என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Neighbouring Countries"

    • தமிழ் மொழி மட்டுமே அனைவரையும் ஒன்றாக இணைக்கும் பாலம்.
    • ஒன்றாக இணையாத எந்த இனமும் உலகில் வென்றதாக வரலாறு கிடையாது

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 'அயலக தமிழர் தினம்' கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் பார்வைக்கு தொடங்கி வைத்தார்.

    உணவு, கலாச்சாரம், வணிகம், கைவினைப் பொருட்கள் மற்றும் தமிழ் இலக்கியம் சார்ந்த 252 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    எப்போதுமே தூரம் அதிகமாகும்போது, உறவும் பாசமும் இன்னும் அதிக மாகும் என்று சொல்வார்கள். அந்த வகையில் இன்று உலகின் பல நாடுகளில் இருந்து வாழுகின்ற நீங்கள் தமிழ் உணர்வோடு தமிழ் பற்றோடு தமிழ்நாட்டின் மீது இருக்க கூடிய பாசத் தோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நீங்கள் அத்தனை பேரும் வருகை தந்துள்ளீர்கள்.

    வெளிநாடுகளில் நீங்கள் பல விதமான விழாக்களை பார்த்திருப்பீர்கள். கொண் டாடியிருப்பீர்கள். ஆனால் இது எதுவும் நம்முடைய தமிழர் திருநாள் பொங்கலுக்கு ஈடாகாது.

    ஏனென்றால் பொங்கல் என்பது நம்முடைய தமிழ் பண்பாட்டோடு தமிழ் உணர்வோடு கொண்டாடப்படுகின்ற ஒரு விழா. அப்படிப்பட்ட பொங்கல் பண்டிகை நேரத்தில் அயலக தமிழக உறவுகள் உங்கள் அத்தனை பேரையும் சந்திப்பது என்னுடைய சொந்த சகோதரர்கள், சகோதரிகள் என் குடும்பத்தினரை சந்திக்கின்ற அந்த மகிழ்ச்சியை எனக்கு தருகின்றது.

    அயலகத் தமிழர் தினத்தை நம் திராவிட மாடல் அரசு ஏற்பாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக கொண்டாடி வருகிறோம். இதில் நான் தவறாமல் கலந்து வருகிறேன்.

    இந்த நிகழ்ச்சியின் இந்த ஆண்டுக்கான தலைப்பு 'தமிழால் இணைவோம்... தரணியில் உயர்வோம்...' என்ற மிகச் சிறப்பான தலைப்பு வைக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.

    தமிழ்மொழி என்பது நம் அனைவரையும் இணைக்க கூடிய ஒரு மொழி. தமிழ் யாரையும் வேறுபடுத்தாது, பிரித்துப்பார்க்காது. யாருக்கும் எந்த பேதத்தையும் காட்டாத மொழிதான் நம் தாய்மொழி தமிழ்மொழி.

    தமிழ் என்ற அடையாளத்துக்கு முன்னாடி வேறு எந்த அடையாளமும் போட்டி போட முடியாது.

    ஜாதி, மதம், பணக்காரன், ஏழை, முதலாளி, தொழிலாளி, ஆண், பெண் என்று எல்லா பேதங்களையும் தாண்டிதான் நம் அத்தனை பேரையும் இணைத்திருப்பது நம்முடைய தாய்மொழி, தமிழ்மொழி.

    அப்படி நாம் அனைவரும் தமிழால் இணைந்தால்தான் இன்றைக்கு தரணியை வென்று கொண்டிருக்கிறோம். ஒன்றாக இணையாத எந்த இனமும், உலகில் உயர்ந்த வரலாறே கிடையாது.

    அந்த வகையில் உலகெங்கும் வாழக்கூடிய தமிழர்களை ஒருங்கிணைக்கக் கூடிய அந்த பணி என்பது மிக மிக முக்கியமானது. இந்த நேரத்தில் மிக அவசியமானது.

    அதைவிட முக்கியம் அவர்களது நலன்களை பாதுகாக்கின்ற இந்த பணி என்பது மிக முக்கியம். இதற்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து வேலைக்காகதான் சின்ன சின்ன வேலைகளை செய்ய நிறைய பேர் வெளி நாடு போவார்கள். அங்கு செட்டில் ஆவார்கள். ஆனால் இன்றைக்கு தமிழ் நாட்டில் இருந்து என்ஜினீ யர்கள், டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சென்று செட்டில் ஆகியிருக்கிறீர்கள்.

    தொழிலாளியாக சென்ற காலத்தில் குடும்பத்தை இங்குவிட்டு விட்டு தனியாக அங்கு சென்றிருப்பீர்கள். இப்போது குடும்பத்தையும் அழைத்துச் சென்று அங்கேயே தங்குகிற அளவுக்கு பெரிய வேலைகளில் இருக்கிறீர்கள்.

