search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேப்பமூடு"

    • சேதமடைந்து கிடந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க உத்தரவு
    • தற்காலிக கடைகளும் வைக்கப்பட்டுள்ளதை பார்த்து மேயர் மகேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வேப்ப மூடு பூங்காவை மாநகராட்சி பராமரித்து வருகிறது. இந்த பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து காணப்படுவதாகவும் குப்பைகள் அதிக அளவு உள்ளதாகவும் மாலைமலரில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக மேயர் மகேஷ் இன்று காலை வேப்பமூடு பூங்காவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    சேதமடைந்து காணப்பட்ட விளையாட்டு உபகரணங்களை பார்வையிட்ட அவர், இதை உடனடியாக மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பூங்கா முழுவதும் சுற்றி ஆய்வு மேற்கொண்டபோது பூங்காவிற்குள் புதர்கள் வளர்ந்து காணப்பட்டது. அதை உடனடியாக அகற்றவும் நடவடிக்கை மேற்கொண்டார். அங்கு உள்ள குப்பை தொட்டிகள் நிரம்பி காணப்பட்டதை பார்த்த அவர், தினமும் அகற்ற அறிவுறுத்தினார்.

    கழிவறைக்கு சென்று பார்வையிட்ட மேயர் மகேஷ், தினமும் சுத்தம் செய்து பராமரிக்க உத்தர விட்டார். கழிவறையின் மேல் வளர்ந்துள்ள மரங்களை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து பூங்காவிற்கு வெளிப்புறம் உள்ள நாஞ்சில் பஜாரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அங்கு கடையின் முன் பகுதியில் கடைக்காரர்கள் ஆக்கிரமித்து செட்டுகள் அமைத்திருந்தனர். மேலும் தற்காலிக கடைகளும் வைக்கப்பட்டுள்ளதை பார்த்து மேயர் மகேஷ் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அதிகாரிகளை அழைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். மேலும் தற்காலிக கடைகள் அமைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார். நாஞ்சில் பஜாரை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வியாபாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வேப்பமூடு பூங்காவிற்கு நாகர்கோவில் நகரின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தோடு வந்து செல்கிறார்கள். இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் குழந்தைகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமாக உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு சில விளையாட்டு உபகரணங்கள் மட்டுமே சேதம் அடைந்துள்ளது.

    அதை உடனடியாக சீரமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பூங்காவில் உள்ள குப்பைகளை தினமும் அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாஞ்சில் பஜாரில் ஆக்கிரமிப்புகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றை அகற்ற கடைக்காரர்களுக்கு இன்று ஒரு நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றா விட்டால் மாநகராட்சி சார்பில் நாளை ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு சம்பந்தப்பட்ட கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள 53 பூங்காவையும் புணரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது ஆணையாளர் ஆனந்த மோகன், பொறியாளர் பாலசுப்ரமணியன், மாநகர் நல அதிகாரி ராம்குமார், மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல்
    • செயற்கை நீரூற்றுகளை சீரமைக்க மாநகராட்சி மேயர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகர மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக வேப்பமூடு பூங்கா திகழ்ந்து வருகிறது.

    இந்த பூங்காவில் காலை மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கி ழமைகளில் கூட்டம் அலை மோதி வரு கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் இந்த பூங்காவிற்கு வந்து செல்கிறார்கள். இந்த பூங்காவை மேம்படுத்த மாநகராட்சி மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்கொண் டார்.

    இதையடுத்து பூங்கா வில் இருந்த விளை யாட்டு உபகரணங்கள் மேம்படுத்தப்பட்டது.பொதுமக்கள் செல்பி எடுத்துக் கொள்ள வசதி யாக செல்பி பாய்ண்ட் அமைக்கப்பட்டு உள்ளது.மேலும் சிறுவர்களுக்கான ராட்டினங்களும் அமைக்கப் பட்டு உள்ளது.

    இந்த ராட்டினங்களில் ஏற கடந்த சில நாட்களாக கூட்டம் அலைமோதி வருகிறது. பொதுமக்கள் ஆர்வமாக இந்த ராட்டி னங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காக கட்டணங்களும் வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    இதே போல் மேலும் சில விளையாட்டு உபகர ணங்களை பூங்காவில் அமைக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்றுகள் பாழடைந்து மோசமாக காணப்படுகிறது. அதனை செயற்கை நீரூற்றுகளை சீரமைக்க மாநகராட்சி மேயர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.

