என் மலர்
நீங்கள் தேடியது "அயலக தமிழர்கள்"
- தமிழ் மொழி மட்டுமே அனைவரையும் ஒன்றாக இணைக்கும் பாலம்.
- ஒன்றாக இணையாத எந்த இனமும் உலகில் வென்றதாக வரலாறு கிடையாது
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 'அயலக தமிழர் தினம்' கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் பார்வைக்கு தொடங்கி வைத்தார்.
உணவு, கலாச்சாரம், வணிகம், கைவினைப் பொருட்கள் மற்றும் தமிழ் இலக்கியம் சார்ந்த 252 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
எப்போதுமே தூரம் அதிகமாகும்போது, உறவும் பாசமும் இன்னும் அதிக மாகும் என்று சொல்வார்கள். அந்த வகையில் இன்று உலகின் பல நாடுகளில் இருந்து வாழுகின்ற நீங்கள் தமிழ் உணர்வோடு தமிழ் பற்றோடு தமிழ்நாட்டின் மீது இருக்க கூடிய பாசத் தோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நீங்கள் அத்தனை பேரும் வருகை தந்துள்ளீர்கள்.
வெளிநாடுகளில் நீங்கள் பல விதமான விழாக்களை பார்த்திருப்பீர்கள். கொண் டாடியிருப்பீர்கள். ஆனால் இது எதுவும் நம்முடைய தமிழர் திருநாள் பொங்கலுக்கு ஈடாகாது.
ஏனென்றால் பொங்கல் என்பது நம்முடைய தமிழ் பண்பாட்டோடு தமிழ் உணர்வோடு கொண்டாடப்படுகின்ற ஒரு விழா. அப்படிப்பட்ட பொங்கல் பண்டிகை நேரத்தில் அயலக தமிழக உறவுகள் உங்கள் அத்தனை பேரையும் சந்திப்பது என்னுடைய சொந்த சகோதரர்கள், சகோதரிகள் என் குடும்பத்தினரை சந்திக்கின்ற அந்த மகிழ்ச்சியை எனக்கு தருகின்றது.
அயலகத் தமிழர் தினத்தை நம் திராவிட மாடல் அரசு ஏற்பாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக கொண்டாடி வருகிறோம். இதில் நான் தவறாமல் கலந்து வருகிறேன்.
இந்த நிகழ்ச்சியின் இந்த ஆண்டுக்கான தலைப்பு 'தமிழால் இணைவோம்... தரணியில் உயர்வோம்...' என்ற மிகச் சிறப்பான தலைப்பு வைக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.
தமிழ்மொழி என்பது நம் அனைவரையும் இணைக்க கூடிய ஒரு மொழி. தமிழ் யாரையும் வேறுபடுத்தாது, பிரித்துப்பார்க்காது. யாருக்கும் எந்த பேதத்தையும் காட்டாத மொழிதான் நம் தாய்மொழி தமிழ்மொழி.
தமிழ் என்ற அடையாளத்துக்கு முன்னாடி வேறு எந்த அடையாளமும் போட்டி போட முடியாது.
ஜாதி, மதம், பணக்காரன், ஏழை, முதலாளி, தொழிலாளி, ஆண், பெண் என்று எல்லா பேதங்களையும் தாண்டிதான் நம் அத்தனை பேரையும் இணைத்திருப்பது நம்முடைய தாய்மொழி, தமிழ்மொழி.
அப்படி நாம் அனைவரும் தமிழால் இணைந்தால்தான் இன்றைக்கு தரணியை வென்று கொண்டிருக்கிறோம். ஒன்றாக இணையாத எந்த இனமும், உலகில் உயர்ந்த வரலாறே கிடையாது.
அந்த வகையில் உலகெங்கும் வாழக்கூடிய தமிழர்களை ஒருங்கிணைக்கக் கூடிய அந்த பணி என்பது மிக மிக முக்கியமானது. இந்த நேரத்தில் மிக அவசியமானது.
