search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலை"

    • கிழிந்த புடவைகளையும், பேஷன் உடைகளாக மாற்றலாம்.
    • புதுமைகள்தான், பேஷன் துறையின் அடிநாதம்.

    நவீன காலத்து உடை நாகரிகம் பற்றியும், 'பொட்டிக்' எனப்படும் பிரத்யேக ஆடை வடிவமைப்பு தொழில் கலாசாரம் பற்றியும், அதன் மூலம் பெண்களுக்கு உருவாகி இருக்கும் வேலைவாய்ப்புகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

    'பொட்டிக்' என்பது காஸ்டியூம் டிசைனர்கள் எனப்படும் உடை வடிவமைப்பாளர்களால் நிர்வகிக்கப்படும் பிரத்யேக உடை கடை. இங்கு, பேஷன் டிரெண்டிங்கான உடைகளை வடிவமைப்பார்கள். அதேபோல வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ற, பிரத்யேக உடைகளையும் வடிவமைத்து கொடுப்பார்கள். இதில், எல்லா கலாசார உடைகளும் அடங்கும். அது சுடிதாராக இருக்கலாம். டிசைனிங் வேலைபாடுகள் நிறைந்த சேலை பிளவுஸ்களாக இருக்கலாம். பிரைடல் பிராக், லெஹெங்கா, ஸ்கர்ட், பட்டுப்புடவைகளில் இருந்து தைக்கப்படும் நவ-நாகரிக உடைகள், குறிப்பிட்ட விழாக்களை அழகாக்கும் தீம் மற்றும் கஸ்டமைஸ்ட் உடைகள், பிறந்த குழந்தைகளுக்கான விஷேச உடைகள்... இப்படி உடை கலாசாரத்தில் வரும் எல்லா வகைகளையும், தைத்துக் கொடுக்கலாம். ரெடிமேட் துணிகளுக்கு மாற்றாக, நமக்கு வேண்டியதை, சிறப்பான வேலைப்பாடுகளுடன் தைத்துக் கொடுப்பதுதான், பொட்டிக் கடைகளின் அடிப்படை.

    முன்பை விட, இப்போது நிறைய மக்கள் கஸ்டமைஸ்ட் ஆடைகளை அணிய ஆசைப்படுகிறார்கள். ஒருகாலத்தில் திருமண வரவேற்புக்கு மட்டுமே 'கஸ்டமைஸ்ட்' ஆடைகளை பயன்படுத்துவார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. நிச்சயதார்த்தத்தில் தொடங்கி, திருமணத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய போட்டோஷூட்கள், வரவேற்பு நிகழ்ச்சிகள், ஹனிமூன் பயணங்கள், கர்ப்ப கால போட்டோ ஷூட், குழந்தை பிறப்பு, குழந்தையின் முதல் வருட பிறந்த நாள் கொண்டாட்டம்... இப்படி எல்லா விஷேசங்களுக்கும், அவர்களுக்கு பிடித்த மாதிரியில், பிடித்த நிறங்களில், பிடித்த தீம் (கருப்பொருளில்) ஆடைகளை வடிவமைத்து அணிகிறார்கள். இது, இன்றைய டீன்-ஏஜ் வயதினரின் தவிர்க்கமுடியாத பழக்கமாகிவிட்டது. அதனால் 'காஸ்டியூம் டிசைனிங்' துறையிலும், பொட்டிக்கடை களிலும் சிறப்பான எதிர்காலம் இருக்கும்.

    கிரியேட்டிவிட்டி, குவாலிட்டி, டெலிவரி மற்றும் பிட்டிங்... இவை நான்கையும், சிறப்பாக பின்பற்றினால், பொட்டிக் தொழிலில் வெற்றி பெறலாம். கிரியேட்டிவிட்டி எனப்படும் படைப்பாற்றல் வெளிப்படும் வகையிலான உடைகளை உருவாக்குவது அவசியம். அதேசமயம், லாப நோக்கத்திற்காக துணிகளின் தரத்தில் (குவாலிட்டி) எந்தவித சமரசமும் இருக்கக்கூடாது. அதேபோல, 2 நாட்களில் தைத்து கொடுப்பதாக (டெலிவரி) கூறி, அதை 4 நாட்களாக தாமதப்படுத்தி கொடுக்கக்கூடாது. இறுதியாக, நாம் தைத்து கொடுப்பது அவர்களின் உடலோடு சரியாக பொருந்தக்கூடிய அளவில் பிட்டிங் துல்லியமாக இருக்க வேண்டும். இவை நான்கையும் சரியாக கடைப்பிடித்தால், வெற்றி பெறலாம்.

    புதுமைகள்தான், பேஷன் துறையின் அடிநாதம். அதில் உருவானதுதான், இந்த டெக்னிக். எல்லோர் வீட்டிலும், அம்மா, பாட்டிகளின் நினைவுகளை தாங்கிய பழைய புடவைகள் இருக்கும். அதை இப்போது உடுத்து பவர்களும் உண்டு. பழைய டிசைன் என்ற தயக்கத்தினால், உடுத்த தயங்குபவர்களும் உண்டு. அப்படி தயங்குபவர்களுக்காகவே, இந்த முயற்சி. பழைய புடவையை புடவையாகத்தான் அணியவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்களுக்கு பிடித்த வகையில், சுடிதாராக அணியலாம். இல்லையென்றால் அனார்கலி, கவுன், லாங் பிராக், ஸ்கர்ட், அம்பர்லா கவுன், குர்த்தி... இதுபோன்ற பேஷன் வடிவங்களுக்கும் மாற்றிக்கொள்ளலாம்.

