search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடாமுயற்சி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
    • காதுக்கு கீழ் பகுதியில் இருந்த கட்டி கண்டறியப்பட்டு அரை மணிநேரத்தில் நவீன சிகிச்கையின் மூலம் டாக்டர்கள் அகற்றினர்.

    நடிகர் அஜித்குமார் கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவரது காதுக்கு கீழ் பகுதியில் இருந்த கட்டி கண்டறியப்பட்டு அரை மணிநேரத்தில் நவீன சிகிச்கையின் மூலம் டாக்டர்கள் அகற்றினர்.

    இதையடுத்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அஜித் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா ஆகியோர் தெரிவித்து இருந்தனர்.

    இந்நிலையில், நடிகர் அஜித் சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

    மேலும், அடுத்த வாரம் வெளிநாட்டில் நடக்கும் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு நடிகர் அஜித் செல்ல உள்ளார் என்றும் கூறியுள்ளார்.

    • காதுக்கு கீழ் பகுதியில் இருந்த வீக்கம் கண்டறியப்பட்டு அரை மணிநேரத்தில் நவீன சிகிச்கையின் மூலம் டாக்டர்கள் அகற்றியுள்ளனர்.
    • நடிகர் அஜித் இன்று மாலை அல்லது நாளை வீடு திரும்புவார் என அவரது தரப்பில் இருந்து தகவல் வெளியானது.

    சென்னை :

    நடிகர் அஜித்குமார் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவரது காதுக்கு கீழ் பகுதியில் இருந்த வீக்கம் கண்டறியப்பட்டு அரை மணிநேரத்தில் நவீன சிகிச்கையின் மூலம் டாக்டர்கள் அகற்றியுள்ளனர்.

    இதையடுத்து சாதாரண வார்டில் உள்ள நடிகர் அஜித் இன்று மாலை அல்லது நாளை வீடு திரும்புவார் என அவரது தரப்பில் இருந்து தகவல் வெளியானது.

    இந்நிலையில் நடிகர் அஜித்குமார் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நடிகர் அஜித்குமார் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • அஜித் முழு உடலையும் பரிசோதனை செய்தபோது அவரது காதுக்கு கீழ் பகுதியில் சிறிய வீக்கம் இருந்தது.
    • சிகிச்சை முடிந்து சாதாரண வார்டுக்கு நேற்று மாற்றப்பட்டார்.

    மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அஜித் சென்னை திரும்பினார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அஜித் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் முன்பு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் அவரது முழு உடலையும் பரிசோதனை செய்தபோது அவரது காதுக்கு கீழ் பகுதியில் சிறிய வீக்கம் இருந்தது. அதனை கண்டறிந்த மருத்துவர்கள் நவீன சிகிச்சையின் மூலம் அந்த வீக்கத்தை அரை மணி நேரத்தில் சரிசெய்து அகற்றினார்கள்.

    சிகிச்சை முடிந்து சாதாரண வார்டுக்கு நேற்று மாற்றப்பட்டார். இதனையடுத்து நடிகர் அஜித் இன்று மாலை வீடு திரும்புவார் என்று அவரது தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

    • படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
    • விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்த முடிந்துள்ளது.

    'விடாமுயற்சி' படத்தில் கதாநாயகனாக அஜித் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து திரிஷா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

    இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்த முடிந்த நிலையில், அடுத்து ஜார்ஜியாவில் 2-வது கட்ட படப்பிடிப்பு என தகவல் வெளியானது.

    இந்நிலையில், நடிகர் அஜித் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அவர் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை வீடு திரும்புவார் என்றும் அஜித் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    • செல்ல மகன் ஆத்விக்கின் 9-வது பிறந்தாளை கொண்டாட சென்னை வந்திருந்தார் அஜித்.
    • அவருக்கு பிடித்த ஃபுட்பால் வடிவத்தில் பிறந்தநாள் கேக்கையும்.ஆத்விக் ஃபுட்பால் ஜெர்சியை அணிந்து இருப்பதை நாம் இந்த புகை படத்தில் காண முடியும்.

    தமிழ் சினிமாவில் செல்லமாக 'தல' என்று அழைக்கபடும் நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி என்ற படம் நடித்து வருகிறார் அதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அவர் தனது குடும்பத்துடன்  நேரங்களை செலவழிக்க எண்ணி அவரின் கடைகுட்டி சிங்கமான  செல்ல மகன் ஆத்விக்கின் 9-வது பிறந்தாளை கொண்டாட சென்னை வந்திருந்தார் அஜித். அவர்களின் மனைவி ஷாலினி மூத்த மகளான அனுஷ்காவுடன் மிகவும் மகிழ்ச்சியாக பிறந்தாநாளை கொண்டாடியுள்ளார்.

