search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டு போட்டிகள்"

    • குறு வட்டார விளையாட்டு போட்டிகள் நிறைவு விழா நடந்தது.
    • கே.என்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் குறு வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 12-ந் தேதி ரஹ்மானியா மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது. இதில் 57 பள்ளிகளை சேர்ந்த 220 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    சதுரங்கம், வாலிபால், கைப்பந்து, கபடி, கால்பந்து, கோகோ, மற்றும் தடகள போட்டிகள் உட்பட ஏராளமான போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டிகளின் நிறைவு விழா ரஹ்மானியா கார்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மைதா னத்தில் நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு ரஹ்மானியா மெட்ரிகுலே ஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஆயிஷா பீவி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பாதுஷா முன்னிலை வகித்தார். பசும்பொன் ஊராட்சி மன்ற தலைவர் ராம கிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

    ஒலிம்பிக் கொடியை மாவட்ட உடற்கல்வி இயக்கு னர் வசந்தி ஏற்றினார். வட்டார கொடியை கலாவிருத்தி பள்ளி தாளா ளர் அல்லாபக்ஸ் ஏற்றினார். மேலும் கார்டன் பள்ளி முதல்வர் மக்பு அலி, நிர்வாக அலுவலர் முகம்மது இர்ஷாத், உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரசேகரன் தாமரைக் கண்ணன், அன்சாரி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்ட னர்.

    இதில் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் ரஹ்மானியா மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஹரிகரன் உயரம் தாண்டுதல்,நீளம் தாண்டுதல், தடை தாண்டும் ஆகிய போட்டியில் முதலிடம் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார்.மேலும் இப்பள்ளியை சேர்ந்த ரஹ்மான் ஆகில் 100 மீ மற்றும் 200 மீ ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்தார். கேரம் விளை யாட்டில் தனிநபர், இரட்டையர் பிரிவில் முதலிடமும், பேட்மிட்டனில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளது.

    இதேபோல் ரஹ்மானியா கார்டன் மெட்ரிகுலே ஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளும் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றனர். இப்போட்டியில், கே.என்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.

    • விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்
    • பெரம்பலூர் மாவட்ட அளவில் நடைபெற்றது

    பெரம்பலூர்

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்ட அளவில் மாணவர்களுக்கான சாலையோர மிதிவண்டி, ஜூடோ, சிலம்பம் ஆகிய போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

    மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் போட்டியினை துவக்கி வைத்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சாலையோர மிதிவண்டி போட்டியில் பாடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 14 17 19 பிரிவில் முதலிடம் பெற்றனர். ஜூடோ போட்டியில் 14 வயது பிரிவில் பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களும், வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர், கொத்தவாசல் அரசு அரசு நடுநிலைப்பள்ளி மாணவர் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

    19 வயது பிரிவில் லெப்பைக்குடிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். சிலப்பம் போட்டியில் ரெட்டையர் பிரிவில் அன்னமங்கலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். கம்பு சண்டை போட்டியில் உடும்பியம் ஈடன் கார்டன் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆகியோர் வெற்றி பெற்றனர். போட்டியின் ஏற்பாடுகளை லப்பைக்குடிகாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜம்மாள், உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • முதன்மைக் கல்விஅலுவலர் வழிகாட்டுதலின்படி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்(பொறுப்பு) தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
    • குறுவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடத்தில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு,பல்லடம் ,தாராபுரம் ,உடுமலைப்பேட்டை ஆகிய குறுவட்டங்கள் உள்ளன. இந்தநிலையில் குறுவட்ட அளவிலான பள்ளிகளுக்கு மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 20-ந் தேதி வரை நடைபெற்றது.

    இந்தநிலையில் திருப்பூர் வருவாய் மாவட்ட அளவிலான குழுப்போட்டிகள், புதிய விளையாட்டுக்கள் மற்றும் தடகளப் போட்டிகள் 17.10.2022 அன்று முதல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் முதல் அணிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.குறுவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடத்தில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

    அதற்கான நிகழ்வு நிர்ணயக் கூட்டம் திருப்பூர், ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.இதில் 45 உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், கண்காணிப்புக் குழுஉறுப்பினர்கள்,மற்றும் குறுவட்டப் போட்டிகளின் இணை செயலாளர்கள் கலந்து கொண்டனர். முதன்மைக் கல்விஅலுவலர் வழிகாட்டுதலின்படி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்(பொறுப்பு) தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

    • செந்துறை கல்வி மாவட்ட அளவில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இருபால் ஆசிரியர்களுக்கான குழு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்றது.
    • 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தனி போட்டி மற்றும் குழு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் செந்துறை கல்வி மாவட்ட அளவில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இருபால் ஆசிரியர்களுக்கான குழு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்றது.

    மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டியினை செந்துறை மாவட்ட கல்வி அலுவலர் பேபி அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் அனைவரையும் வரவேற்றார்.

    பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தனி போட்டி மற்றும் குழு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.

    உடற்கல்வி ஆசிரியர்கள், போட்டிகளை நடத்தினர். சோழன்குடிக்காடு ஆசிரியர்கள் போட்டி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    ×