    சில பெண்கள், அவர்களது அம்மா புடவையில் தங்களுக்கும், மகளுக்கும் ஒரே டிசைனில் உடை தைத்து அணிகிறார்கள். ஏதோ ஒரு வகையில், முன்னோர்களுக்கும், அவர்களுக்குமான பந்தத்தை உடை வடிவில் தொடர விரும்புகிறார்கள்.

    கிழிந்த புடவைகளையும், பேஷன் உடைகளாக மாற்றலாம். புடவையின் கிழிந்த பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு, நல்ல நிலையில் இருக்கும் மற்ற புடவை துணிகளிலும், நவ-நாகரிக உடைகளை தைக்கலாம். அவரவர் பட்ஜெட்டிற்கு ஏற்ப, ஆரி வேலைப்பாடுகள் செய்து, புடவைகளை அழகாக்கலாம். அதேபோல, கறை படிந்த பட்டுப்புடவைகளை கூட ஆடைகளாக மாற்றலாம்.

    ஆடம்பரமாக காட்சியளிக்கும் உடைகளை 'லைட் வெயிட்' முறையில் லேசாக வடிவமைப்பதும், அணிவதும்தான் இப்போதைய டிரெண்ட். இதனுடன், அம்மா-மகள் உடைகள், தீம் முறையில் ஒட்டுமொத்த குடும்பத்திற்குமான உடைகள், விஷேசங்களுக்கு ஏற்ற கஸ்டமைஸ்ட் உடைகள், பட்டுப்புடவைகளில் உருவாகும் பல உடைகள்... என எந்த வரம்பிற்குள்ளும் சிக்காமல், ஆடைகளின் டிரெண்ட் வளர்ந்துகொண்டே இருக்கிறது.

    தையல் கலையை பொறுத்தவரை, வாய்வழி செய்திகளாகவே பெரும் விளம்பரம் நடக்கும். நீங்கள், உங்களுக்கு தெரிந்த தோழிகளிடம் பரிந்துரைப்பீர்கள். அவர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் பரிந்துரைப்பார்கள். இதோடு கொஞ்சம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தள புரோமோஷன் இருந்தால் போதும், சிறப்பாக முன்னேறலாம்.

    • வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
    • ஆண்களைப்போல் பெண்களும் இரவு ஷிப்ட்டில் பணியாற்றுகிறார்கள்.

    வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் திருமணத்திற்கு முன்பு குடும்பப் பொறுப்புகளை சுமக்கவேண்டியதில்லை. அலுவலகப் பணிகளை பார்த்தால் போதுமானது. ஆனால் திருமணமாகிவிட்டால், குடும்ப நிர்வாகத்தையும் அவர்கள் சேர்த்து சுமக்க வேண்டியதிருக்கிறது. இந்த இரண்டு பணிகளையும் சேர்த்து கவனிக்கும் பெண்கள் உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? அல்லது வருத்தத்தோடு இரண்டு பணிகளையும் செய்துகொண்டிருக்கிறார்களா? என்பதை எல்லாம் அலசும் வித்தியாசமான சர்வே இது!

    * குடும்ப நிர்வாகம், அலுவலகப் பணி இரண்டையும் கவனிப்பது உங்களை எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது என்ற கேள்விக்கு..?

    - 51.8 சதவீத பெண்கள் 'மகிழ்ச்சியடைந்து கொள்வதைவிட வேறு வழியில்லை' என்று சற்று சலிப்பு கலந்த நிலையில் பதில் கூறியிருக்கிறார்கள்.

    - மகிழ்ச்சியாக இருக்கிறது என்ற பதில், 37.5 சதவீத பெண்களிடமிருந்து கிடைத்திருக்கிறது.

    - கொஞ்சம்கூட மகிழ்ச்சியில்லை என்று 10.7 சதவீதம் பேர் கருத்துக் கூறியிருக்கிறார்கள்.

    * நீங்கள் குடும்ப நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டு, வெளியே சென்று வேலையும் செய்ய என்ன காரணம் என்ற கேள்விக்கு..?

    - ஊதியத்திற்காக என்று 55 சதவீதம் பேரும், வேலை தரும் ஆத்ம திருப்திக்காக என்று 40 சதவீதம் பேரும் கூறியுள்ளார்கள்.

    - மீதமுள்ள பெண்கள் 'சமூகத்திலும், உறவினர்கள் மத்தியிலும் கிடைக்கும் கவுரவத்திற்காகவும்- வீட்டிலே இருந்தால் போரடித்துப்போவதை தவிர்க்கவும்' வேலைக்குப் போவதாக சொல்கிறார்கள்.

    தனியார் அமைப்பு ஒன்று நடத்திய இந்த சர்வேயில் கருத்து தெரிவித்திருக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் 26 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் கணிசமான அளவினர், குடும்பம் மற்றும் வேலையால் அதிக மனஅழுத்தம் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். இரவில் தூங்கச் செல்லும்போது மறுநாள் காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருப்பது, காலை உணவு என்ன தயாரிப்பது, கியாசை அணைத்தோமா, வீட்டை பூட்டினோமா.. என்றெல்லாம் நூறு கேள்விகள் மூளையை மொய்த்துக்கொண்டிருக்கும் போதே தூங்கிப்போவதாகவும், திடுக்கிட்டு விழிக்கும்போது விடிந்துவிடுவதாகவும் அலுப்போடு சொல்கிறார்கள். ஒவ்வொரு நாளையும் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி தொடங்கி, ஒரே மாதிரி முடிப்பது எரிச்சலை தருவதாகவும் சொல்கிறார்கள்.

    * வீட்டு நிர்வாகத்தைவிட அலுவலகப் பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா என்ற கேள்விக்கு..?

    - 60.7 சதவீத பெண்கள், இரண்டையும் சமமாக பாவிப்பதாக சொல்கிறார்கள்.

    - அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும்போது வீட்டை மறந்துவிடுவதாக 25 சதவீதம் பேர் பதிலளித்திருக் கிறார்கள்.

    - 13 சதவீத பெண்கள், 'வீட்டில் இருந்து தேவையான அன்பு கிடைக்காதபோது, அலுவலக வேலையில் மூழ்கிவிடுவதாக' சொல்கிறார்கள்.

    - மீதமுள்ளவர்கள் 'கணவரோடு சண்டையிட்டால் கவனம் முழுவதும் வேலையில் திரும்பி விடும்' என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

    * அலுவலகத்தில் வேலை முடிந்து வீடு திரும்ப தாமதமானால், வீட்டில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு கிடைக்கும் என்ற கேள்விக்கு..?

    - அமைதியாக வரவேற்று, அடுத்து செய்யவேண்டிய வீட்டு வேலைகள் அனைத்திலும் உதவுவார்கள் என்று 54.6 சதவீதம் பேர் சொல்லியிருக்கிறார்கள்.

    - அரைகுறை மனதோடு வீட்டு வேலைகளில் உதவுவார்கள் என்று 30 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்திருக் கிறார்கள்.

    - பத்து சதவீதம் பேர், வீட்டில் எடக்கு மடக்காக கேள்வி கேட்பார்கள் என்று தங்கள் வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

    - மீதமுள்ளவர்கள், 'அன்று முழுவதும் வீட்டில் உள்ளவர்கள் இறுக்கமாக காணப்படுவார்கள்' என்று கூறியிருக் கிறார்கள்.

    * உங்கள் வேலைச் சுமையை உணர்ந்து, கணவர் உங்களுக்கு உதவுவாரா என்ற கேள்விக்கு..?

    - வேலைச் சுமையை உணர்ந்துகொள்வார். ஆனால் எப்போதாவதுதான் உதவுவார் என்பது 39.3 சதவீத பெண் களின் கருத்து.

    - தாமாகவே முன்வந்து உதவுவார் என்று கூறி, 32.1 சதவீத பெண்கள் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள்.

    - 20 சதவீதத்தினர், 'உதவி செய்வது என்பது அவரது அப்போதைய மனநிலையை பொறுத்தது' என்று கூறியிருக்கிறார்கள்.

    - மீதமுள்ளவர்கள் என்ன கூறியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள். 'திரும்பிக்கூட பார்ப்பதில்லை' என்று சொல்லியிருக்கிறார்கள்.

    பொதுவாக வேலைக்கு செல்லும் மனைவிக்கு வீட்டு வேலைகளில் தன்னால் முடிந்த அளவுக்கு உதவவேண்டும் என்றுதான் கணவர் விரும்புகிறார். 'இன்று வீட்டு வேலைகளை நீ செய். குழந்தைகளை நான் கவனித்துக்கொள்கிறேன்' என்று மனைவியிடம் சொல்லவும் செய்வார்கள். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் நடக்காது. கடைசியில் எல்லா வேலைகளும் சேர்ந்து வழக்கம்போல் மனைவி தலையில்தான் விழும். அதனால் இந்த விஷயத்தில் கணவர் கொடுக்கும் வாக்குறுதி காற்றில் பறந்துவிடுவதால், மனைவி மார்கள் பெரும்பாலும் அவர்களை நம்புவதில்லை.

    அதே நேரத்தில் 'வேலை முடிந்து வீடு திரும்புவதில் தாமதம் ஏற்படுதல்' என்ற சிந்தாந்தம் மறைந்துகொண்டிருக்கிறது. ஏன்என்றால் முன்பெல்லாம் பெண்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரைதான் என்ற நிலை இருந்தது. அதனால் அவர்கள் வேலைமுடிந்து, அடுத்த ஒன்றிரண்டு மணி நேரத்தில் வீடு திரும்பும் வாய்ப்பு இருந்தது. இன்றைய நிலை அதுவல்ல. ஆண்களைப்போல் பெண்களும் இரவு ஷிப்ட்டில் பணியாற்றுகிறார்கள். நள்ளிரவிலோ, அதிகாலையிலோ வீடு திரும்புகிறார்கள். அதனால் இரவு, நள்ளிரவு, தாமதம் என்பன போன்றவை எல்லாம், வேலைக்குப் போகும் பெண்களிடமிருந்து வழக்கொழிந்து கொண்டிருக்கின்றன.

    * பஸ், ரெயிலில் பயணம் செய்து வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சினைகள் என்னென்ன என்ற கேள்விக்கு..?

    - 61 சதவீதம் பேர், சரியான நேரத்தில் அலுவலகத்திற்கு செல்ல முடிவதில்லை என்றும், அதுபோல் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீடு திரும்ப முடியவில்லை என்றும் கூறியிருக் கிறார்கள்.

    - 27 சதவீதம் பேர், பயணத்திலே அதிக நேரத்தை செலவிடுவதால் ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுவதாக சொல்கிறார்கள்.

    - 12 சதவீத பெண்கள் பாலியல்ரீதியான தொந்தரவுகள் பயணத்தில் உருவாகுவதாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

    • சுயதொழில் செய்யும் பழக்கம் பெண்களிடம் அதிகரித்து வருகிறது.
    • தென்னை நார் மருத்துவ குணம் கொண்டதுடன், எளிதில் கிடைக்கக்கூடியது.

    வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்யும் பழக்கம் பெண்களிடம் அதிகரித்து வருகிறது. அதற்கான கடன் உதவி, வழிகாட்டுதல், சந்தைப்படுத்துதல் என பல்வேறு வகையிலான திட்டங்களை அரசும், தனியார் அமைப்புகளும் உருவாக்கி, சுயதொழிலில் ஈடுபடும் பெண்களை ஊக்கப்படுத்தி வருகின்றன. எனினும், நாம் செய்யும் தொழிலின் தயாரிப்பும், உற்பத்திப் பொருளும் தனித்துவமாக இருந்தால் அதில் அதிக லாபம் பெற முடியும்.