    ஆத்விக் ஃபுட்பால் விளையாட்டில் மிகவும் தீவிரமாக இருக்கும் நபர் என்பதால். அவருக்கு பிடித்த ஃபுட்பால் வடிவத்தில் பிறந்தநாள் கேக்கையும்.ஆத்விக் ஃபுட்பால் ஜெர்சியை அணிந்து இருப்பதை நாம் இந்த புகை படத்தில் காண முடியும்.

    அதன் புகை படத்தை ஷாலினி அவரின் இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் அஜித்குமார் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வர வேற்ப்ப்பை பெற்று இருக்கிறது. சமூக வலை தலங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • 24 வருடங்களுக்குப் பிறகு டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு 5.1 சிஸ்டத்தில் ‘வாலி’ படம் மீண்டும் திரைக்கு வந்துள்ளது.
    • புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள திரையரங்கில் ‘வாலி’ திரைப்படம் வெளியானது.

    புதுச்சேரி:

    நடிகர் அஜித் நடித்த 'வாலி' திரைப்படம் 1999-ம் ஆண்டு வெளிவந்தது.

    அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது. எஸ்.ஜே.சூர்யாவுக்கும் அஜித்துக்கும் பெரிய திருப்புமுனையாக இந்த படம் அமைந்தது.

    இந்நிலையில் 24 வருடங்களுக்குப் பிறகு டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு 5.1 சிஸ்டத்தில் 'வாலி' படம் மீண்டும் திரைக்கு வந்துள்ளது.

    புதுச்சேரியில் 'வாலி' திரைப்படம் மீண்டும் வெளியாகி உள்ளது.

    புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள திரையரங்கில் 'வாலி' திரைப்படம் வெளியானது. அந்த திரையரங்கம் முன்பு நடிகர் அஜித் ரசிகர்கள் திரண்டர். அங்கு பட்டாசு வெடித்து அஜித் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தனர்.



    தொடர்ந்து விடாமுயற்சி படம் டைட்டில் வெளியாகி 300 நாள் ஆச்சு. படத்தோட அப்டேட் என்ன ஆச்சு என்ற பேனரை பிடித்தனர்.

    அதில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்காவை காணவில்லை என்றும் கண்டுபிடித்து தந்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என எழுதப்பட்டிருந்தது.

    • நடிகர் அஜித் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இந்த படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.


    இந்த படத்தில் நடிகை திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததையடுத்து சமீபத்தில் இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு சில நாட்களில் வேறு இடத்திற்கு செல்ல உள்ளதாகவும் தயரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.


    இதைத்தொடர்ந்து அஜித் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் அஜித் தனது மகன் ஆத்விக்கின் நண்பர்கள் முன்பு கால்பந்து விளையாடி மகிழ்ந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அஜித் நடித்து வரும் திரைப்படம் 'விடாமுயற்சி'.
    • இந்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குகிறார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.


    இந்த படத்தில் நடிகை திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு சில நாட்களில் வேறு இடத்திற்கு செல்ல உள்ளதாக படக்குழு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • அஜித் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இவரின் 63-வது படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன் என பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இதையடுத்து அஜித்தின் 63-வது படத்தை 'மார்க் ஆண்டனி' படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும் 'நேர்கொண்ட பார்வை' படப்பிடிப்பின்போது ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதை அஜித்திற்கு பிடித்திருந்ததால் தற்போது அந்த கதையை படமாக்குவதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

    இந்நிலையில், நடிகர் அஜித்தின் புதிய புகைப்படத்தை அவரது மனைவி நடிகை ஷாலினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கூலாக அஜித் இருக்கும் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் அஜித் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இதையடுத்து அஜித்தின் 63-வது படத்தை 'மார்க் ஆண்டனி' படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 'நேர்கொண்ட பார்வை' படப்பிடிப்பின்போது ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதை அஜித்திற்கு பிடித்திருந்ததால் தற்போது அந்த கதையை படமாக்குவதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாகவும் தகவல் வெளியானது.


    இந்நிலையில், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு அஜித்தின் 'வீரம்' திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
    • படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

    இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

    இந்நிலையில், 'விடாமுயற்சி' படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது. 'விடாமுயற்சி' திரைக்கு வந்த பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது.

    • 'விடாமுயற்சி' திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார்.
    • இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.


    இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் சத்தமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடிகர் அஜித் மற்றும் திரிஷா படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் செல்ல சென்னை விமான நிலையம் வந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.


    இந்நிலையில், நடிகர் அஜித் தற்போது துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்றுள்ளார். அங்கு ஓட்டல் ஒன்றில் பெண் ரசிகை ஒருவருடன் இவர் நடனமாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு துபாய் கடற்கரையில் ஒரு சொகுசு படகில் குடும்பத்துடன் அஜித் செல்லும் வீடியோவும் ட்ரெண்டானது.


    ×