search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "causing a stir"

    • ஊர்வலமாக கையில் பூட்டுடன் காங்கிரசார் சென்றனர்.
    • சூரம்பட்டி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    ஈரோடு:

    ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை கண்டித்து இந்திய அளவில் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தமிழ்நாட்டிலும் காங்கிரசார் பல்வேறு கட்ட போராட்ட ங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். இதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    இந்நிலை யில் மேற்கண்ட கோரிக்கை யை வலியுறுத்தி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சூரம்பட்டியில் உள்ள தபால் நிலையத்தை பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதற்கு போலீசார் அனுமதி மறுத்து இருந்தனர். தடையை மீறி போராட்டம் நடைபெற்றால் கைது செய்யவும் நடவடிக்கைக்கு தயாராக இருந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை எஸ்.கே.சி. ரோட்டில் காங்கிரசார் ஒன்று திரண்டனர். மாநகர பொறு ப்பாளர் திருச்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா முன்னிலை வகித்தார்.

    மாநில செயற்குழு உறுப்பி னரும், கவுன்சிலரு மான ஈ.பி.ரவி, மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்ராஜா, சிறுபான்மை பிரிவு மாநில துணைத்த லைவர் ஜாவர் அலி,

    மாநில ஒருங்கிணைப்பாளர் ஜிப்பர் அகமது, மாவட்ட தலைவர் மாப்பிள்ளை மீரான், மண்டல தலைவர்கள் விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக், அல்டிமேட் தினேஷ், சிறுபான்மை பிரிவு பாட்ஷா, முகமது யூசுப், கனகராஜ், விஜயலட்சுமி உள்பட கலந்து கொண்டனர்.

    பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சூரம்பட்டி நால்ரோட்டிற்கு கையில் பூட்டுடன் காங்கிரசார் சென்றனர்.

    அப்போது சூரம்பட்டி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தடையை மீறி பூட்டு போடும் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என்று கூறினர்.

    இதனால் காங்கிரசார் மேற்கொண்டு செல்லாமல் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பி அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.
    • யானைகளை செல்போனில் படம் எடுக்க கூடாது என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பாத்திக்குட்பட்ட வன ப்பகுதியில் யானைகள், புலி, சிறுத்தை, காட்டெருமைகள், மான்கள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    குறிப்பாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதேபோல் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் ஜாலியாக நடந்து செல்கின்றன.

    அவ்வப்போது வாகன ஓட்டைகளையும் விரட்டி அச்சுறுத்துகின்றன. கரும்பு லோடுகளை ஏற்றி சொல்லும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை குட்டிகளுடன் சுவைத்து பின்னர் வனப்பகுதிக்கு சென்று வருகிறது. இதனால் வனப்பகுதியில் வாகன ஓட்டிகள் கவனமாக சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் அடுத்த மாக்கம் பாளையம் செல்லும் வழியில் ஒற்றை யானை ஒன்று சாலையில் நடமாடிக் கொண்டிருந்தது, திடீரென அந்த யானை அந்த சாலை வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வந்தவர்களை துரத்த தொடங்கியது.

    இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து சிதறி ஓடினர். சிறிது நேரம் போக்கு காட்டிய யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இந்த பகுதியில் தொடர்ந்து யானை நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வாகனத்தை நிறுத்தக் கூடாது என்றும், யானைகளை செல்போனில் படம் எடுக்க கூடாது என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×