search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறு வட்டார விளையாட்டு  போட்டிகள் நிறைவு விழா
    X

    குறுவட்டார போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    குறு வட்டார விளையாட்டு போட்டிகள் நிறைவு விழா

    • குறு வட்டார விளையாட்டு போட்டிகள் நிறைவு விழா நடந்தது.
    • கே.என்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் குறு வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 12-ந் தேதி ரஹ்மானியா மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது. இதில் 57 பள்ளிகளை சேர்ந்த 220 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    சதுரங்கம், வாலிபால், கைப்பந்து, கபடி, கால்பந்து, கோகோ, மற்றும் தடகள போட்டிகள் உட்பட ஏராளமான போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டிகளின் நிறைவு விழா ரஹ்மானியா கார்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மைதா னத்தில் நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு ரஹ்மானியா மெட்ரிகுலே ஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஆயிஷா பீவி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பாதுஷா முன்னிலை வகித்தார். பசும்பொன் ஊராட்சி மன்ற தலைவர் ராம கிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

    ஒலிம்பிக் கொடியை மாவட்ட உடற்கல்வி இயக்கு னர் வசந்தி ஏற்றினார். வட்டார கொடியை கலாவிருத்தி பள்ளி தாளா ளர் அல்லாபக்ஸ் ஏற்றினார். மேலும் கார்டன் பள்ளி முதல்வர் மக்பு அலி, நிர்வாக அலுவலர் முகம்மது இர்ஷாத், உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரசேகரன் தாமரைக் கண்ணன், அன்சாரி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்ட னர்.

    இதில் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் ரஹ்மானியா மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஹரிகரன் உயரம் தாண்டுதல்,நீளம் தாண்டுதல், தடை தாண்டும் ஆகிய போட்டியில் முதலிடம் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார்.மேலும் இப்பள்ளியை சேர்ந்த ரஹ்மான் ஆகில் 100 மீ மற்றும் 200 மீ ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்தார். கேரம் விளை யாட்டில் தனிநபர், இரட்டையர் பிரிவில் முதலிடமும், பேட்மிட்டனில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளது.

    இதேபோல் ரஹ்மானியா கார்டன் மெட்ரிகுலே ஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளும் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றனர். இப்போட்டியில், கே.என்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.

    Next Story
    ×