search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசிக"

    • திமுக தலைமையிலான கூட்டணி, பாஜகவையும் சனாதனத்தையும் வலுவாக எதிர்க்கும் கூட்டணியாக தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
    • பாஜகவை அதிமுக எதிர்ப்பது கோட்பாட்டு அடிப்படையில் இல்லை என்பதை விடுதலைச்சிறுத்தைகள் சரியாக புரிந்து கொண்டுள்ளோம்.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் வன்னியரசு தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்ட தலைவர் யாரும் இருக்கிறார்களா? புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கை வழியில் சனாதனத்தை எதிர்த்து எப்படி எமது தலைவர் திருமாவளவன் களமாடுகிறாரோ அப்படித்தான்

    ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டே களமாடி வருகிறார் முதல்வர் அவர்கள்.

    திமுக தலைமையிலான கூட்டணி, பாஜகவையும் சனாதனத்தையும் வலுவாக எதிர்க்கும் கூட்டணியாக தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் விடுதலைச்சிறுத்தைகள் திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக இருக்கிறது.

    கடந்த 2021ல் நடைப்பெற்ற சட்டப்பேரவைத்தேர்தலில் 6 இடங்களே ஒதுக்கப்பட்ட போதும், பாஜகவை வீழ்த்தவே திமுக கூட்டணியில் இடம் பெற்றோம்.

    ஆகவே, திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் இடம் பெற்றிருப்பது நாட்டை பாதுகாக்கவே.

    இச்சூழலில்,பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் கூட்டணி இல்லை என்று நேற்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தவுடன்,

    விடுதலைச்சிறுத்தைகள் அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும் எனவும் வரப்போகிறது எனவும் கக்கத்தில் பையை வைத்துக்கொண்டு ஜோசியம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் அரசியல் புரோக்கர்கள்.

    பாஜகவை அதிமுக எதிர்ப்பது கோட்பாட்டு அடிப்படையில் இல்லை என்பதை விடுதலைச்சிறுத்தைகள் சரியாக புரிந்து கொண்டுள்ளோம். எங்களிடம் எந்த ஊசலாட்டமும் இல்லை.

    திமுக தலைமையிலான கூட்டணியால் மட்டுமே பாஜக எனும் தீய சக்தியை அழித்தொழிக்க முடியும். அந்த வகையில், அரசியல் புரோக்கர்களின் கேடு செயல் நிறைவேறாது. விடுதலைச்சிறுத்தைகள் அரசியல் புரோக்கர்களின் அற்ப ஆசைக்கு வைக்கப்பட்ட களிமண் அல்ல; காட்டாற்று வெள்ளத்தையே திசைதிருப்பும் கற்பாறை என எச்சரிக்க கடமைப்பட்டுள்ளோம்.

    இந்த கற்பாறையில் அரசியல் புரோக்கர்கள் அடிபடப்போவது உறுதி!

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேசிய கட்சிக்கான தகுதியைப் பெற வேண்டுமெனில், 3 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
    • தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கான தலைமை அலுவலகம் உள்ளிட்ட விவரங்களைக் கோரும் பணியில் மாநிலத் தேர்தல் துறை ஈடுபட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எவை எவை என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற, தேர்தலில் குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதத்தையோ அல்லது வெற்றியையோ கட்சிகள் பெற்றிருக்க வேண்டும்.

    மாநில கட்சிகளாக அங்கீகாரம்பெற வேண்டுமெனில், நான்கு நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதாவது, சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

    மக்களவைத் தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி., தொகுதிளில் ஒவ்வொரு 25 இடங்களில் ஒரு இடத்திலாவது வெற்றியைப் பதிவு செய்திருக்க வேண்டும்.

    மக்களவை அல்லது சட்டப் பேரவைத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை அல்லது 2 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும். எந்தத் தொகுதியிலும் வெற்றியைப் பதிவு செய்யாவிட்டால் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும்.

