என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்காவில் ராட்டினம் அறுந்து சிறுவன் பலி: பெற்றோருக்கு ரூ.2,600 கோடி இழப்பீடு
    X

    அமெரிக்காவில் ராட்டினம் அறுந்து சிறுவன் பலி: பெற்றோருக்கு ரூ.2,600 கோடி இழப்பீடு

    • பூங்காவில் உள்ள ராட்டினத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
    • ஐகான் பார்க் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு உறுதியானது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஆர்லாண்டோ நகரில் ஒரு கேளிக்கை பூங்கா செயல்பட்டு வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு இந்த பூங்காவில் உள்ள ஒரு ராட்டினத்தில் பலர் சவாரி செய்தனர்.

    அப்போது அந்த ராட்டினம் திடீரென அறுந்து விழுந்தது. இதில் 14 வயதான டயர் சாம்ப்சன் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதனையடுத்து பூங்காவில் உள்ள அந்த ராட்டினத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

    மேலும் விபத்தில் பலியான சிறுவனின் குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இதில் கேளிக்கை விடுதிக்கு இடத்தை வாடகைக்கு வழங்கிய ஐகான் பார்க் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு உறுதியானது.

    எனவே ஐகான் பார்க் நிறுவனம் சிறுவனின் பெற்றோருக்கு சுமார் ரூ.2 ஆயிரத்து 600 கோடி இழப்பீடு வழங்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×