search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகளுக்கு பயிற்சி"

    • விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.
    • கால்நடை வளர்ப்பினை ஊக்கப்படுத்துதல் பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தொட்டபடகாண்டஅள்ளி கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் மானாவாரி மேம்பாட்டு திட்டம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.

    இப்பயிற்சியில் கால்நடைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் வழங்குதல், கால்நடை பராமரிப்பு முகாம் நடத்துதல் கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய நோய் கட்டுப்பாட்டு மேலாண்மை, கால்நடைகளுக்கு காப்பீடு வழங்குதல், கோடை உழவு செய்தல், மானாவாரி சாகுபடியை மேம்படுத்துதல், உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரித்தல், மழை நீர் சேகரிப்பு முறைகளை மேம்படுத்துதல், கால்நடை வளர்ப்பினை ஊக்கப்படுத்துதல் பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர் திருமால், வேளாண்மை உதவி அலுவலர் கோவிந்தன், உதவி தொழில்நுட்ப மேலாளர் கிருஷ்ணமூர்த்தி,மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி தொடங்கப்பட்டது.
    • நன்மைகள் குறித்து விளக்கினார்

    குன்னூர்,

    குன்னூர் தோட்டக்கலைத்துறை அட்மா திட்டத்தின் கீழ் மேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட தூதூர்மட்டம் கிராமத்தில் விவசாய சூழல் அமைப்பு பகுப்பாய்வு தொழில்நுட்பங்கள் குறித்து மேரக்காய் சாகுபடி செய்யும் இயற்கை விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி தொடங்கப்பட்டது. இதற்கு தோட்டக்கலை இணை இயக்குனர் (பொறுப்பு) ஷிபிலா மேரி தலைமை தாங்கினார். இயற்கை சாகுபடி செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. விவசாயிகள் சொந்தமாக உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் தயார் செய்வதற்கு செயல்விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது. தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் மண் பரிசோதனை செய்ய வேண்டியதன் அவசியம், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார். இதில் தோட்டக்கலை அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    • 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
    • இயற்கை வேளாண்மை பண்ணையில் நடைபெற்றது.

    அரவேணு

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தோட்டக்கலை மலை பயிர்கள் துறை அட்மா திட்டத்தின் கீழ் உயிரியல் முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து ஒருநாள் பயிற்சி கருத்தரங்கு அளியூர் கிராமத்தில் சிக்மா இயற்கை வேளாண்மை பண்ணையில் நடைபெற்றது.நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் ஹீலாமோரி தலைமை தாங்கினார். நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை பயிற்சி நிலையத்தில் அறங்காவலர் குமார், தொழில்நுட்ப வல்லுநர் மகேஷ் மற்றும் ரமேஷ் சிறப்புரையாற்றினர். தோட்டக்கலை இயக்குனர் ஐஸ்வர்யா இயற்கை வேளாண்மை குறித்து பயிற்சி அளித்தார். குமரகுரு இயற்கை வேளாண்மை குறித்தான இடர்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். தோட்டக்கலை அலுவலர் ரமேஷ் வரவேற்றார். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

    • விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்புக்கான நிதி குறித்து விவசாயிகளுக்கான விளக்க கூட்டம் கம்பம் தோட்டக்கலை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
    • கம்பம் சுற்றுவட்டாரப்பகுதி விவசாயிகள் பங்கேற்றனர்.

