search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராட்டினம்"

    • ராமநாதபுரத்தில் சுவார்ட்ஸ் மைதானத்தில் பொருட்காட்சி நடந்தது.
    • குழந்தைகளுக்கான விளையாட்டுகள், ராட்டினம், கடைகள், சிற்றுண்டி விடுதிகளுடன் தொடங்கப்பட்டுள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கோடைகால விடுமுறையையொட்டி குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்களுடன் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் லண்டன் பிரிட்ஜ் வடிவ நுழைவு வாயிலுடன் பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகளுக்கான விளையாட்டுகள், ராட்டினம், கடைகள், சிற்றுண்டி விடுதிகளுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த பொருட்காட்சியை ராமநாதபுரம் நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் திறந்து வைத்தார்.

    பொருட்காட்சி அமைப்பாளர் சவுந்தரபாண்டியன் வரவேற்றார். கவுன்சிலர்கள் வீரசேகர், ராஜகோபால், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று தொடங்கிய இந்த பொருட்காட்சி ஜூன் 4-ந்தேதி வரை 1மாதம் நடைபெற உள்ளது.

    பொருட்காட்சி மேலாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.பொருட்காட்சி, ராட்டினம், Exhibition, Ratinam,

    • கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல்
    • செயற்கை நீரூற்றுகளை சீரமைக்க மாநகராட்சி மேயர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகர மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக வேப்பமூடு பூங்கா திகழ்ந்து வருகிறது.

    இந்த பூங்காவில் காலை மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கி ழமைகளில் கூட்டம் அலை மோதி வரு கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் இந்த பூங்காவிற்கு வந்து செல்கிறார்கள். இந்த பூங்காவை மேம்படுத்த மாநகராட்சி மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்கொண் டார்.

    இதையடுத்து பூங்கா வில் இருந்த விளை யாட்டு உபகரணங்கள் மேம்படுத்தப்பட்டது.பொதுமக்கள் செல்பி எடுத்துக் கொள்ள வசதி யாக செல்பி பாய்ண்ட் அமைக்கப்பட்டு உள்ளது.மேலும் சிறுவர்களுக்கான ராட்டினங்களும் அமைக்கப் பட்டு உள்ளது.

    இந்த ராட்டினங்களில் ஏற கடந்த சில நாட்களாக கூட்டம் அலைமோதி வருகிறது. பொதுமக்கள் ஆர்வமாக இந்த ராட்டி னங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காக கட்டணங்களும் வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    இதே போல் மேலும் சில விளையாட்டு உபகர ணங்களை பூங்காவில் அமைக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்றுகள் பாழடைந்து மோசமாக காணப்படுகிறது. அதனை செயற்கை நீரூற்றுகளை சீரமைக்க மாநகராட்சி மேயர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.

    ×