search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனங்களை"

    • பள்ளி மோட்டார் வாகன கூட்டாய்வு நடைபெற்றது.
    • முதலுதவி செய்யும் விளக்கமும் அளிக்கப்பட்டது.

    கடலூர்:

    விருத்தாச்சலம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் இன்று விருத்தாசலம் பைபாஸ் சாலையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

    தமிழ்நாடு போக்குவரத்து துறை, கல்வித்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் பள்ளி மோட்டார் வாகன கூட்டாய்வு நடைபெற்றது. விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி தாலுகாக்களில் இருந்து 31 பள்ளிகளைச் சேர்ந்த 220 பள்ளி வாகனங்கள் சோதனை தணிக்கை செய்யப்பட்டன. இந்த ஆய்வில் வேக கட்டுப்பாட்டு கருவி, அவசர வழிக்கதவு, தீயணைப்புக் கருவி, முதலுதவி பெட்டி, சி.சி.டி.வி. உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளி வாகனங்கள் இருக்கின்றனவா என சோதனை செய்யப்பட்டது.

    மேலும், பள்ளி வாகன டிரைவர்கள் வாகனங்களை இயக்கும்போது கவனமாகவும், பள்ளி மாணவர்கள் இறங்கும்போதும் ஏறும் போதும் சரியாக கவனித்து வாகனங்களை இயக்குமாறும் அறிவுரை களை மோட்டார் வாகன அதிகாரிகள் வழங்கினர். பள்ளி குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ளும் விதத்தில் முதலுதவி செய்யும் விளக்கமும் அளிக்கப்பட்டது. இதில் விருத்தாச்சலம் சப்-கலெக்டர் லூர்துசாமி, சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம், விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர் பால முருகன் மற்றும் தீயணைப்பு துறை அலுவலர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.
    • யானைகளை செல்போனில் படம் எடுக்க கூடாது என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பாத்திக்குட்பட்ட வன ப்பகுதியில் யானைகள், புலி, சிறுத்தை, காட்டெருமைகள், மான்கள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    குறிப்பாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதேபோல் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் ஜாலியாக நடந்து செல்கின்றன.

    அவ்வப்போது வாகன ஓட்டைகளையும் விரட்டி அச்சுறுத்துகின்றன. கரும்பு லோடுகளை ஏற்றி சொல்லும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை குட்டிகளுடன் சுவைத்து பின்னர் வனப்பகுதிக்கு சென்று வருகிறது. இதனால் வனப்பகுதியில் வாகன ஓட்டிகள் கவனமாக சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் அடுத்த மாக்கம் பாளையம் செல்லும் வழியில் ஒற்றை யானை ஒன்று சாலையில் நடமாடிக் கொண்டிருந்தது, திடீரென அந்த யானை அந்த சாலை வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வந்தவர்களை துரத்த தொடங்கியது.

    இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து சிதறி ஓடினர். சிறிது நேரம் போக்கு காட்டிய யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இந்த பகுதியில் தொடர்ந்து யானை நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வாகனத்தை நிறுத்தக் கூடாது என்றும், யானைகளை செல்போனில் படம் எடுக்க கூடாது என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×