    அந்த வகையில், குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் 'தென்னை நார் கால்மிதியடி தயாரிப்பு' தொழில் குறித்த விளக்கமான தகவல்களை இங்கு பார்க்கலாம்.

    பொதுவாக நாம் தயாரிக்கும் பொருள் இயற்கையாகவும், சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையிலும் இருந்தாலே அது நிச்சயம் வெற்றி பெறும். அந்த வகையில் தென்னை நார் கால் மிதியடி, பயன்படுத்துபவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்தவிதத்திலும் கெடுதல் அளிக்காது. ஆகையால், இவற்றை விற்பனை செய்வதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது.

    இது தவிர, நாம் உற்பத்தி செய்யும் பொருளின் சிறப்பம்சம் மற்றும் நன்மைகளை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமான ஒன்று. தென்னை நார் மருத்துவ குணம் கொண்டதுடன், எளிதில் கிடைக்கக்கூடியது. விலை குறைவானது. எளிதில் பயன்படுத்தக்கூடியது. மேலும், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் துணியால் செய்யப்பட்ட கால்மிதியடிகளை விட பாதுகாப்பானது, உடல் நலம் மற்றும் சுற்றுப்புறத்துக்கு தீங்கு விளைவிக்காது.

    கால்மிதியடிகள் தயாரிக்க தேங்காய் நார், கயிறு திரிக்கும் இயந்திரம் மற்றும் மேட் தயாரிக்கும் இயந்திரம் தேவைப்படும். இதை இயக்குவது மிகவும் எளிதானது. அரசு மானியத்தின் மூலம் அல்லது சுயதொழில் கடன் உதவி மற்றும் மகளிர் சுய உதவி மூலமாக மானிய முறையில் இயந்திரம் வாங்கலாம். இந்த இயந்திரத்தில் முதலில் தேங்காய் நாரை கயிறாக திரிக்கும் வசதி இருக்கும்.

    அதைப் பயன்படுத்தி கயிறு திரித்து பின் அதை சீராக்கி, கால்மிதியாக தயாரிக்கலாம். இதற்கான பயிற்சி, மத்திய கயிறு வாரியத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. ஒரு கிலோ தேங்காய் நாரில் 2 கால்மிதியடிகள் தயாரிக்கலாம். குறைந்த பட்சமாக ஒரு வாரத்தில் 100 கிலோ தேங்காய் நார் கொண்டு 200 கால்மிதியடிகள் தயாரிக்க முடியும். ஒரு கிலோ தேங்காய் நாரின் இப்போதைய விலை 50 ரூபாய்.

    ஆனால், நேரடியாக தென்னை சாகுபடி செய்பவர்களிடம் மொத்த விலைக்கு வாங்கும்போது இதன் விலை மேலும் குறையலாம். தவிர, தயாரிப்பு செலவுகள் சேர்த்து ஒரு 'மேட்' தயாரிக்க சுமார் 70 ரூபாய் ஆகும். ஒரு மேட்டை 90 முதல் 120 ரூபாய் வீதம் நேரடியாக சந்தையில் விற்கலாம். அல்லது மொத்த விலைக் கடையில் பங்குதாரர் முறையில் விற்கலாம். ஆன்லைனில் தனியாகவும், மொத்தமாகவும் விற்கலாம்.

    • ஆண்களை விட பெண்கள்தான் தினமும் அதிக நேரம் வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள்.
    • அலுவலக வேலை நேரம் தவிர்த்து வீட்டில் முழு நேர வேலை செய்ய வேண்டிய சூழல் பெண்களுக்கு இருக்கிறது.

    ஆண்களை விட பெண்கள்தான் தினமும் அதிக நேரம் வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். அலுவலக வேலை நேரம் தவிர்த்து வீட்டில் முழு நேர வேலை செய்ய வேண்டிய சூழல் பெண்களுக்கு இருக்கிறது. காலையில் தேநீர் தயாரித்து குடும்பத்தினருக்கு கொடுப்பது முதல் இரவில் உணவு சமைத்து பரிமாறுவது வரை ஓய்வில்லாமல் உழைக்கும் சுபாவம் பெண்களுக்கு உண்டு. அப்படி அதிக நேரம் வேலை செய்யும்போது ஒருவித சோர்வு எட்டிப்பார்க்கும். சற்று நிதானத்தோடு சிந்தித்து செயல்பட்டால் பெண்கள் தங்கள் உடல் நலனையும், மன நலனையும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.

    சோர்வு: உணவை தவிர்ப்பது, போதுமான தூக்கம் இல்லாதது, தண்ணீர் குடிக்காதது, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்வது உள்ளிட்ட பல காரணங்களால் சோர்வு ஏற்படலாம். பெண்கள் தொடர்ந்து பிஸியாக இருந்தாலோ, நீண்ட நேரம் வேலை செய்து கொண்டிருந்தாலோ ஊட்டச்சத்து விஷயத்தில் கவனம் செலுத்த மறந்து விடுகிறார்கள். தூக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் குறைவான நேரமே தூங்குகிறார்கள். முழு உடல் ஆற்றலையும் தங்களின் வேலைகளுக்கு செலவிடுகிறார்கள். வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உடல் நலத்தில் அலட்சியம் கொள்வது நீரிழிவு நோய், தைராய்டு, வைட்டமின் குறைபாடு போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.