    கம்பம்:

    கம்பம் வட்டார தோட்டக்கலை மலைப்பயி ர்கள்துறை மற்றும் ஹெச்.டி.எப்.சி வங்கி இணைந்து விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்புக்கான நிதி குறித்து விவசாயிகளுக்கான விளக்க கூட்டம் கம்பம் தோட்டக்கலை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    தோட்டக்கலை அலுவலர் பழனிவேல்ராஜன் தொடங்கி வைத்து பேசி னார். விவசாய உள்கட்டமை ப்புக்கு தேவைப்படும் கடனுதவி மற்றும் மானிய விபரங்களும், குறிப்பாக ரூ.17.5 லட்சம் 35 சதவீத மானியத்தில் ஒருங்கிணைந்த சிப்பம் கட்டும் அறை, விவசாயிகளுக்கு தேவை யான எந்திரங்கள் கொள்முதல், அறுவடை பின்செய் நேர்த்தி கட்ட மைப்புகளுக்கான கடனுதவி மற்றும் மானிய விபரங்கள் தொடர்பாக விளக்கங்களை தோட்டக்கலை துறை சார்பாகவும் வங்கி அலுவலர்கள் சார்பாகவும் விளக்கி கூறப்பட்டது.

    அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் திட்டங்கள் சார்ந்த தொழில்நுட்பங்களும், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் தக்காளி, மிளகாய், மா, கொய்யா, எலுமிச்சை, பப்பாளி, தென்னைக்கு ஊடுபயிராக கொக்கோ, அத்தி கன்றுகள் மானியத்தி லும், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கொட்டைமுந்திரி மற்றும் முருங்கை கன்றுகள் மானியத்திலும், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தில் காய்கறி விதை கள் மானியத்தில் வழங்குவது குறித்து விவசாயிகளுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநர் பாண்டியராணா விளக்கி கூறினார்.

    இக்கூட்டத்தில் ஹெச்.டி.எப்.சி வங்கி மண்டல விவசாய முதன்மை அலுவலர் ஷியாம் சுந்தர ரெட்டி, வங்கி மேலாளர்கள் தினேஷ், பாலமுரளி மற்றும் கம்பம் சுற்றுவட்டாரப்பகுதி விவசாயிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கான ஏற்பாடு களை உதவி தோட்டக்கலை அலுவலர்கள் விவேகா னந்தன், சுதாகர் செய்தி ருந்தனர்.

    • தென்னையில் ரூக்கோஸ் என்ற வெள்ளை ஈ கட்டுப்படுத்தும் முறைபற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • இந்த செயல் விளக்க நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் வட்டாரம், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரமோகன் தென்னையில் ரூக்கோஸ் என்ற வெள்ளை ஈ கட்டுப்படுத்தும் முறையினை விவசாயிகளுக்கு எடுத்து கூறி அதனை செயல் விளக்கமாக செய்து காண்பிக்க அறிவுறுத்தினார்.

    அதன்படி ரூக்கோஸ் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் முறையினை கொத்தப்புள்ளி, காமாட்சிபுரம், முருநெல்லிக்கோட்டை, கரிசல்பட்டி, குட்டத்துப்பட்டி, சில்வார்பட்டி ஆகிய பகுதி விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது .

    இந்த செயல் விளக்க நிகழ்வில் உதவி வேளாண்மை அலுவலர்கள் பால்ராஜ், முத்துச்சாமி, சந்திரகலா, வெள்ளை சாமி, ராஜி மற்றும் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பொன் தமிழரசு ,அருண்குமார் ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

    • வேளாண்மை எந்திரங்கள் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
    • 70-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    அரவேணு

    கோத்தகிரி வட்டார தோட்டக்கலை துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட கிராமம் கேசலடாவில் வேளாண்மை எந்திரங்கள் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.

    இப்பயிற்சிக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா தலைமை தாங்கினார். கோவை மாவட்ட விதை சான்றளிப்பு துறை அலுவலர் கலந்து கொண்டு விதை சான்றளிப்பு முறைகள் குறித்து விளக்கினர். துணை தோட்டக்கலை அலுவலர் ரமேஷ் தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத் திட்டங்கள் குறித்து விளக்கினார்.

    முன்னாடி விவசாயி கிருஷ்ணன் நவீன வேளாண்மை எந்திரங்கள் மற்றும் பண்ணை கருவிகளின் முக்கியத்துவம் குறித்து பண்ணை எந்திரங்களின் செயல்பாடுகளில் செயல்முறை விளக்கம் அளித்தார். கிஷான் கிராப்ட் நிறுவனத்தின் நிர்வாகி பகவதி ராஜ் பண்ணை கருவிகளின் பராமரிப்பு முறைகள் குறித்து விளக்கினார்.

