search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விக்ரமாதித்யா சிங்"

    • கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநில மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.
    • இந்த தொகுதியில் காங்கிரஸ் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான பிரதிபா சிங் போட்டியிடுகிறார்.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி தொகுதியில் பா.ஜனதா சார்பில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் களம் இறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரதிபா சிங் போடடியிடுகிறார். இவரது மகன் விக்ரமாதித்யா சிங் இமாச்சல பிரதேச மாநில மந்திரியாக இருந்து வருகிறார்.

    தனது தாயாருக்காக தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் விக்ரமாதித்யா சிங். இந்த நிலையில் கங்கனா ரனாவத் சர்ச்சைகளின் ராணி என விக்ரமாதித்யா சிங் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக விக்ரமாதித்யா சிங் கூறியதாவது:-

    கங்கனா ரனாவத் சிறந்த நடிகர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் சர்ச்சைகளின் ராணி என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அவர் அவ்வப்போது பேசியது தேர்தலில் கேள்வி எழுப்பப்படாது என்று நினைத்தால், அதன்பின் அவருக்கு ஜெய் ஸ்ரீராம்.

    பிரச்சனைகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்படும். அதற்கு அவர் பதில் அளித்தாக வேண்டும். குறிப்பாக இமாச்சல பிரதேச மாநலித்தின் மண்டி தொகுதி மக்களுக்கு.

    இவ்வாறு விக்ரமாதித்யா தெரிவித்துள்ளார்.

    மாட்டிறைச்சி சாப்பிடுவதாக கங்கனா ரனாவத்திற்கு எதிராக எழும்பிய குற்றச்சாட்டு குறித்து கூறுகையில் "கடவுள் ராமர் அவருக்கு அருளாசி வழங்கட்டும். இந்த மாநில மக்களவை பற்றி ஏதும் தெரியாத அவர் வெற்றிப்பெற போவதில்லை. ஆகையால் அவர் தேவ் பூமியில் இருந்து திரும்புவார்" என்றார்.

    ஆனால், கங்கனா ரனாவத், முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற வதந்தி. நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் ஆறு பேர், பா.ஜனதாவுக்கு வாக்களித்தனர்.
    • நேற்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் உள்பட 15 எம்.எல்.ஏ.-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இமாச்சல பிரதேசத்தில் நேற்று முன்தினம் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் அனைவரும் வாக்களித்திருந்தால் அக்கட்சியின் வேட்பாளர் அபிஷேக் சிங்வி எளிதாக வெற்றி பெற்றிருப்பார்.

    ஆனால், ஆறு எம்.எல்.ஏ.-க்கள் மாறி வாக்களித்ததால் குறைந்த எம்.எல்.ஏ.-க்களை (25) கொண்ட பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றார்.

    இதனால் இமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்தது என பா.ஜனதா கூறியது. மேலும், சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சி மேற்கொண்டது. இதனால் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று சட்டமன்றம் கூடியது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட 15 எம்.எல்.ஏ.-க்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதன்பின் பட்ஜெட் மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை பா.ஜனதாவுக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் ஆறு பேர் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என சபாநாயகர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    இமாச்சல பிரதேச சட்டமன்றத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு நிதி மசோதாவை கொண்டு வர இருப்பதால், அனைத்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.-க்களும் அந்த மசோதாவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என கொறடா உத்தரவிட்டிருந்தார். 

    இந்த கொறடா உத்தரவை மீறியதாக ரஜிந்தர் ராணா, சுதிர் சர்மா, இந்தேர் தத் லகான்பால், தேவிந்தர் குமார் பூட்டோ, ரவி தாகூர் மற்றும் சேதன்யா சர்மா ஆகிய ஆறு எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கட்சித் தாவல் தடைசட்டத்தின் கீழ் அவர்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்து. அவர்கள் மீதான உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா தெரிவித்துள்ளார்.

    • ஆறு எம்.எல்.ஏ.-க்களை பா.ஜனதா அரியானாவுக்கு அழைத்துச் சென்றுள்ளது.
    • மூத்த அரசியல் தலைவரின் மகனும், மந்திரியுமான விக்ரமாதித்யா சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரேயொரு தொகுதிக்கான மாநிலங்களவை தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 40 எம்.எல்.ஏ.-க்களை வைத்திருந்ததால் எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் பா.ஜனதாவுக்கு மாறி வாக்களித்ததால் 25 எம்.எல்.ஏ.-க்கள் மட்டுமே வைத்துக் கொண்டு களத்தில் இறங்கிய பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றார்.