    மாதவிடாய் பிரச்சினைகள்: பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்படுவது பொதுவானது. மாதவிடாய் காலங்களில், கடுமையான தசை பிடிப்புகளையும் சமாளிக்க வேண்டியிருக்கும். அதிலும் பி.சி.ஓ.டி. எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடல் பருமன், டைப்-2 நீரிழிவு நோய், இதய நோய், மலட்டுத்தன்மை மற்றும் மாதவிடாய் சுழற்சியின்போது முகப்பரு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது.

    மன அழுத்தம்: நீண்ட நேரம் வேலை செய்யும் பெண்கள் அதிக மன அழுத்தத்தை எதிர்கொள்வதை ஆய்வுகளும் உறுதிபடுத்தியுள்ளன. அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஆற்றலை கையாளும் திறன் தன்னிடம் இல்லை என்பதை மூளை உணரும்போது, மன உளைச்சலை அனுபவிக்க வேண்டியிருக்கும். இருப்பினும் நிதி சிக்கல்கள், உறவுகளில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் உடல்நல பாதிப்பு காரணமாகவும் திடீர் மன அழுத்தம் ஏற்படலாம். அந்த சமயத்தில் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

    பலவீனம்: பொதுவாக பெண்கள் உணவில் போதுமான ஊட்டச்சத்துக்களை சேர்த்துக்கொள்ளாதபோது பலவீனத்தை எதிர்கொள்கின்றனர். இது ரத்த அழுத்தம், குறிக்கோள் மீது ஆர்வமின்மை, வேலையில் செயல்திறன் குறைதல் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இவை அனைத்தும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். சமச்சீரான உணவு பழக்கத்தை கையாள்வது பற்றி உணவியல் நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது பல வீனத்தை குறைக்க உதவும்.

    செரிமான பிரச்சினைகள்: உணவுப்பழக்கம், பாக்டீரியா தொற்றுகள், உட்கொள்ளும் சில மருந்துகள் போன்றவற்றால் திடீர் செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம். ஒவ்வொரு பெண்ணும் தினமும் மூன்று வேளையும் ஆரோக்கியமான, சமச்சீரான உணவு உட்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் ஆரோக்கியமான நொறுக்கு தீனிகளை சாப்பிடலாம். நீண்ட வேலை நேரத்தால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் உடல்நல பிரச் சினைகளை தடுப்பதற்கு சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது. தினமும் சில நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யலாம். அதன் மூலம் வெளியாகும் எண்டோர்பின்கள் மன அழுத்தத்தை குறைத்து, மகிழ்ச்சியையும் தக்க வைக்க உதவும். ஓய்வுக்கு போதிய நேரம் ஒதுக்குவதன் மூலமும், பிரச்சினைகளை சமாளிக்கும் திறன்களை வளர்த்துக்கொள்வதன் மூலமும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

    • ஆண்கள் 31 லட்சத்து 7 ஆயிரத்து 600 பேர், பெண்கள் 35 லட்சத்து 77 ஆயிரத்து 671 பேர் மூன்றாம் பாலினத்தவர் 266 பேர்.
    • வயது வாரியாகவும் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவுதாரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஏப்ரல் 30-ந்தேதி நிலவரப்படி, தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவுதாரர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 66 லட்சத்து 85 ஆயிரத்து 537 ஆகும்.

    இதில், ஆண்கள் 31 லட்சத்து 7 ஆயிரத்து 600 பேர், பெண்கள் 35 லட்சத்து 77 ஆயிரத்து 671 பேர் மூன்றாம் பாலினத்தவர் 266 பேர்.

    வயது வாரியாகவும் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவுதாரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 17 லட்சத்து 65 ஆயிரத்து 888 பேர். 19 முதல் 30 வயதுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர் கள் 28 லட்சத்து 43 ஆயிரத்து 792 பேர் ஆவர்.

    31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 18 லட்சத்து 32 ஆயிரத்து 990 பேர். 46 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 36 ஆயிரத்து 756 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 ஆயிரத்து 111 பேர் உள்ள னர். இந்நிலையில், பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் காரணமாக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • வேலை வாங்கித்தருவதாக ரூ.1 லட்சம் மோசடி செய்தனர்.
    • வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி. இவரது மகன் பொன் சங்கிலிபாபு. எம்.பி.ஏ. முடித்துள்ள இவர் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். இந்தநிலையில் ராஜபாளையத்தில் வேலைக்கு ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் நிறுவனம் பொன் சங்கிலிபாபுவுக்கு ரஷ்யாவில் வேலை வாங்கித்தருவதாக கூறியுள்ளது. இதனை நம்பி அவர்களது கணக்கில் தேன்மொழி ரூ.1 லட்சம் செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் வேலை வாங்கி கொடுக்காமல் தலைமறைவாகி விட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பண மோசடி செய்ததாக பிள்ளையார்குளத்தை சேர்ந்த பொம்மன், அவரது மனைவி நாகலட்சுமி ஆகியோர் மீது வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் திட்டத்தையும் தவிர்க்கவும்.
    • எல்லா நாளும் ஒரே மாதிரியான உத்வேகத்தில் பணிகளைச் செய்வது கடினம்.

    இல்லத்தரசிகள், வீட்டில் இருந்தே பணிபுரிபவர்கள், அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் என யாராக இருந்தாலும், திட்டமிட்டு செயல்படுவது முக்கியமானது. கடினமாக உழைப்பதைவிட, புத்திசாலித்தனமாக உழைப்பது சிறந்தது. அதற்கு ஏற்றவகையில், நமது அன்றாட வேலைகளை எவ்வாறு எளிய முறையில் செய்வது என்று தெரிந்துகொள்வோம்.

    செய்யும் வேலையை விரும்பிச் செய்வது, அதை எளிதாகவும், வெற்றிகரமாகவும் முடிப்பதற்கு உதவும்.