    இந்த வளர்ச்சி என்பது தானாக நடந்த வளர்ச்சி அல்ல. இந்த முன்னேற்றத்துக்கு பெயர்தான் திராவிட மாடல் இப்படி குடும்பத்தோடு வெளிநாட்டில் வசிக்கும் போதுதான் தமிழ்நாட்டில் இருந்து இன்னும் அதிகமான எதிர்பார்ப்புகள் நமக்குள் உருவாகும். அதை உணர்ந்துதான் நமது முதலமைச்சர் அயலக தமிழர் நல வாரியத்தை முதன் முதலில் தொடங்கி வைத் தார். இதில் இன்று 32 ஆயிரம் பேர் உறுப்பினர் களாக இருக்கிறீர்கள்.

    இதன் மூலம் அயலக தமி ழர்களுக்கு பல்வேறு முன்னெடுப்புகளை முதல்மைச்சர் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

    உக்ரைன், ஈரான், இஸ் ரேல் போன்ற நாடுகளில் போர் நடந்தபோது அங்கிருந்த தமிழர்களை பாதுகாப்பாக நம்முடைய துறைதான் மீட்டு வந்தது.

    வெளிநாடுகளில் வேலை செய்யும் தமிழர்களுக்கு ஏதாவது சிக்கல் என்றால் அதற்கு தீர்வுகாண இந்த துறை எல்லா உதவிகளையும் செய்து கொடுத்துள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு போகும்போது அங்குள்ள தமிழர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். இங்கு தொழில் முதலீடு செய்ய வேண்டுகோள் வைக்கிறார்.

    அதன் தொடர்ச்சியாக உங்களது முயற்சியின் காரணமாக இன்றைக்கு நம்பர்-1 பொருளாதார வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது. அந்த சாதனையில் உங்களது பங்கு மிகப்பெரியது.

    நம் அரசின் சார்பில் 'உங்க கனவ சொல்லுங்க' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார். மக்களின் கனவுகளை கேட்டு அறியும் இந்த நிகழ்ச்சி போல், அயலக தமிழர்களும் உங்க கனவுகளை இந்த வாரி யத்தின் பொறுப்பாளர்க ளிடம், அமைச்சர் நாசரிடம் தெரியப்படுத்துங்கள்.

    உங்களது தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் ஏற்ற திட்டங்களை நமது முதலமைச்சர் நிச்சயம் தீட்டி கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள், துரைமுருகன், தா.மோ. அன்பரசன், ஆவடி நாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பிரதமர் மோடி மத்திய மந்திரிகளுடன் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார்.
    • நேபாளம், பூடான், இலங்கை பங்களாதேஷ் மற்றும் மொரீஷியஸ் தலைவர்கள் விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை பெற்றிருந்தது.

    ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் என்ற இலக்கை இந்த கூட்டணி கடந்திருந்ததால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலை உருவானது.

    இதை உறுதிசெய்யும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. உடனடியாக மத்தியில் புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை பா.ஜனதா தொடங்கியது.

    அதன்படி டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் கூட்டம் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து நாட்டின் அடுத்த பிரதமராக 8-ந் தேதி மாலையில் மோடி மீண்டும் பதவி ஏற்பார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. அவருடன் புதிய மந்திரி சபையும் பதவி ஏற்கும் என தெரிகிறது.

    பிரதமர் மோடி மத்திய மந்திரிகளுடன் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார். அப்போது தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மேலும் மக்களவையை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தையும் வழங்கினார். 

    இவற்றை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி முர்மு, புதிய அரசு பதவி ஏற்கும் வரை பிரதமரும், மந்திரிகளும் தங்கள் பதவிகளிலேயே தொடருமாறு கேட்டுக்கொண்டார்.

    இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவிற்கு அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேபாளம், பூடான், இலங்கை பங்களாதேஷ் மற்றும் மொரீஷியஸ் தலைவர்கள் விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

    தேர்தல் வெற்றிக்கு ரணில் விக்ரமசிங்கே தொலைபேசியில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவரை பதவியேற்பு விழாவிற்கு வருமாறு மோடி அழைப்பு விடுத்தார். அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.

    வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் தொலைபேசியில் உரையாடிய மோடி, பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். அதை அவர் ஏற்றுக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தாவுடன் தொலைபேசியில் உரையாடிய மோடி, முறையான அழைப்பிதழ்கள் அனுப்பப்படும் என்று கூறி அழைப்பு விடுத்தார்.

    மேலும் பூடான் பிரதமர், மொரீஷியஸ் பிரதமருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்பதன் மூலம், கடந்த 1962-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஆளும் அரசு 3-வது முறையாக ஆட்சிக்கு வருகிறது. நாட்டின் முதல் பிரதமர் நேருவுக்கு பிறகு, அந்த பெருமையை மோடி பெறுகிறார்.

    ×