search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரட்டிய"

    • யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.
    • யானைகளை செல்போனில் படம் எடுக்க கூடாது என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பாத்திக்குட்பட்ட வன ப்பகுதியில் யானைகள், புலி, சிறுத்தை, காட்டெருமைகள், மான்கள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    குறிப்பாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதேபோல் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் ஜாலியாக நடந்து செல்கின்றன.

    அவ்வப்போது வாகன ஓட்டைகளையும் விரட்டி அச்சுறுத்துகின்றன. கரும்பு லோடுகளை ஏற்றி சொல்லும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை குட்டிகளுடன் சுவைத்து பின்னர் வனப்பகுதிக்கு சென்று வருகிறது. இதனால் வனப்பகுதியில் வாகன ஓட்டிகள் கவனமாக சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் அடுத்த மாக்கம் பாளையம் செல்லும் வழியில் ஒற்றை யானை ஒன்று சாலையில் நடமாடிக் கொண்டிருந்தது, திடீரென அந்த யானை அந்த சாலை வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வந்தவர்களை துரத்த தொடங்கியது.

    இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து சிதறி ஓடினர். சிறிது நேரம் போக்கு காட்டிய யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இந்த பகுதியில் தொடர்ந்து யானை நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வாகனத்தை நிறுத்தக் கூடாது என்றும், யானைகளை செல்போனில் படம் எடுக்க கூடாது என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • நேற்று காலை முதல் வனத்துறை ஊழியர்கள் வனப்பகுதிகுள் சென்று கருப்பன் என்ற ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தை காண்காணித்தனர்.
    • அங்கு நின்றிருந்த கருப்பன் என்ற ஒற்றை யானையை கும்கி யானை மூலம் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடர்ந்த வனப்பகுதியில் விரட்டி விட்டனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் மான், சிறுத்தை, புலி, யானை போன்ற ஏராளமான வ னவிலங்குகள் வசித்து வருகின்றன.

    வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி விவசாய நிலத்தை புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

    தாளவாடி வனச்சரகத்தில் உள்ள இரிபுரம், திகனாரை, மல்குத்திப்புரம், தர்மா புரம் பகுதியில் கடந்த வாரங்களாக நாட்களாக ஒற்றை யானை தொடர்ந்து விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    அதை விரட்ட செல்லும் வன ஊழியர்களையும் அந்த ஒற்றை யானையை தாக்கியது. கடந்த 2 மாதத்தில் திகினாரையில் ஒரு விவசாயி, தர்மபுபுரம் பகுதியில் ஒரு விவசாயியை ஒற்றை யானை தாக்கிக் கொன்றது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த ஒற்றை யானையை பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து விவசாய பயிர்களையும் மனிதர்க ளையும் சேதப்படுத்தி வரும் யானையை கட்டுபடுத்த பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சின்னதம்பி மற்றும் ராஜவர்தன் ஆகிய 2 கும்கி யானைகள் நேற்று முன்தினம் தாளவாடி கொண்டு வரபட்டது.

    நேற்று காலை முதல் வனத்துறை ஊழியர்கள் வனப்பகுதிகுள் சென்று கருப்பன் என்ற ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தை காண்காணித்தனர். அதில் சுமார் 2 கிலோ மீட்டார் தூரத்தில் கருப்பன் காட்டு யானை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மதியம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை துறை மருத்துவர் சதாசிவம், ஈரோடு வனப்பாதுகாப்பு அலுவலர் பழனிச்சாமி மற்றும் தாளவாடி வனச்சரக சதீஷ் மற்றும் வனத்துறை ஊழியர்கள் கருப்பன் என்ற ஒற்றைக் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட 2 கும்கி யானைகளுடன் வனப்பகுதிக்குள் சென்றனர்.

    அங்கு நின்றிருந்த கருப்பன் என்ற ஒற்றை யானையை கும்கி யானை மூலம் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடர்ந்த வனப்பகுதியில் விரட்டி விட்டனர்.

    மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று யானை நடமாடத்தை கண்காணித்து கும்கி யானைகள் மூலம் கருப்பன் என்ற ஒற்றை யானையை விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    ×