search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chased"

    • நேற்று காலை முதல் வனத்துறை ஊழியர்கள் வனப்பகுதிகுள் சென்று கருப்பன் என்ற ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தை காண்காணித்தனர்.
    • அங்கு நின்றிருந்த கருப்பன் என்ற ஒற்றை யானையை கும்கி யானை மூலம் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடர்ந்த வனப்பகுதியில் விரட்டி விட்டனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் மான், சிறுத்தை, புலி, யானை போன்ற ஏராளமான வ னவிலங்குகள் வசித்து வருகின்றன.

    வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி விவசாய நிலத்தை புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

    தாளவாடி வனச்சரகத்தில் உள்ள இரிபுரம், திகனாரை, மல்குத்திப்புரம், தர்மா புரம் பகுதியில் கடந்த வாரங்களாக நாட்களாக ஒற்றை யானை தொடர்ந்து விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    அதை விரட்ட செல்லும் வன ஊழியர்களையும் அந்த ஒற்றை யானையை தாக்கியது. கடந்த 2 மாதத்தில் திகினாரையில் ஒரு விவசாயி, தர்மபுபுரம் பகுதியில் ஒரு விவசாயியை ஒற்றை யானை தாக்கிக் கொன்றது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த ஒற்றை யானையை பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து விவசாய பயிர்களையும் மனிதர்க ளையும் சேதப்படுத்தி வரும் யானையை கட்டுபடுத்த பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சின்னதம்பி மற்றும் ராஜவர்தன் ஆகிய 2 கும்கி யானைகள் நேற்று முன்தினம் தாளவாடி கொண்டு வரபட்டது.

    நேற்று காலை முதல் வனத்துறை ஊழியர்கள் வனப்பகுதிகுள் சென்று கருப்பன் என்ற ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தை காண்காணித்தனர். அதில் சுமார் 2 கிலோ மீட்டார் தூரத்தில் கருப்பன் காட்டு யானை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மதியம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை துறை மருத்துவர் சதாசிவம், ஈரோடு வனப்பாதுகாப்பு அலுவலர் பழனிச்சாமி மற்றும் தாளவாடி வனச்சரக சதீஷ் மற்றும் வனத்துறை ஊழியர்கள் கருப்பன் என்ற ஒற்றைக் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட 2 கும்கி யானைகளுடன் வனப்பகுதிக்குள் சென்றனர்.

    அங்கு நின்றிருந்த கருப்பன் என்ற ஒற்றை யானையை கும்கி யானை மூலம் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடர்ந்த வனப்பகுதியில் விரட்டி விட்டனர்.

    மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று யானை நடமாடத்தை கண்காணித்து கும்கி யானைகள் மூலம் கருப்பன் என்ற ஒற்றை யானையை விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குள் நுழைந்த ரசிகருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி ஓடிப்பிடித்து விளையாடினார். பின்னர் அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். #CSK #MSDhoni
    சென்னை:

    ஐபிஎல் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். இதில், கேப்டன் டோனி மற்றும் வீரர்கள் பங்கேற்றனர். அப்போது ஒரு ரசிகர், திடீரென தடுப்புச் சுவரைத் தாண்டி  மைதானத்திற்குள் நுழைந்து, கேப்டன் டோனியை நோக்கி ஓடி வந்தார். டோனியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கவோ அல்லது அவரை கட்டிப்பிடித்து வாழ்த்து பெறவோ அவர் வந்திருக்கலாம்.



    ஆனால், டோனி அவரிடம் பிடிபடாமல், ‘முடிந்தால் பிடித்துப் பார்’ என போக்கு காட்டி ஓடினார். சிறிது நேரம் அந்த ரசிகரிடம் பிடிபடாமல் சென்றார் டோனி. அதற்குள் பாதுகாவலர் ஓடி வந்து, அந்த ரசிகரைப் பிடித்துக்கொண்டார். பின்னர் அந்த ரசிகருக்கு  டோனி கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த சம்பவத்தின் வீடியோ பதிவை சிஎஸ்கே வெளியிட்டுள்ளது. இந்தவீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

    மைதானத்தில் ரசிகருக்கு பிடி கொடுக்காமல் டோனி ஓடிப்பிடித்து விளையாடுவது இது முதல் முறையல்ல. சமீபத்தில் நாக்பூரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போதும், மைதானத்திற்குள் நுழைந்த ரசிகரிடம் சிக்காமல் டோனி ஓடிப்பிடித்து விளையாடினார். சிறிது தூரம் ரசிகரை துரத்தவிட்டு ஓடிய டோனி, ஸ்டம்ப் அருகே நின்றார். டோனி நின்றதும் அவரை கட்டி அணைத்த ரசிகர், டோனியின் காலில் விழுந்துவிட்டு, கை குலுக்கி திரும்பினார். #CSK #MSDhoni


    ×