    ஆட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் தொழில் நுட்ப பயிற்சிகள் மற்றும் செயல்முறை விளக்கம் குறித்து விளக்கினார். உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் துரை வரவேற்றார். செயலர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். 70-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    • விவசாயிகளுக்கு ‘மண்புழு உரம் தயாரித்தல் ’’ குறித்து தொழில்நுட்ப பயிற்சி தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்க கூட்டரங்கில் நடைப்பெற்றது.
    • மாசற்ற சுற்றுபுறசூழலுக்கு உகந்த பண்ணை கழிவுகளை மறுசு ழற்சி செய்யும் தொழில் நுட்ப முறைகளை செய்து பயன் பெற விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வட்டாரம், நல்லூர் கிராம முற்போக்கு விவசாயிகளுக்கு 'மண்புழு உரம் தயாரித்தல் '' குறித்து தொழில்நுட்ப பயிற்சி தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்க கூட்டரங்கில் நடைப்பெற்றது. பயிற்சிக்கு பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.

    அவர் பேசுகையில் மண்புழு உரம் என்பது மண்புழு உற்பத்தி செய்யும் அங்கக உரத்தைக் குறிக்கிறது. மண்புழு உரம் நச்சு அல்லாத திட மற்றும் திரவ அங்கக கழிவுகளை மக்கச் செய்வதற்கான ஒரு சிறந்த பயனுள்ள செலவு குறைந்த மற்றும் மாசற்ற சுற்றுபுறசூழலுக்கு உகந்த பண்ணை கழிவுகளை மறுசு ழற்சி செய்யும் தொழில் நுட்ப முறைகளை செய்து பயன் பெற விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார்.

    பயிற்சியில் பாலப்பட்டி, மோகனூர், பார்வதி இயற்கை பண்ணை, மு ற்போக்கு விவசாயி, அங்கக வேளாண்மை சான்றிதழ் பெற்ற வேலுச்சாமி, மண்புழு உரம் உற்பத்தி செய்யும் முறை, மண்புழு உரம் தயாரிக்க அமைக்கப்படும் தொட்டியில் அளவு, மண்புழு உரத்தின் பயன்களான மண் அமைப்பு மேம்படும், நீர்ப்பிடிப்பு திறன் கூடுகிறது, மண்அரிமானம் காக்கிறது, பயிர்கள் எளிதில் சத்துக்களை கிரகிக்க உதவுகிறது,

    மண்புழு கழுநீர் மிக சிறந்த நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்தது இதனை இலைவழியாக வழங்கும் போது குறைந்த செலவில் அதிக மகசூல் போன்ற காரணிகள் குறித்து விரிவாக விளக்கமளித்து பயிற்சி அளிக்கப்பட்டது.துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜன், அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் ஆகியோர் நன்றி கூறி பயிற்சியினை ஏற்பாடு செய்திருந்தனர்.

    • வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • அறுவடைக்கு பின் செய்நேர்த்தி ஆகியவைகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயிற்சி வேப்பந்தட்டை, பாண்டகப்பாடி, தேவையூர், கை.களத்தூர், இனாம் அகரம், பசும்பலூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்றது.

    இந்த பயிற்சி முகாம்களில் மானாவாரி பயிர் சாகுபடி தொழில்நுட்பம், மண்வள மேலாண்மை, ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு மற்றும் அறுவடைக்கு பின் செய்நேர்த்தி ஆகியவைகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கருணாநிதி, வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்)

    கீதா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி வேப்பந்தட்டை வேளாண்மை உதவி இயக்குனர் பச்சியம்மாள் தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் வேப்பந்தட்டை வட்டார வேளாண்மை அலுவலர் ரமேஷ், துணை வேளாண்மை அலுவலர் தமிழரசன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள், பயிர் பரிசோதனை திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×