    இதேபோன்று தேசிய கட்சிக்கான தகுதியைப் பெற வேண்டுமெனில், 3 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். மொத்த மக்களவை இடங்களில் 2 சதவீத இடங்களில் குறைந்த பட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும். மக்களவை அல்லது சட்டப் பேரவைத் தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் 6 சதவீத வாக்குகள் பெறுவதுடன், 4 மக்களவைத் தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும். நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று பூர்த்தியானால், தேசிய கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

    தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருந்தால், தேர்தலின் போது அந்த கட்சி மற்றும் அதன் வேட்பாளருக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும். இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேசிய வாதகாங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தேசிய கட்சிக்கான அங்கீகாரத்தை இழந்தன.

    தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.,பா.ஜ.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. தேர்தல் ஆணை யம் அண்மையில் வெளியிட்ட உத்தரவால், தமிழகத்திலும் அங்கீகாரம் பெற்ற கட்சிகளின் பட்டியலில் இருந்து சில கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

    அதேசமயம், தேசிய கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி அங்கீகாரம் பெற்ற கட்சிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கான தலைமை அலுவலகம் உள்ளிட்ட விவரங்களைக் கோரும் பணியில் மாநிலத் தேர்தல் துறை ஈடுபட்டுள்ளது.

    தேசிய கட்சிக்கான அந்தஸ்து பட்டியலிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீக்கப்பட்டாலும், தமிழகத்தில் மாநிலக் கட்சிக்கான அந்தஸ்து பட்டியலில் அந்தக் கட்சி இடம் பெற்றுள்ளது.

    இதன்மூலம், மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., ஆம்ஆத்மி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தேர்தல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தமிழகத்தில் மாநில கட்சிகளாக உள்ள பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத் தைகள் உள்ளிட்ட கட்சிகள் மாநில கட்சி என்கிற அங்கீகாரத்தை ஏற்கனவே இழந்துள்ளன. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் 8 சதவீத வாக்குகளுக்கும் குறைவாக பெற்று வரும் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இன்னும் மாநில கட்சி என்கிற அங்கீகாரத்தை பெறாமலேயே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • அக்டோபர் 2-ம் தேதி அன்று சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு.
    • ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி அளித்திருந்த நிலையில் காவல்துறை அனுமதி மறுப்பு.

    தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தனர். 75-வது சுதந்திர தினவிழா, அம்பேத்கர் பிறந்த தின நூற்றாண்டு விழா, விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு இந்த ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதற்காக சென்னை, திருவள்ளூர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் காவல் துறையிடம் அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் முறைப்படி அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால் இதற்கு காவல்துறை சார்பில் அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.

    இதைதொடர்ந்து அந்த அமைப்பை சேர்ந்த 9 பேர் இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பது சட்டவிரோதம் என்றும், எனவே உரிய அனுமதி அளிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டு கொள்ளப்பட்டிருந்தது. இதனை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த 22-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர் வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இதை தொடர்ந்து செப்டம்பர் 28-ந் தேதிக்குள் முடிவு எடுத்து நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து அக்டோபர் 2-ந்தேதி திட்டமிட்டபடி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அந்த அமைப்பினர் மேற்கொண்டு வந்தனர்.

    இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்துவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. இதன் பின்னரும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு எதிரான குரல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன. இதற்கிடையே ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இதே நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மத நல்லிணக்க பேரணியை நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    இந்தநிலையில் அக்டோபர் 2-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு காவல் துறை சார்பில் பல மாவட்டங்களில் அனுமதி மறுத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருச்சி, வேலூர், ராமநாதபுரம், தென்காசி, திருவள்ளூர், திண்டுக்கல், கடலூர் உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

    சென்னையிலும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளை அந்த அமைப்பினர் மேற்கொண்டு வந்தனர். சென்னையிலும் ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று தற்போதுதான் இயல்புநிலை திரும்பியுள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டிருந்த அதே நாளில் வேறு சில அமைப்புகளும் பேரணிக்கு அனுமதி கேட்டுள்ளன.

    இரு தரப்புக்கு ஒரே நாளில் அனுமதி அளித்தால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

    ×