    ஒரு வேலையை செய்வதன் மூலம், உங்களுக்கு நிச்சயமான பலன் உண்டு என்றால் அதற்கு முன்னுரிமை கொடுங்கள். அதன் விளைவாக மற்ற வேலைகளை செய்வதற்கான உற்சாகம் உண்டாகும். நேரத்தை அதிகமாக செலவிட்டாலும் பெரிதாக பலன் இல்லாத வேலைகளை இறுதியாகச் செய்யுங்கள்.

    வேலைகளை சுமுகமாக செய்து முடிப்பதற்கு திட்டமிடுதல் அவசியம். அதே சமயம் அதிகமாக திட்டமிடுவது வேலைகளுக்கான நேரத்தைக் குறைத்து மனஅழுத்தத்தை உண்டாக்கும். மேலும் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் திட்டத்தையும் தவிர்க்கவும். பின்பற்றக்கூடிய வகையிலான திட்டங்களை மட்டும் தீட்டவும்.

    வேலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டம் தீட்டி, நேரம் ஒதுக்கி செயல்படும்போது, உங்கள் பட்டியலில் இல்லாத வேலைகள் திடீரென வந்தால், அவற்றை ஆராய்ந்து தள்ளி வைப்பதே சிறந்தது. மாறாக, அந்த வேலையையும் சேர்த்துக்கொண்டால், நீங்கள் திட்டமிட்ட மற்ற வேலைகளை முடிப்பது சிரமமாகும்.

    நீங்கள் மேற்கொள்ளும் வேலைக்கான விவரங்கள் உங்களுக்கு புரியாதபோது, அவற்றை சம்பந்தப்பட்ட நபரிடம் மீண்டும் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். வேலையை புரியாமல் செய்யும்போது, நேரம் வீணாகுவதுடன், வெற்றியும் கிடைக்காமல் போகும். மேலும் தேவையற்ற சந்திப்புகள், பேச்சுக்கள் போன்றவற்றை தவிர்ப்பது நேரத்தை மிச்சப்படுத்தும்.

    தவறான புரிதல்களைத் தவிர்ப்பதற்கு தெளிவான தொடர்பு முறை அவசியமானது. பேசும்போதும், ஏதேனும் ஒன்றை மற்றவருக்கு விளக்கும்போதும் தெளிவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். திட்டமிட்ட வேலையை வெற்றிகரமாக செய்வதற்கு, அவற்றை பகுதிகளாகப் பிரித்து தகுந்தவர்களிடம் ஒப்படைக்கலாம். இதன் மூலம், மற்றவர்களின் பணிகளைக் கற்றுக்கொள்ள முடியும்.

    எல்லா நாளும் ஒரே மாதிரியான உத்வேகத்தில் பணிகளைச் செய்வது கடினம். திட்டமிட்ட பணிகள் எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான ஆற்றலை உங்களால் செலவிட முடியாது. எனவே அதை எண்ணி மனஅழுத்தம் கொள்ளாதீர்கள்.

    வேலை செய்வதற்கு உட்காருவதற்கு முன்னால், அதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் அருகில் இருக்குமாறு எடுத்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் நேரம் மிச்சமாகுவதுடன், வேலையை எளிதாக செய்ய முடியும்.

    • உணர்ச்சி வசப்பட்டாலும் எந்த காரியமும் கைகூடாது.
    • உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

    வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிரமங்களை எளிதாக கையாள்வதற்கும், தேர்ந்தெடுக்கும் வேலையை திறமையாக செய்து முடிக்கவும் மனம் தெளிந்த நிலையில் இருக்க வேண்டும்.

    ஏதேனும் மன குழப்பங்களுக்கு ஆளானால் எந்தவொரு காரியத்தையும் சிறப்பாக செய்துமுடிக்க முடியாது. எளிதில் உணர்ச்சி வசப்பட்டாலும் எந்த காரியமும் கைகூடாது. உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். எதிர்மறையான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. கோபம், சோகம், வேதனை, மன அழுத்தம் போன்றவை உணர்வுகளை தடுமாற வைக்கும். வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை சமாளித்து உணர்வுகளை நிர்வகிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். அது உணர்ச்சிகளை கையாள்வதற்கு உதவிகரமாக அமையும்.

    சந்தோஷமாக இருந்தாலோ, மனக்கவலை அடைந்தாலோ உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு தயங்கக்கூடாது. உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் அதனை பகிர்ந்து கொள்ளுங்கள். ஒருபோதும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாதீர்கள். ஏனெனில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.

    ஏதாவதொரு சூழலில் மன நெருக்கடிக்கு ஆளானால் சிறிது நேரம் தனிமையில் இருக்கலாம். எந்த வேலையிலும் ஈடுபடாமல் மனதை அமைதியாக வைத்திருக்கலாம். அந்த சமயங்களில் அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்கக்கூடாது. மனதை வேறு செயல்களில் ஈடுபடுத்தலாம். அல்லது ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். மன அழுத்தம்தான் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய எதிரி. ஒருவேளை மன அழுத்தத்திற்கு ஆளானால் அதில் இருந்து மீள்வதற்குரிய வழிமுறைகளை கற்றுக்கொள்ள வேண்டும்.

    மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் பயிற்சிகளில் ஈடுபடலாம். ஆழ்ந்த சுவாசம், தியானம், உடற் பயிற்சி போன்ற உடலை தளர்வடைய செய்யும் பயிற்சிகளில் கவனம் செலுத்தலாம். விளையாடுவதற்கும் போதிய நேரம் ஒதுக்குங்கள். குழந்தைகள்தான் ஓடி ஆடி விளையாட வேண்டும் என்றில்லை.

