search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கங்கனா ரனாவத் சர்ச்சைகளின் ராணி: இமாச்சல பிரதேச மாநில மந்திரி சொல்கிறார்
    X

    கங்கனா ரனாவத் சர்ச்சைகளின் ராணி: இமாச்சல பிரதேச மாநில மந்திரி சொல்கிறார்

    • கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநில மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.
    • இந்த தொகுதியில் காங்கிரஸ் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான பிரதிபா சிங் போட்டியிடுகிறார்.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி தொகுதியில் பா.ஜனதா சார்பில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் களம் இறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரதிபா சிங் போடடியிடுகிறார். இவரது மகன் விக்ரமாதித்யா சிங் இமாச்சல பிரதேச மாநில மந்திரியாக இருந்து வருகிறார்.

    தனது தாயாருக்காக தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் விக்ரமாதித்யா சிங். இந்த நிலையில் கங்கனா ரனாவத் சர்ச்சைகளின் ராணி என விக்ரமாதித்யா சிங் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக விக்ரமாதித்யா சிங் கூறியதாவது:-

    கங்கனா ரனாவத் சிறந்த நடிகர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் சர்ச்சைகளின் ராணி என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அவர் அவ்வப்போது பேசியது தேர்தலில் கேள்வி எழுப்பப்படாது என்று நினைத்தால், அதன்பின் அவருக்கு ஜெய் ஸ்ரீராம்.

    பிரச்சனைகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்படும். அதற்கு அவர் பதில் அளித்தாக வேண்டும். குறிப்பாக இமாச்சல பிரதேச மாநலித்தின் மண்டி தொகுதி மக்களுக்கு.

    இவ்வாறு விக்ரமாதித்யா தெரிவித்துள்ளார்.

    மாட்டிறைச்சி சாப்பிடுவதாக கங்கனா ரனாவத்திற்கு எதிராக எழும்பிய குற்றச்சாட்டு குறித்து கூறுகையில் "கடவுள் ராமர் அவருக்கு அருளாசி வழங்கட்டும். இந்த மாநில மக்களவை பற்றி ஏதும் தெரியாத அவர் வெற்றிப்பெற போவதில்லை. ஆகையால் அவர் தேவ் பூமியில் இருந்து திரும்புவார்" என்றார்.

    ஆனால், கங்கனா ரனாவத், முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற வதந்தி. நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை என்றார்.

    Next Story
    ×