    • இன்று முதல் அமலுக்கு வந்தது
    • 10 நாட்களுக்குள் பணியை முடிக்க திட்டம்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்க டியை குறைக்க மாநகராட்சி நிர்வாகமும் போக்குவரத்து போலீசாரும் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலக பகுதியில் ரவுண்டானா அமைக்கும் பணி நடந்து வருகிறது.மேலும் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் இருந்து வெட்டூர்ணிமடம் செல்லும் சாலை விரி வாக்கம் செய்யப்பட்டு இரு வழிப்பாதையாக மாற்ற வும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதே போல் டதி பள்ளி சந்திப்பில் இருந்து வேப்ப மூடு வரை உள்ள சாலையை விரிவாக்கம் செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. மேயர் மகேஷ் அந்த சாலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து சாலை விரிவாக்க பணி மற்றும் பார்க்கிங் வசதியை ஏற்படுத்த ரூ1.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. டதி பள்ளி சந்திப்பு பகுதியில் வாகனங்கள் நிறுத்த ஏதுவாக மணல்கள் நிரப்பப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து சாலையில் உள்ள நடை பாதையை அகற்றிவிட்டு கழிவுநீர் ஓடையின் மேல் நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதனால் ஏற்கனவே இருந்த நடைபாதையை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது.

    ஜே.சி.பி. எந்திரம் மூல மாக நடைபாதைகள் இடிக் கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் நேற்று போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.இந்த நிலையில் வேப்ப மூட்டில் இருந்து டதி பள்ளி செல்லும் சாலையில் போக்குவரத்து இன்று முதல் மாற்றப்படும் என்று போக்குவரத்து போலீசார் அறிவித்திருந்தனர்.

    அதன்படி இன்று அதி காலை முதலே பஸ் போக்கு வரத்து உள்பட அனைத்து போக்குவரத்தும் மாற்றப்பட்டது. கன்னியா குமரியிலிருந்து வடசேரி பஸ் நிலையத்திற்கு செல் லும் அனைத்து பஸ்களும் செட்டிகுளத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வழியாக திருப்பி விடப் பட்டது. இதனால் செட்டி குளம் கலெக்டர் அலுவலக பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    போக்குவரத்து போலீசார் அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். வேப்பமூடு டதி பள்ளி சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இந்த சாலையில் செல்லாமல் இருக்கும் வகையில் தடுப்பு வேலிகள் அமைத்து மூடப் பட்டு இருந்தது.போக்கு வரத்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர்.

    ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் சாலை சீர மைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியை குறுகிய காலத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.நடை பாதை இடித்து அப்புறப் படுத்தப்பட்டதை யடுத்து கழிவு நீர்ஒடையின் மேல் நடைபாதை அமைக்கப்ப டுகிறது. இதனால் சாலை விசாலமாக காட்சியளிக்கி றது.

    இதையடுத்து சாலையை இரு வழி பாதையாக மாற்று வது தொடர்பாகவும் போக்குவரத்து போலீசாரும் மாநகராட்சி நிர்வாகமும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

    இந்தச் சாலை இருவழிச் சாலையாக மாற்றப்படும் பட்சத்தில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி குறைய வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் தெரிவித்துள்ளனர்.இந்த சாலை பணியை 10 நாட்க ளுக்குள் முடிக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது.

    • பேரணி கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி டதி பள்ளி எஸ்.எல்.பி. பள்ளி வேப்பமூடு வழியாக முதன்மை கல்வி அலுவலகத்தை வந்தடைந்தது.
    • பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளையொட்டி தமிழக அரசு சார்பில் அவரது வாழ்க்கை வரலாறு அடங்கிய அதிநவீன வாகனத்தில் அமைக்கப்பட்டு இருந்த புகைப்பட கண்காட்சியை மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அரவிந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    வாகனத்தில் இருந்த வ.உ. சிதம்பரனார் சிலைக்கு கலெக்டர்அரவிந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த கண்காட்சியை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பார்வையிட்டனர்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அரவிந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து நடந்த பேரணி கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி டதி பள்ளி எஸ்.எல்.பி. பள்ளி வேப்பமூடு வழியாக முதன்மை கல்வி அலுவலகத்தை வந்தடைந்தது.

    பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த வர்கள் கலந்துகொண்ட னர். பேரணியில் கலந்து கொண்ட வர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு வந்தனர்.

    நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா,ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜான் ஜெகத் பிரைட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×