    அவர்களுடன் சேர்ந்து குழு விளையாட்டுகளில் ஈடுபடலாம். மனதிற்கு பிடித்தமான எந்தவொரு விளையாட்டையும் தயங்காமல் மேற்கொள்ளலாம். நடனமும் ஆடலாம். தவறாமல் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவை உண்பது, போதுமான நேரம் தூங்குவது போன்றவை மன நலனை பாதுகாக்கவும், உணர்வுகளை சம நிலையில் பராமரிக்கவும் உதவும். மன நெருக்கடியில் இருக்கும் சமயங்களில் நெருக்கமானவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துங்கள். அவர்களுடன் குழு விவாதங்களிலும் ஈடுபடலாம். வெளி உலக தொடர்பை வளர்த்துக்கொள்வதும் அவசியமானது. தொண்டு நிறுவனங்களில் சேர்ந்து பணி புரியலாம். தன்னார்வலர்களாக மாறி அவ்வாறு சமூக சேவைகள் புரிவது மனதிற்கு ஆத்ம திருப்தியை தரும். அர்த்தமுள்ள செயல்களில் நேரத்தை செலவிடுகிறோம் என்ற மன நிறைவும் கிடைக்கும். உங்கள் நலனில் அக்கறை கொள்பவர்களுடன் சிரித்து பேசி மகிழ்வதும் உணர்ச்சி ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க துணை புரியும்.

    • பெண்கள் பகுதி நேர சுயதொழிலாக செய்வதற்கு ஏற்றது 'ஆர்கானிக் கண் மை தயாரிப்பு'.
    • முதலில் இதைச் சிறிய அளவில் செய்து நீங்கள் உபயோகித்துப் பாருங்கள்.

    கண் மை, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழகுக்காகவும், மருத்துவ நன்மைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஆரம்ப காலத்தில் பசுங்கற்பூரம், நெய், தாவர எண்ணெய் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டது. தற்போது, வணிக ரீதியான லாபம் பெற இயற்கை பொருட்களுடன் ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. சிலவகை கண் மைகளில் 'ஈயம்' மூலக்கூறுகள் அதிகமாக சேர்க்கப்படுகிறது. இவை கண் தசைகளை சேதப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், பார்வைத் திறனையும் பாதிக்கக்கூடும். எனவே, இயற்கையான பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படும் ஆர்கானிக் கண் மைகளைப் பயன்படுத்துவது நல்லது.

    ஆர்கானிக் கண் மைகளில் கண்களுக்கு நன்மை தரக்கூடிய இயற்கையான மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை கண்களின் ஈரப்பதத்தை பாதுகாத்து, அவற்றை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். கண்களுக்கு பிரகாசத்தையும், புத்துணர்வையும் கொடுக்கும். கண்களின் தசைகளை வலுப்படுத்தி பார்வைத் திறனை மேம்படுத்தும்.

    ஆர்கானிக் சாதனம் சுத்தமான முறையில் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம். இது பெண்கள் பெரிதும் விரும்பும் அழகு சாதனப் பொருள் என்பதால், இதனை தயாரித்து விற்பனையும் செய்யலாம். பகுதி நேர சுயதொழிலாக செய்வதற்கு ஏற்றது 'ஆர்கானிக் கண் மை தயாரிப்பு'.

    எந்த ஒரு பொருளையுமே, விற்பனை செய்யும் முன்பு முதலில் அதனை நாம் பயன்படுத்திப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய தயாரிப்பைப் பற்றி நம்பிக்கையுடன் மற்றவர்களிடம் எடுத்துச் சொல்ல முடியும். முதலில் இதைச் சிறிய அளவில் செய்து நீங்கள் உபயோகித்துப் பாருங்கள். பிறகு சந்தைப்படுத்த ஆரம்பிக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பெரிய அளவு மண் அகல் - 1

    சந்தனத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

    வெள்ளை நிற பருத்தி துணி - 1 சிறிய துண்டு

    பசுநெய் - 3 டேபிள் ஸ்பூன்

    பாதாம் பருப்பு - 1 சிறிய

    அகலமான கண்ணாடி குப்பி - 1

    டீஸ்பூன் - 1

    செய்முறை: சந்தனத்தூளில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, டீஸ்பூன் மூலம் கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளுங்கள். அதில் பருத்தித் துணியை நன்றாக நனைத்து நிழலில் உலர்த்துங்கள். பிறகு, அதைத் திரி போல சுருட்டிக் கொண்டு, அகல் விளக்கில் வைத்து நெய் ஊற்றி தீபத்தை ஏற்றுங்கள். விளக்கின் இரண்டு பக்கமும் நீளமான டம்ளர்களை ஸ்டாண்ட் போல வைத்து, எவர்சில்வர் அல்லது மண் தட்டு ஒன்றை அவற்றின் மீது கவிழ்த்து வையுங்கள்.

    பாதாம் பருப்பை ஒரு இடுக்கியால் பிடித்துக் கொண்டு விளக்கில் காண்பிக்க வேண்டும். அது நன்றாக எரிந்ததும் ஆறவைக்கவும். பின்பு அதை ஒரு சிறிய உரலில் போட்டு இடித்து தூளாக்கிக்கொள்ளவும். அகலில் நெய் தீர்ந்ததும் அதை அணைத்து, அதன் மேலே கவிழ்த்திருக்கும் தட்டை சிறிது நேரம் ஆற வைக்கவும். பிறகு தட்டை எடுத்து பார்த்தால் அதன் மீது கரி படிந்திருக்கும்.

