search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டு யானையை"

    • யானை தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.
    • 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை வனப்பகுதிக்குள் சென்றது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    குறிப்பாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்லன்குழி கிராமத்துக்குள் ஒற்றை காட்டுயானை இன்று புகுந்தது.

    குடியிருப்பு பகுதியில் அங்கும், இங்கும் சுற்றித்திரிந்த யானை சிறிது நேரத்தில் அந்த பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்தது விளைப் பொருட்களை சேதப்படுத்தியது.

    இதை பார்த்து அதிர்ச்ச டைந்த அப்பகுதி பொது மக்கள் மற்றும் விவசாயிகள் யானையை விரட்ட முயன்றனர். ஆங்காங்கே தீ மூட்டியத்துடன், டார்ச் லைட் அடித்தும் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் யானை மீண்டும் தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.

    இதனையடுத்து டிராக்டர் மூலம் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை வனப்பகு திக்குள் சென்றது.

    இதனையடுத்து பொதுமக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்ட னர். எனினும் வன பகுதி யில் இருந்து எந்த நேரமும் மீண்டும் ஊருக்குள் யானை வரலாம் என்ற அச்சத்துடன் பொதுமக்கள் உள்ளனர்.

    வனத்துறையினர் யானையின் நடவடிக்கையை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நேற்று காலை முதல் வனத்துறை ஊழியர்கள் வனப்பகுதிகுள் சென்று கருப்பன் என்ற ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தை காண்காணித்தனர்.
    • அங்கு நின்றிருந்த கருப்பன் என்ற ஒற்றை யானையை கும்கி யானை மூலம் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடர்ந்த வனப்பகுதியில் விரட்டி விட்டனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் மான், சிறுத்தை, புலி, யானை போன்ற ஏராளமான வ னவிலங்குகள் வசித்து வருகின்றன.

    வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி விவசாய நிலத்தை புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

    தாளவாடி வனச்சரகத்தில் உள்ள இரிபுரம், திகனாரை, மல்குத்திப்புரம், தர்மா புரம் பகுதியில் கடந்த வாரங்களாக நாட்களாக ஒற்றை யானை தொடர்ந்து விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    அதை விரட்ட செல்லும் வன ஊழியர்களையும் அந்த ஒற்றை யானையை தாக்கியது. கடந்த 2 மாதத்தில் திகினாரையில் ஒரு விவசாயி, தர்மபுபுரம் பகுதியில் ஒரு விவசாயியை ஒற்றை யானை தாக்கிக் கொன்றது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த ஒற்றை யானையை பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து விவசாய பயிர்களையும் மனிதர்க ளையும் சேதப்படுத்தி வரும் யானையை கட்டுபடுத்த பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சின்னதம்பி மற்றும் ராஜவர்தன் ஆகிய 2 கும்கி யானைகள் நேற்று முன்தினம் தாளவாடி கொண்டு வரபட்டது.

    நேற்று காலை முதல் வனத்துறை ஊழியர்கள் வனப்பகுதிகுள் சென்று கருப்பன் என்ற ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தை காண்காணித்தனர். அதில் சுமார் 2 கிலோ மீட்டார் தூரத்தில் கருப்பன் காட்டு யானை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மதியம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை துறை மருத்துவர் சதாசிவம், ஈரோடு வனப்பாதுகாப்பு அலுவலர் பழனிச்சாமி மற்றும் தாளவாடி வனச்சரக சதீஷ் மற்றும் வனத்துறை ஊழியர்கள் கருப்பன் என்ற ஒற்றைக் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட 2 கும்கி யானைகளுடன் வனப்பகுதிக்குள் சென்றனர்.

    அங்கு நின்றிருந்த கருப்பன் என்ற ஒற்றை யானையை கும்கி யானை மூலம் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடர்ந்த வனப்பகுதியில் விரட்டி விட்டனர்.

    மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று யானை நடமாடத்தை கண்காணித்து கும்கி யானைகள் மூலம் கருப்பன் என்ற ஒற்றை யானையை விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    ×