    இதனால் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதேவேளையில் பா.ஜனதா இமாச்சல பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது எனக் கூறி வருகிறது. மேலும், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருக்கிறது. சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான தீர்மானம் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் நடைபெற வேண்டும் என வலியுறுத்த இருக்கிறது. இது தொடர்பாக இன்று ஆளுநரை சந்தித்தனர்.

    இந்த நிலையில் சட்டமன்றம் கூடிய நிலையில் 15 பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்துள்ளார். இதற்கிடையே ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா அரியானா மாநிலத்திற்கு கடத்தி சென்றுள்ளதாக அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு குற்றம்சாட்டினார்.

    இவ்வாறு சென்று கொண்டிருக்கும் நிலையில் மந்திரி சபையில் இருந்து விக்ரமாதித்யா சிங் விலகியுள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான வீரபத்ர சிங்கின் மகன் ஆவார்.

    இதனால் இமாச்சல பிரதேசத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இதனால் ஆட்சியை காப்பாற்ற பல்வேறு அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது. மேலும் எம்.எல்.ஏ.-க்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது.

    சுக்விந்தர் சிங் சுகு

    இதனால் கர்நாடக மாநில துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான டி.கே. சிவகுமாரை இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு அனுப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளார். அவர் இமாச்சல பிரதேசம் சென்று கட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அரியானா மாநில முன்னாள் முதல்வர் புபேந்தர் சிங் ஹூடாவும் இமாச்சல பிரதேசம் செல்ல இருக்கிறார்.

    2001-ல் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேஷ்முக் தலைமையிலான காங்கிரஸ் கட்சி சிக்கலை எதிர்கொண்டபோது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களை பெங்களூரு வரவழைத்து, அவர்களை உபசரித்து நெருக்கடியை தீர்த்தார். அதன்மூலம் சிக்கலை தீர்த்து வைக்கக் கூடியது தலைவர் என டி.கே. சிவக்குமார் பெயர் பெற்றார்.

    தற்போது இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் சிக்கலை தீர்த்து வைப்பார் என காங்கிரஸ் மேலிடம் நம்புகிறது.

    • மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் சிலர் பா.ஜனதாவுக்கு வாக்களித்தனர்.
    • மெஜாரிட்டியான காங்கிரஸ் தோல்வியடைந்ததால், பெரும்பான்மையாக இழந்ததாக பா.ஜனதா கூறி வருகிறது.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரேயொரு மாநிலங்களவை எம்.பி. இடத்திற்கு காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் சிங்வி போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளதால் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், 25 எம்.எல்.ஏ.-க்களை கொண்ட பா.ஜனதா நிறுத்திய வேட்பாளர் வெற்றி பெற்றார். இதனால் காங்கிரஸ் மெஜாரிட்டியை இழந்தது என பா.ஜனதா கூறியது. அத்துடன் இன்று காலை பா.ஜனதா முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாகூர் எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுநரை சந்தித்தார். அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    அதனைத் தொடர்ந்து சட்டமன்ற சபாநாயகர் ஆளுநர் சந்தித்து பேசினார். இந்த நிலையில் இமாச்சல பிரதேச மந்திரி விக்ரமாதித்யா சிங் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் காங்கிரஸ் தலைவர் வீரபத்ர சிங்கின் மகன் ஆவார்.

    எம்.எல்.ஏ.-க்களை கட்சி மதிக்கவில்லை என விக்ரமாத்தியா சிங் தெரிவித்துள்ளார். நேற்றைய மாநிலங்களவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.-க்கள் மாறி வாக்களித்தனர்.

    இமாச்சல பிரதேச மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் ஆறுபேரை பா.ஜனதா அரியானாவிற்கு கடத்திச் சென்றதாக அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மாநிலங்களவை எம்.பி. இடத்தை பறிகொடுத்த காங்கிரஸ், தற்போது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளது.

    ×