    அதனை டீஸ்பூனால் சுரண்டி சேகரித்து கண்ணாடி குப்பியில் கொட்டவும். அதனுடன் பொடித்து வைத்திருக்கும் பாதாம் கரியையும் கலந்து கொள்ள வேண்டும். கண்ணாடி குப்பியை காற்று புகாமல் மூடி வைக்கவும். இதை நெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாகக் குழைத்து பயன்படுத்தலாம்

    • மதுரையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 21-ந் தேதி நடக்கிறது.
    • 50-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தேர்வு செய்ய உள்ளனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவ னங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலைநாடும் இளை ஞர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம். வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவ னங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள த்தில் சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப் படத்துடன் 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை)காலை 10 மணிக்கு மதுரை, புதூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறு வதால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது. மேற்கண்ட தகவல் மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும்.
    • நீங்கள் தொழில் தொடங்க உங்கள் குடும்பத்தினரே உறுதுணையாக இருப்பார்கள்.

    இன்றைய காலகட்டத்தில் தொழில் தொடங்க நினைக்கும் இளம் தலைமுறையினருக்கு நமது அரசாங்கம் பல்வேறு திட்டங்களை வகுத்துத் தருகிறது. உதாரணமாக தமிழக அரசு அளிக்கும் 'ஸ்டார்ட் அப் டி.என்' என்ற திட்டம் மிகவும் உபயோகரமாக உள்ளது. அதனை, பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த திட்டத்தில் இளம் தலைமுறையினர் தங்களது யோசனைகளை முன் வைத்தால் மட்டுமே போதுமானது. நல்ல யோசனைகளை தேர்ந்தெடுத்து அதற்கேற்றவாறு நிதி உதவி வழங்கி வருகின்றனர்.

    கடனாக அல்லாமல் உதவியாகவே வழங்குகின்றனர். அதுமட்டுமின்றி கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 'ஆன்ட்ரப்ரனர்ஷிப்' என்ற வகுப்பை உருவாக்கி தொழில் தொடங்கும் ஆலோசனைகளையும், வழிமுறைகளையும் கற்று தருகின்றனர். இதன் மூலம் மாணவர்கள் படிப்பை முடித்ததும் வேலைக்கு செல்லாமல் நிறுவனம் தொடங்கலாம் என்ற மனநிலைக்கு மாறுகின்றனர். நானும் அத்தகைய வகுப்புகளை கல்லூரிகளில் நடத்தி வருகின்றேன். எனவே தொழில் தொடங்க விரும்புபவர்கள் நல்ல யோசனைகளை மட்டும் முன்வைத்து இத்தகைய திட்டங்களை பயன்படுத்திக் கொண்டாலே போதுமானது.

    முதலாவது, நிறுவனம் தொடங்க நினைப்பவர்கள், ஆரம்ப காலகட்டத்தில் பணிக்கு நிறைய ஆட்களை சேர்க்கக்கூடாது. உங்களால் எவ்வளவு சம்பளம் கொடுக்க முடியும் என்பதை பொறுத்து குறைவான ஆட்களை சேர்த்தால் போதுமானது. இரண்டாவது ஊழியர்களுக்கு தகுதியான ஊதியம் வழங்க வேண்டும். குறைவான சம்பளம் கொடுத்தால் அவர்கள் அனுபவத்தை பெற்றுக்கொண்டு, மற்றொரு நிறுவனத்திற்கு பணியாற்ற சென்று விடுவார்கள்.

    இதனால் நாம் மீண்டும் பணத்தை செலவழித்து ஆட்கள் சேர்க்கும் நிலை ஏற்படும். நிதியை நிர்வகிக்க, கணக்கு வழக்குகளை பார்க்க ஆட்களை பணியில் அமர்த்தியிருந்தாலும், ஒரு நிறுவனராக நாமும் அதனை கவனிக்க வேண்டும். இப்பொழுது ஆரம்பிக்கப்படும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வியடைய இவைதான் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. எனவே, இதையெல்லாம் கருத்தில் கொண்டு நிறுவனத்தை தொடங்க வேண்டும்.

    சமூகம் பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பேசினாலும், ஒரு பெண் சுயமாக நிறுவனத்தை தொடங்கினாலும் சிலர் எதிர்மறையாக பேசத்தான் செய்வார்கள்.

    பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் இருப்பதுதான் பெண்களுக்கான பெருந்தடை. பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும். ஏட்டுப் படிப்பை மட்டுமே கற்றுக்கொள்ளாமல், பிற திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். சமூக ஊடகங்களை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்த வேண்டும். உங்களிடம் திறமையும், நிதி மேலாண்மையும் இருந்தாலே போதும். நீங்கள் தொழில் தொடங்க உங்கள் குடும்பத்தினரே உறுதுணையாக இருப்பார்கள்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ. 1 லட்சம் மோசடி நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பாக்கு வெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (வயது 30).இவர் ஐ.டி.ஐ.படித்து முடித்துள்ளார். தற்போது முதுகுளத்தூரில் உள்ள கேஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் இணைய தளத்தில் ஏர்போர்ட் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்துள்ளார். 

    இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 12- ந்தேதி ராமரின் மொபைல் எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபர் வேலை வாய்ப்பு பதிவு குறித்து விபரம் கேட்டு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார். 

    மேலும் அவர் அதற்கான பதிவு கட்டணம் மற்றும் பல்வேறு காரணங்களை கூறி ரூ. 96 ஆயிரத்து 950 கேட்டுள்ளார். அதனை அவர் தெரிவித்த அவர்களால் தெரிவிக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு ராமர் அனுப்பி உள்ளார். வேலைக்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி ஒரு வருடம் ஆகியும் எவ்வித தகவலும் இல்லாத தால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

    இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் விசாரித்த போது போலி நபர்கள் என தெரிய வந்தது. இதையடுத்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் ராமர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    ×