search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவேந்து அதிகாரி"

    • பா.ஜனதா வேட்பாளர் ராஜு பிஸ்டாவை ஆதரித்து சிலிகுரியில் உள்ள ஹில் கார்ட் சாலையில் பா.ஜனதா ரோடு ஷோ நடத்தியது.
    • மத்திய மந்திரிகள் கிரண் ரிஜிஜு மற்றும் நிசித் ப்ரமாணிக், மேற்கு வங்காள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுவேந்தி அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ராஜு பிஸ்டாவை ஆதரித்து சிலிகுரியில் உள்ள ஹில் கார்ட் சாலையில் பா.ஜனதா ரோடு ஷோ நடத்தியது.

    இதில் மத்திய மந்திரிகள் கிரண் ரிஜிஜு மற்றும் நிசித் ப்ரமாணிக், மேற்கு வங்காள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுவேந்தி அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது EVM தொடர்பாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், இது தொடர்பாக சுவேந்து அதிகாரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு சுவேந்தி அதிகாரி "EVM குறித்து அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். காங்கிரஸ் கட்சி கர்நாடகா மற்றும் தெலுங்கானா தேர்தலில் வெற்றி பெற்றபோது EVM சரியானது. பா.ஜனதா தலைமையிலான என்.டி.ஏ. 400 இடங்களுக்கு மேல் பிடிக்கும் வகையில சென்று கொண்டிருக்கிறது" என்றார்.

    • மேற்கு வங்காள மாநிலத்திற்கு வழங்கக்கூடிய நிதியை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு.
    • வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தில் மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி இறுதி கெடு விதித்துள்ளார்.

    மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளம் செல்ல இருக்கிறார். பா.ஜனதாவின் பெண்கள் பிரிவு தலைவர்கள், பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிரசார கூட்டத்திலும் பேச இருக்கிறார்.

    பின்னர் பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரம், சொத்துகளை சட்டவிரோதமாக பறித்தல் சம்பவத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நபரான ஷேக் ஷாஜகானால் பாதிக்கப்பட்ட பெண்கள் வசித்து வரும் சந்தேஷ்காளி பகுதிக்கு செல்ல இருக்கிறார். அங்கு பாதிக்கப்பட்ட பெண்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பிரதமர் மோடியின் வருகைக்காக மேற்கு வங்காள பா.ஜனதாவினர் தயாராகி வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் சாந்தனு சென், பிரதமர் மோடியிடம் மேற்கு வங்காள மக்கள் கேட்க விரும்பும் விசயங்களை பட்டியலிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக சாந்தனு சென் கூறுகையில் "மேற்கு வங்காளத்தில் கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது நீங்கள் 18 எம்.பி.க்களை பெற்றீர்கள். அந்த எம்.பி.க்கள் டெல்லிக்கு வரும்போதெல்லாம், மேற்கு வங்காள மாநிலத்திற்கான நிதியை கொடுக்காதீர்கள் என்று அவர்கள் பரிந்துரை செய்தார்களா?. அவர்களின் மீது கவனம் செலுத்தி மாநிலத்தின் பல்வேறு திட்டத்திற்கான சுமார் 1.60 லட்சம் கோடி நிதியை நீங்கள் நிறுத்து விட்டீர்களா? என்று மேற்கு வங்காள மக்கள் கேட்க விரும்புகிறார்கள்.

    மேலும், கடந்த சில வருடங்களாக மேற்கு வங்காளத்தில் இருந்து நீங்கள் ஆண்டிற்கு 4.65 லட்சம் கோடி ரூபாயை நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் எடுத்துச் சென்றீர்கள். இதைப்பற்றியும் கேள்வி கேட்க விரும்புகிறார்கள்.

    அதோடு இல்லாமல் சுவேந்து அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய முடியுமா? என்றும் கேட்க விரும்புகிறார்கள். சுவேந்து அதிகாரியின் பெயர் சிபிஐ-யின் எஃப்ஐஆர்-ல் உள்ளது. மேலும் 20 எஃப்ஐஆர்-ல் உள்ளது" என்றார்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இருந்து பிரிந்து சென்ற சுவேந்து அதிகாரி, அக்கட்சிக்கு எதிராக பா.ஜனதா தலைவராக எதிர்த்து நிற்கிறார்.

    ×