவொரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து எண்ணிய பலனை அடைவீர்கள். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். தன்நிறைவோடு வாழ முடியும். பொருளாதார நெருக்கடி, கடன் படிப்படியாக குறையும்.எதிர்பாராத தனவரவும், அதற்கேற்ப செலவும் உண்டாகும். வெளிநாட்டு தொடர்புகளால் ஆதாயம் உண்டு. உத்தியோக பணிகளில் உயர்வு ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பயணங்கள் உண்டாகும். நண்பர்கள், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியைத் தரும். அடமானம் வைத்த பொருளை சொத்துக்களை மீட்பீர்கள். எப்பொழுதோ வாங்கி வைத்த பங்குகளின் மதிப்பு உயரும். அர்த்தாஷ்டமச் சனி நடந்தாலும் ராசியை குரு பார்ப்பதால் வேலை செய்யும் இடத்தில் அனுகூலமான சூழல் காணப்படும்.தம்பதிகளிடம் புரிதல் உண்டாகும். திருமணத்தடை அகலும். மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சித்து நவகிரக குரு பகவானை வழிபடவும்.

    மகரம்

    பொறுப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசியில் அஷ்டம அதிபதி சூரியன் சஞ்சரிக்கிறார். முன் கோபத்தால் பகைமை உருவாகும். சில முக்கிய விஷயங்களை நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் சமாளிக்க முடியும். முன்னோர் சொத்துப் பிரச்சனை நீதிமன்ற படி ஏற வைக்கும் என்பதால் பங்காளிகளிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. எதிர்மறை எண்ணங்கள் அவ்வப்போது தோன்றி மறையும். உண்மையான நண்பர்களையும் ஏமாற்றுபவர்களையும் அடையாளம் காணக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும். தந்தையுடன் கருத்து வேறுபாடு அல்லது தந்தையால் நஷ்டம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் சில உதவிகள் கிடைக்கும். வயிறு தொடர்பான பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. கட்டிய வீட்டை பழுது பார்ப்பது அல்லது புதிய மனை வாங்கி வீடு கட்டுவது போன்ற செலவுகளை மேற்கொள்ள நேரும். இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். லட்சுமி நரசிம்மரை வழிபட கடன் தொல்லை நிவர்த்தியாகும்.

    கும்பம்

    நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். உற்சாகமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் வாரம். இதுவரை வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்த திறமைகள் வெளிப்படும். புகழ், அந்தஸ்து கவுரவம் உயரும். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் அதிகரிக்கும். குலத் தொழில் செழித்து வளரும்.ராசியில் ராகு இருப்பதால் சிறிய வீட்டில் வாழ்ந்த சிலர் வசதியான வீட்டிற்கு செல்வார்கள்.சுகபோக வாழ்க்கை கிடைக்கும். லவுகீக நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு குறுக்கு வழியிலாவது பணம் சம்பாதித்து விட வேண்டும் என்ற பேராசை மேலோங்கும்.கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். பெண்களுக்கு மகளிர் சுய உதவி குழு மூலம் சிறிய கடன் தொகை கிடைக்கும்.விவாகரத்து வழக்கு பிரச்சனை முடிவுக்கு வரும்.11.1.2026 அன்று அதிகாலை 4.52 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி நேரத்திற்கு சாப்பிட்டு ஓய்வு எடுப்பது நல்லது. மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. மந்தாரை மலர்களால் நவகிரக ராகு பகவானை வழிபடவும்.

    மீனம்

    கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய வாரம். ஜென்மச் சனியால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் இல்லம் திரும்புவார்கள். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள். மாற்று முறை சிகிச்சையால் நோய்க்கு தீர்வு கிடைக்கும். சிலருக்கு நீதி மன்ற வழக்குகளுக்காக அதிக பணம் செலவு செய்ய நேரும். அலைச்சல் மிகுதியாகும். திருமணத் தடைகள் அகலும். புத்திர பிராப்தம் உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான முயற்சியில் ஈடுபட உகந்த காலமாகும்.குல தெய்வ கடாட்சம் கிடைக்கும்.தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். 11.1.2026 அன்று அதிகாலை 4.52 முதல் 13.1.2026 அன்று மாலை 5.21 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கொடுக்கல், வாங்கல்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஏதாவது செலவுகள் ஏற்படும்.பண விஷயத்தில் யாரையும் நம்ப கூடாது.உடல் ஊனமுற்றவர்களுக்கு உணவு தானம் வழங்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • ஓடுபாதையே தெரியாத அளவு, அடர்த்தியான புகை மூட்டம், பனி மூட்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
    • புகைகளை எழுப்பக்கூடிய கழிவு பொருட்கள் போன்றவைகளை, தெருக்களில் போட்டு எரிப்பதை தவிர்த்துவிடுங்கள்.

    பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு ஒரு நாள் முன்னதாக வரும் போகிப் பண்டிகையின்போது பெரும்பாலானோர் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை தெருக்களில் போட்டு எரிப்பது வழக்கமாக உள்ளது.

    இதைப்போல் சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள மீனம்பாக்கம், கவுல் பஜார், பொழிச்சலூர், பம்மல் அனகாபுத்தூர், தரைப்பாக்கம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில், போகிப் பண்டிகையையொட்டி பழைய பிளாஸ்டிக் கழிவுகள், டயர்கள் உள்ளிட்ட பழைய பொருட்களை தெருக்களில் போட்டு, அதிகாலையில் எரிப்பதால், கடுமையான புகைமூட்டங்கள் ஏற்பட்டு, சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதியை சூழ்ந்து கொள்ளும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    மேலும் பனிமூட்டமும் அதிகாலை நேரத்தில் இருப்பதால், ஓடுபாதையே தெரியாத அளவு, அடர்த்தியான புகை மூட்டம், பனி மூட்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம், விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டு உள்ள அறிவிப்பில்,

    பொதுமக்கள் போகிப் பண்டிகையின் போது அதிகாலை நேரத்தில், பிளாஸ்டிக் கழிவுகள், பழைய டயர்கள், அதிக அளவு புகைகளை எழுப்பக்கூடிய கழிவு பொருட்கள் போன்றவைகளை, தெருக்களில் போட்டு எரிப்பதை தவிர்த்து விடுங்கள்.

    அவ்வாறு எரிப்பதால், அடர் மூடுபனியில், கரும் புகை கலந்து, விமான ஓடுபாதை தெரியாத அளவு, சூழ்ந்து கொள்கிறது. இதனால் விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்படுவதோடு, விமான பயணிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    எனவே குடியிருப்பு பகுதி மக்கள் விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    போகிப்பண்டிகையின் போது பழையபொருட்களை எரித்ததால் கடந்த 2018-ம் ஆண்டு அதிகபட்சமாக 73 புறப்பாடு விமானங்கள், 45 வருகை விமானங்கள் என மொத்தம் 118 விமான சேவைகள் புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டது .

    இதன் பின்னர் விழிப்புணர்வுகளால் போகிப்பண் கையின் போது பழைய பொருட்களை எரிப்பது குறைந்து விமான சேவைகள் பாதிக்கப்படுவது, படிப்படியாக குறைந்து வருகிறது.

    கடந்த 2024-ம் ஆண்டு, போகிப் பண்டிகை புகை மூட்டம் பனிமூட்டம் காரணமாக 51 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு போகிப் பண்டிகையின்போது இதைப்போன்ற பாதிப்பு ஏற்படலாம் என்று கருதி, இந்திய விமான நிலைய ஆணையம் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, அதிகாலை 4 மணியில் இருந்து, காலை 8 மணி வரையில், சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள், சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் என சுமார் 30 வருகை, புறப்பாடு விமானங்கள் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • குணா குகைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது

    புத்தாண்டு, பொங்கல் விடுமுறையை ஒட்டி கொடைக்கானலில் கூட்டம் அலைமோதுகிறது. வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், குணா குகை, தூண்பாறை, மோயர்பாண்ட், பைன்பாரஸ்ட், பசுமை பள்ளத்தாக்கு, அப்சர்வேட்டரி, ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது

    இந்நிலையில், கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களின் நுழைவுக் கட்டணம் இனி ஆன்லைன் முறையில் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானலில் குணா குகை, துன்பாறை, மோயார் சதுக்கம், பேரிஜம் ஏரி, பைன் காடுகள் ஆகிய பகுதிகளுக்கான நுழைவுக் கட்டணம் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே வசூல் செய்யப்படும் என்றும் நேரடிப் பணமாக இனி வசூலிக்கப்படாது என வனத்துறை தெரிவித்துள்ளது

    ×