என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Physical Education Teachers"
- அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இணையவழி பணி நிரவல் கலந்தாய்வு நாளை நடக்கிறது.
- பணி நிரவல் கலந்தாய்வுக்கான அனைத்து முன்னேற்பாடு களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் செய்யவேண்டும்.
விருதுநகர்
அரசு மேல்நி லைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் இணையவழி கலந்தாய்வு நாளை(11-ந்தேதி) நடக்கும் என்று பள்ளி கல்வித்துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையரகம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்ப தாவது:-
தமிழகத்தில் 2022-23 கல்வி ஆண்டில் 1.8.2022 நிலவரப்படி ஆசிரியர், மாணவர் விகிதாச்சார அடிப்படையில் உடற்கல்வி இயக்குநர் நிலை 2பணியிடங்கள் நிர்ணயம் செய்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து கடிதம் மூலமாக அறிக்கை பெறப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 3,123 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மொத்தம் 407உடற்கல்வி இயக்குநர் நிலை 1 பணியிடங்கள் அனுமதிக் கப்பட்டுள்ளன.
அரசாணையின்படி பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் 400மாணவர்களுக்கு மட்டுமே உடற்கல்வி ஆசிரியர் நிலை -1 பதவியில் ஆசிரியர்கள் பணியமர்த்த ப்படுகின்றனர். இது தவிர 183பள்ளிகளில் உடற்கல்வி இயக்குனர் நிலை-1 பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை.
ஆனால் 400-க்கும் குறைவாக உள்ள மாணவர்கள் உள்ள 163பள்ளி களில் உடற்கல்வி ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். எனவே விதிகளின்படி உபரியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் தேவையான பள்ளிகளுக்கு பணி நிரவல்அடிப்படையில் பணியிட மாறுதல் செய்யப் படுவர்.
இதற்கான கலந்தாய்வு நாளை(செவ்வாய்க்கிழமை) இணைய வழியில் நடத்தப்படும். பணி நிரவல் கலந்தாய்வுக்கான அனைத்து முன்னேற்பாடு களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் செய்யவேண்டும். எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல் கலந்தாய்வு நடத்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
- முதன்மைக் கல்விஅலுவலர் வழிகாட்டுதலின்படி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்(பொறுப்பு) தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
- குறுவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடத்தில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு,பல்லடம் ,தாராபுரம் ,உடுமலைப்பேட்டை ஆகிய குறுவட்டங்கள் உள்ளன. இந்தநிலையில் குறுவட்ட அளவிலான பள்ளிகளுக்கு மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 20-ந் தேதி வரை நடைபெற்றது.
இந்தநிலையில் திருப்பூர் வருவாய் மாவட்ட அளவிலான குழுப்போட்டிகள், புதிய விளையாட்டுக்கள் மற்றும் தடகளப் போட்டிகள் 17.10.2022 அன்று முதல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் முதல் அணிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.குறுவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடத்தில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
அதற்கான நிகழ்வு நிர்ணயக் கூட்டம் திருப்பூர், ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.இதில் 45 உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், கண்காணிப்புக் குழுஉறுப்பினர்கள்,மற்றும் குறுவட்டப் போட்டிகளின் இணை செயலாளர்கள் கலந்து கொண்டனர். முதன்மைக் கல்விஅலுவலர் வழிகாட்டுதலின்படி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்(பொறுப்பு) தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
- சென்னை மாமல்லபுரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது.
- போட்டிகளை வரவேற்கும் வகையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சதுரங்கப் போட்டிகளை அரசு உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் :
தமிழக பள்ளி கல்வித் துறை சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி இயக்குநா், உடற்கல்வி ஆசிரியா், பகுதி நேர உடற்கல்வி ஆசிரியா்களுக்கான சதுரங்க விதிகள் மற்றும் நுட்பங்கள் தொடா்பான ஒருநாள் புத்தாக்கப்பயிற்சி வகுப்பு ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் (பொறுப்பு) முருகேஸ்வரி வரவேற்புரையாற்றினா். இந்தப் பயிற்சி வகுப்புக்கு திருப்பூா் மாவட்ட கல்வி அலுவலா் கணேஷ் தலைமை வகித்து பேசியதாவது:-
சென்னை மாமல்லபுரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் ஜூலை 27 ந் தேதி முதல் ஆகஸ்ட் 10 ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளை வரவேற்கும் வகையில் அனைத்து மாவட்டத்திலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சதுரங்கப் போட்டிகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் 11, 14, 17, 19 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 4 பிரிவுகளில் தனித்தனியாகப் போட்டிகள் நடைபெறும். திருப்பூா் மாவட்ட பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் வரும் ஜூலை 13 ந் தேதி முதல் 15 ந் தேதி வரையிலும் வட்டார அளவிலான போட்டிகள் ஜூலை 20 ந்தேதியும் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் ஜூலை 25 ந் தேதியும் நடைபெறும். இதில், மாவட்ட அளவில் முதலிடத்தைப் பிடிக்கும் மாணவ, மாணவிகள் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைப் பாா்வையிட சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுவாா் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ராஜகோபால், திருப்பூா் கல்வி மாவட்ட பள்ளி ஆய்வாளா் ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான ஸ்ரீசாந்தி விஜயா உயர்நிலைப்பள்ளியில், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஓவிய ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்து தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து பள்ளியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ஆசிரியர்களின் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், கடந்த 1997-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க முடியும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், கல்யாணசுந்தரம் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மாணவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க உடற்கல்வி அத்தியாவசியமானது. 5 வயது முதல் 18 வயது வரை யோகா உள்ளிட்ட உடற்கல்வியை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும்.
250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க முடியும் என்பது ஏற்புடையது அல்ல. அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். எனவே, 250-க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் கவுரவ ஊதிய அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்களை தமிழக அரசு பணியமர்த்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #PhysicalEducationTeachers
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்