அதைவிட முக்கியம் அவர்களது நலன்களை பாதுகாக்கின்ற இந்த பணி என்பது மிக முக்கியம். இதற்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து வேலைக்காகதான் சின்ன சின்ன வேலைகளை செய்ய நிறைய பேர் வெளி நாடு போவார்கள். அங்கு செட்டில் ஆவார்கள். ஆனால் இன்றைக்கு தமிழ் நாட்டில் இருந்து என்ஜினீ யர்கள், டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சென்று செட்டில் ஆகியிருக்கிறீர்கள்.
தொழிலாளியாக சென்ற காலத்தில் குடும்பத்தை இங்குவிட்டு விட்டு தனியாக அங்கு சென்றிருப்பீர்கள். இப்போது குடும்பத்தையும் அழைத்துச் சென்று அங்கேயே தங்குகிற அளவுக்கு பெரிய வேலைகளில் இருக்கிறீர்கள்.
இந்த வளர்ச்சி என்பது தானாக நடந்த வளர்ச்சி அல்ல. இந்த முன்னேற்றத்துக்கு பெயர்தான் திராவிட மாடல் இப்படி குடும்பத்தோடு வெளிநாட்டில் வசிக்கும் போதுதான் தமிழ்நாட்டில் இருந்து இன்னும் அதிகமான எதிர்பார்ப்புகள் நமக்குள் உருவாகும். அதை உணர்ந்துதான் நமது முதலமைச்சர் அயலக தமிழர் நல வாரியத்தை முதன் முதலில் தொடங்கி வைத் தார். இதில் இன்று 32 ஆயிரம் பேர் உறுப்பினர் களாக இருக்கிறீர்கள்.
இதன் மூலம் அயலக தமி ழர்களுக்கு பல்வேறு முன்னெடுப்புகளை முதல்மைச்சர் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
உக்ரைன், ஈரான், இஸ் ரேல் போன்ற நாடுகளில் போர் நடந்தபோது அங்கிருந்த தமிழர்களை பாதுகாப்பாக நம்முடைய துறைதான் மீட்டு வந்தது.
வெளிநாடுகளில் வேலை செய்யும் தமிழர்களுக்கு ஏதாவது சிக்கல் என்றால் அதற்கு தீர்வுகாண இந்த துறை எல்லா உதவிகளையும் செய்து கொடுத்துள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு போகும்போது அங்குள்ள தமிழர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். இங்கு தொழில் முதலீடு செய்ய வேண்டுகோள் வைக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக உங்களது முயற்சியின் காரணமாக இன்றைக்கு நம்பர்-1 பொருளாதார வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது. அந்த சாதனையில் உங்களது பங்கு மிகப்பெரியது.
நம் அரசின் சார்பில் 'உங்க கனவ சொல்லுங்க' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார். மக்களின் கனவுகளை கேட்டு அறியும் இந்த நிகழ்ச்சி போல், அயலக தமிழர்களும் உங்க கனவுகளை இந்த வாரி யத்தின் பொறுப்பாளர்க ளிடம், அமைச்சர் நாசரிடம் தெரியப்படுத்துங்கள்.
உங்களது தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் ஏற்ற திட்டங்களை நமது முதலமைச்சர் நிச்சயம் தீட்டி கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள், துரைமுருகன், தா.மோ. அன்பரசன், ஆவடி நாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- இந்தியாவில் இருக்க கூடிய மாநில கட்சிகளில் அயலக தமிழர்களின் நலனுக்காக ஒரு அணியை தொடங்கியது நம்முடைய தி.மு.கழகம் தான்.
- எந்த நாட்டுக்கு சென்றாலும் தமிழ் பேசுகிற மக்களை காண முடிகிறது. கிட்டத்தட்ட 135 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
சென்னை:
தமிழக அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை 'தமிழ் வெல்லும்' எனும் கருப்பொருளை மையமாக கொண்டு 'அயலகத் தமிழர் விழாவை' நடத்தி வருகிறது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் நடைபெறும் இந்த விழாவில், இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்பட 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்களும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் வெளிநாடுகளில் உள்ள 218 சர்வதேச தமிழ் சங்கங்கள், 48 பிற மாநில தமிழ் சங்கங்கள் ஆகியவற்றை சேர்ந்த அயலக தமிழர்கள் திரளாக பங்கேற்றனர்.
