search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டிங் ஆபரேஷன்"

    • பாஜக நிர்வாகிகள் தன்னை மிரட்டி, திரிணமுல் கட்சியினருக்கு எதிராக போலியாக பாலியல் புகார் கொடுக்க வற்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
    • பாஜகவினரால் தனக்கு ஏற்பட வாய்ப்புள்ள அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு கோரி தனியாக ஒரு புகாரையும் அப்பெண் பதிவு செய்துள்ளார்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்த ஷாஜகான் ஷேக் என்பவர் பெண்களில் சொத்துகளை அபகரித்ததாகவும், பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் பெண்கள் புகார் கொடுத்தனர்.

    இதனிடையே பாலியல் புகார் தொடுத்த பெண் ஒருவர் , காவல்நிலையத்தை அணுகி தனது புகாரை திரும்ப பெற்றுள்ளார்.

    பாஜக மகிளா மோர்ச்சா நிர்வாகிகள் தன்னை மிரட்டி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக போலியாக பாலியல் புகார் கொடுக்க வற்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

    பாஜகவினர் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்துக்காக தன்னிடம் வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிய பாஜகவினர், பின்னர் அதனை தவறாகப் பயன்படுத்திக் கொண்டனர். எனக்கு எவ்வித பாலியல் வன்கொடுமையும் நடக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும் தனது இந்த முடிவால் பாஜகவினரிடம் இருந்து தனக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது . ஆகவே அதிலிருந்து தனக்கு பாதுகாப்பு கோரி தனியாக ஒரு புகாரையும் அப்பெண் பதிவு செய்துள்ளார்.

    இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்த ஸ்டிங் ஆபரேஷனில், பாஜக உள்ளூர் தலைவர் ஒருவர் சந்தேஷ்காலி விவகாரம் தங்கள் கட்சியின் நாடக நடவடிக்கை என்று பேசும் வீடியோ வெளியானது.

    இதனையடுத்து சந்தேஷ்காலி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் ஷாஜகான் ஷேக் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது
    • சந்தேஷ்காலி ஸ்டிங் ஆபரேஷன் என்று ஒரு வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது

    மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்த ஷாஜகான் ஷேக் என்பவர் பெண்களில் சொத்துகளை அபகரித்ததாகவும், பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    ஆனால் மேற்கு வங்காள மாநில போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பெண்கள் ஆயுதங்களுடன் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால் இந்த விசயம் பூதாகரமாக வெடித்தது. இதனால் ஷாஜகான் ஷேக் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    தலைமறைவான அவரை மேற்கு வங்காள போலீசார் கைது செய்தனர். சந்தேஷ்காலி விவகாரத்தில் கைது செய்யவில்லை. ஜனவரி மாதம் சோதனை நடத்த சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவித்தது.

    இந்நிலையில் சந்தேஷ்காலி ஸ்டிங் ஆபரேஷன் என்று ஒரு வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில், சந்தேஷ்காலியில் பாலியல் வன்கொடுமை சம்பவம் எதுவும் நடக்கவில்லை, மேற்கு வங்காள பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் பொய்யாக ஏற்பாடு செய்யப்பட்டது என்று இருவர் பேசுகின்றனர்.

    அதில், "வங்காளத்தை அசிங்கப்படுத்த பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை இந்த வீடியோ அம்பலப்படுத்துகிறது. கொடூரமான பாலியல் வன்கொடுமைகள் முதல் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படுவது வரை அனைத்தையும் செய்வது மேற்கு வங்காள பாஜக தலைவர் சுவேந்து அதிகாரிதான். இதனை வங்காள மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்" என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வீடியோவை முதலமைச்சர் மம்தா பேனர்ஜி பகிர்ந்துள்ளார். அதில், சந்தேஷ்காலி ஸ்டிங் ஆபரேஷனை பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது. வங்காளத்தின் முற்போக்கு சிந்தனை மற்றும் கலாச்சாரத்தின் மீதான வெறுப்பில், நமது மாநிலத்தை இழிவுபடுத்துவதற்காக பாஜக சதித்திட்டத்தை தீட்டியுள்ளது. இந்தியாவை ஆண்ட எந்த கட்சியும் ஒரு மாநிலத்தையும் அதன் மக்களையும் இழிவுபடுத்த இந்த அளவுக்கு முயன்றதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

    ×