search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விடாமுயற்சி அப்டேட் என்னாச்சு.? புதுச்சேரியில் நடிகர் அஜித் பேனருடன் திரண்ட ரசிகர்கள்
    X

    விடாமுயற்சி அப்டேட் என்னாச்சு.? புதுச்சேரியில் நடிகர் அஜித் பேனருடன் திரண்ட ரசிகர்கள்

    • 24 வருடங்களுக்குப் பிறகு டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு 5.1 சிஸ்டத்தில் ‘வாலி’ படம் மீண்டும் திரைக்கு வந்துள்ளது.
    • புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள திரையரங்கில் ‘வாலி’ திரைப்படம் வெளியானது.

    புதுச்சேரி:

    நடிகர் அஜித் நடித்த 'வாலி' திரைப்படம் 1999-ம் ஆண்டு வெளிவந்தது.

    அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது. எஸ்.ஜே.சூர்யாவுக்கும் அஜித்துக்கும் பெரிய திருப்புமுனையாக இந்த படம் அமைந்தது.

    இந்நிலையில் 24 வருடங்களுக்குப் பிறகு டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு 5.1 சிஸ்டத்தில் 'வாலி' படம் மீண்டும் திரைக்கு வந்துள்ளது.

    புதுச்சேரியில் 'வாலி' திரைப்படம் மீண்டும் வெளியாகி உள்ளது.

    புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள திரையரங்கில் 'வாலி' திரைப்படம் வெளியானது. அந்த திரையரங்கம் முன்பு நடிகர் அஜித் ரசிகர்கள் திரண்டர். அங்கு பட்டாசு வெடித்து அஜித் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தனர்.



    தொடர்ந்து விடாமுயற்சி படம் டைட்டில் வெளியாகி 300 நாள் ஆச்சு. படத்தோட அப்டேட் என்ன ஆச்சு என்ற பேனரை பிடித்தனர்.

    அதில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்காவை காணவில்லை என்றும் கண்டுபிடித்து தந்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என எழுதப்பட்டிருந்தது.

    Next Story
    ×