search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜயேந்திரா"

    • ஏழை மக்களுக்கு காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளின்படி 10 கிலோ அரிசியை கொடுக்க வேண்டும்.
    • மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறுவது சரி இல்லை.

    பெங்களூரு :

    பெங்களூருவில் பா.ஜனதா துணை தலைவரான விஜயேந்திரா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    சட்டசபை தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி பி.பி.எல்.(வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்) குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, ஏழை மக்களுக்கு காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளின்படி 10 கிலோ அரிசியை கொடுக்க வேண்டும்.

    இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறுவது சரி இல்லை. வெளிமாநிலங்களில் இருந்து அரிசி கொள்முதல் செய்வதன் மூலமாக கமிஷன் பெறுவதற்கு முயற்சிகள் நடக்கிறது. நமது மாநிலத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் அரிசி ஆலைகளில் இருந்தே அரிசியை வாங்கி மக்களுக்கு கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்தால் கமிஷன் பெற முடியாது.

    இதன் காரணமாக தான் மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறி வெளிமாநிலங்களில் இருந்து அரிசி கொள்முதல் செய்து கமிஷன் பெறும் முயற்சிகள் நடக்கிறது. காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகிறது. இதில் இருந்து மக்களை திசை திருப்பும் நோக்கத்தில் மதமாற்றம் தடை சட்டம், ஏ.பி.எம்.சி. திருத்த சட்டத்தை காங்கிரஸ் ரத்து செய்திருக்கிறது. இலவச திட்டங்களை நிறைவேற்றுவதில் இருந்து தப்பிக்க மக்களை திசை திருப்புவதுடன், மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் இது.
    • இந்தியாவை காங்கிரஸ் கட்சி சுமார் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தது.

    சிவமொக்கா :

    முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா. கர்நாடக பா.ஜனதா துணை தலைவராக இருக்கும் இவர், சிகாரிப்புரா தொகுதி பா.ஜனதா வேட்பாளராகவும் உள்ளார். இந்த நிலையில் நேற்று விஜயேந்திரா சிவமொக்காவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவை காங்கிரஸ் கட்சி சுமார் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அந்த 60 ஆண்டுகளில் நாடு எந்த வளர்ச்சியும் அடையவில்லை. மோடி பிரதமரான பிறகு இந்தியாவின் பாதையையே மாற்றிவிட்டார். இன்று உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கிறது. கொரோனா காலத்தில் பிரதமர் மோடி சிறப்பாக பணியாற்றி, மக்களை பாதுகாத்தார். கொரோனா காலத்தில் ராகுல்காந்தி பிரதமராக இருந்திருந்தால் இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு முன்பாக நம் இந்தியா திவாலாகி இருக்கும்.

    கர்நாடகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் இது. நாட்டின் வளர்ச்சியில் கர்நாடகத்தின் பங்கு முக்கியமானது. மாநில மக்கள் பா.ஜனதாவுக்கு ஆசி வழங்குவார்கள். தற்போதைய நிலையில் எதிர்பார்த்ததை விட பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருணா பா.ஜனதாவின் கோட்டை.
    • கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சியினர் பம்பரம் போல சுழன்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். பா.ஜனதா ஆட்சியை தக்க வைக்கவும், காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. காங்கிரசின் முதல்-மந்திரி வேட்பாளர் என கருதப்படும் சித்தராமையா, மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிட உள்ளார்.

    இதனால், சித்தராமையாவை வீழ்த்த பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். சித்தராமையாவுக்கு எதிராக பலமான வேட்பாளரை நிறுத்த அக்கட்சிகள் ஆலோசித்து வருகிறது. பா.ஜனதா சார்பில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நிறுத்தப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், எடியூரப்பா இதனை மறுத்துள்ளார். விஜயேந்திரா வருணாவில் போட்டியிட மாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விஜயேந்திரா கூறுகையில், வருணா பா.ஜனதாவின் கோட்டை. அங்கு பா.ஜனதா சார்பில் யார் போட்டியிட்டாலும் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். வருணாவில் சித்தராமையாவை விட பா.ஜனதாவுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. இதை யாரும் உடைக்க முடியாது. வருணாவில் என்னை போட்டியிடும்படி கட்சி மேலிடம் கூறினால், கட்டாயம் போட்டியிடுவேன். ஆனால் எனது தந்தை, சிகாரிப்புரா தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் நான் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்றார்.

    • ஊழல் இல்லாத கட்சி என்றால் அது பா.ஜனதாதான்.
    • காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்க மோடி அயராது உழைத்து வருகிறார்.

    ஹாசன்:

    எடியூரப்பா ஹாசனில் தெற்கு பட்டதாரி தொகுதி வேட்பாளர் ரவிசங்கருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பா.ஜனதா மாநில துணை தலைவர் விஜயேந்திரா, கட்சி சார்பில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

    ஊழல் இல்லாத கட்சி என்றால் அது பா.ஜனதாதான். மாநிலத்தில் சிறந்த தலைவர், ஆட்சியாளர், முதல்-மந்திரி என்றால் அது எடியூரப்பா தான். முதல்-மந்திரியாக அவர் பொறுப்பு வகித்திருந்தபோது ஏற்ற, தாழ்வு இல்லாமல் அனைத்து சமுதாய மக்களின் உயர்வுக்கும் பாடுபட்டார். மேலும் பா.ஜனதா கட்சியை கர்நாடகத்தில் உயர் இடத்திற்கு எடுத்து சென்ற பெருமை எடியூரப்பாவிற்கு உள்ளது. அவரது வழிகாட்டுதலில் பா.ஜனதா இன்றுவரை செயல்பட்டு கொண்டிருப்பது பெருமை அளிக்கிறது.

    பா.ஜனதா சார்பில் நடைபெறும் சைக்கிள் பேரணி, பாதயாத்திரை யால் கட்சி மேலும் வலுபெற்று வருகிறது. இதே உத்வேகத்துடன் சட்டசபை தேர்தலை சந்தித்தால் எதிர்கட்சியே இல்லாத நிலை உருவாகி விடும். அந்த இலக்கை நோக்கி அனைவரும் பயணிக்கவேண்டும்.

    காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்க மோடி அயராது உழைத்து வருகிறார். பிரதமர் மோடியில் 8 ஆண்டு ஆட்சி பல்வேறு நலதிட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை செய்துள்ளோம். இதுவரை பா.ஜனதா மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை பா.ஜனதாவின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது.

    கர்நாடகத்தை பொறுத்தவரையில் பா.ஜனதா அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளது. மேல்சபை தேர்தலில் தெற்கு பட்டதாரி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து அடிமட்ட தொண்டர் வரை பிரசாரத்தில் ஈடபடவேண்டும். இதற்காக கட்சி பிரமுகர்கள் ஒற்றுமையுடன் உழைக்கவேண்டும். அரசியலில் அதிகளவு எனக்கு ஈடுபாடு இருந்தாலும், நான் இன்னும் சிறு குழந்தைதான். மந்திரி பதவிக்கோ, முதல்-மந்திரி பதவிக்கோ ஆசைப்படவில்லை. மேலிடம் எடுக்கும் முடிவை ஏற்பேன். கட்சிக்காக இறுதி வரை உழைப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×