இன்று நடைபெற்ற முதல் நாள் விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டு இருந்த 40-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்தும் பார்வையிட்டார். அயலக தமிழர்களின் புத்தகங்களையும் வெளியிட்டார்.
விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழ்நாடு அயலக தமிழ் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பாக அயலக தமிழர் தின நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நாளைய தினம் நம்முடைய முதலமைச்சர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நிறைவுரையாற்ற உள்ளார்.
இந்தியாவில் இருக்க கூடிய மாநில கட்சிகளில் அயலக தமிழர்களின் நலனுக்காக ஒரு அணியை தொடங்கியது நம்முடைய தி.மு.கழகம் தான்.
இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன்.
நம்முடைய தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள்-வீராங்கனைகள் உலகம் முழுவதிலும் நடைபெறுகின்ற பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள்.
அப்படி வரும் போது அவர்களை களத்தில் ஊக்குவிப்பவர்களாக, உற்சாகபடுத்துபவர்களாக இருக்கிறீர்கள். அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அயலக தமிழர்கள் நலன் மீது நம்முடைய அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.
முன்பைவிட நம்முடைய தமிழர்கள் பல்வேறு நாடுகளில் படிப்பதற்காகவும், வேலை பார்ப்பதற்காகவும் தங்கி இருக்கிறீர்கள்.

எந்த நாட்டுக்கு சென்றாலும் தமிழ் பேசுகிற மக்களை காண முடிகிறது. கிட்டத்தட்ட 135 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
தமிழர்கள் நலனை கருத்தில் கொண்டுதான் இந்த துறையை நமது அரசு உருவாக்கியது.
முன்பெல்லாம் வெளிநாட்டில் வேலை என்று கூறி டிராவல் ஏஜெண்டுகள் ஏமாற்றினார்கள் என்ற செய்திகளை பார்ப்போம். ஆனால் அந்த நிலை இன்றைக்கு பெருமளவு மாறி இருக்கிறது. ஏனென்றால் அயலக தமிழர் நலத்துறை மேற்கொண்ட பணிகளே இதற்கு முக்கிய காரணம். வெளிநாடுகளில் தமிழர்கள் மிக முக்கிய பதவிகளிலும் இருக்கிறார்கள்.
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கும் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அயலகத் தமிழர் துறை அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது.
தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்காகவும் வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்காகவும் தி.மு.க. பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் திருச்சி சிவா எம்.பி.பேசும் போது கூறியதாவது:-
தமிழர்களின் நம்பிக்கை அரணாக தி.மு.க. விளங்குகிறது. பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. இது ஏதோ எப்போதும் போல் வந்து போகிற தேர்தல் அல்ல. இந்த தேர்தலின் முடிவுதான் உலக அரங்கில் தலை சிறந்த ஜனநாயக நாடு இந்தியா என்பது நிலைக்கப் போகிறதா? அல்லது தடம் மாறி அது போகப்போகிறதா? என்று தீர்மானிக்க போகிற தேர்தல்.
மத்தியில் இன்றைக்கு இருக்கிற ஆட்சி அகல வேண்டும். நம்முடைய 'இந்தியா கூட்டணி' வெல்ல வேண்டும்.
தமிழகத்தை நம்பி வடபுலம் காத்திருக்கிறது. தமிழகத்தை நம்பி இந்தியா காத்திருக்கிறது. நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின் 40 தொகுதிகளையும் வென்று கொண்டு போய் நாங்கள் தான் தன்னிகரற்றவர்கள் என்று காட்ட போகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ. உள்பட பலர் பங்கேற்றனர்.






