search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாய்க்காலில் விழுந்து"

    • காலிங்கராயன் வாய்க்காலில் போதையில் தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்துள்ளார்.
    • சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அடித்து செல்லப்பட்ட சுந்தர்ரா ஜனை பிணமாக மீட்டனர்.

    ஈரோடு, 

    ஈரோடு அக்ரஹாரம் அடுத்துள்ள மணியகாரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன்(50). கூலி தொழிலாளியான இவர் நேற்றுமுன்தினம் மாலை நஞ்சப்பாநகரில் உள்ள தனது மனைவியை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார்.

    அப்போது அளவுக்கு அதிகமாக மதுஅருந்தியதால் சுந்தர்ராஜ் பேரேஜ் அருகே உள்ள காலிங்கராயன் வாய்க்காலில் போதையில் தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்துள்ளார்.

    இதையடுத்து அங்கிருந்த வர்கள் ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் தீயணைப்பு துறையினர் சென்று வாய்க்காலில் தேடினர். சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அடித்து செல்லப்பட்ட சுந்தர்ராஜனை பிணமாக மீட்டனர்.

    இது குறித்து கருங்க ல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு வயிற்று வலி அதிகமாக உள்ளதாக மனைவியிடம் கூறியுள்ளார்
    • வாய்க்காலில் விழுந்து இறந்தது கந்தசாமி என தெரியவந்தது

    பெருந்துறை,

    பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரம் கீழேரி பாளையம் பகுதியை சார்ந்தவர் கந்தசாமி ( 72). இவர் தனது மனைவி கருணை அம்மாள், மகன் பூபதி, மகள் விஜயலட்சுமி ஆகியோருடன் குடியிருந்து வருகிறார்.

    இவரது மனைவி கருணைஅம்மாள் அந்தப் பகுதியில் 100 நாள் வேலை செய்து வருகிறார். கந்தசாமி கொளப்பலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஸ்பின்னிங் மில்லில் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.

    கடந்த இரண்டு வருடங்க ளாக இவருக்கு குடல் பிரச்சனை மற்றும் அல்சர் நோய் பாதிப்பு இருந்துள்ளது. இதனால் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வயிற்று வலி அதிகமாக உள்ளதாக மனைவியிடம் கூறியுள்ளார்.

    அவர் மனைவி மாத்திரை சாப்பிட்டு விட்டு வீட்டில் இருக்கும் படி கூறிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மாலை வீட்டில் வந்து பார்த்தபோது அவரது கணவர் கந்தசாமி வீட்டில் இல்லை.

    உடனடியாக மகன் மற்றும் மகள் வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்க வில்லை. இந்த நிலையில் நேற்று மதியம் பெருந்துறை ஈரோடு ரோடு கீழ்பவானி வாய்க்காலில் ஆண் பிணம் மிதந்து வந்ததாகவும் அதனை தீயணைப்புத் துறையினர் மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த தாகவும் இவர்களுக்கு தகவல் கிடைத்தது.

    கருணை அம்மாளும் அவரது மகனும் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது வாய்க்காலில் விழுந்து இறந்தது கந்தசாமி என தெரியவந்தது. பின்னர் இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசோதா பேகம் மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்.

    • கணவன், மனைவி இருவரும், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதியில் வாத்துக் கடை வைத்து நடத்தி வந்துள்ளனர்.
    • அதில் ராஜேந்திரனுக்கு வலிப்பு நோய் உள்ளதா–கவும், வாய்க்காலில் விழுந்து வலிப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்பது தெரியவந்தது.

    ஈரோடு:

    தர்மபுரி மாவட்டம், நாயக்கனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (46). இவரது மனைவி ராஜேஸ்வரி (42). இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கணவன், மனைவி இருவரும், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதியில் வாத்துக்கடை வைத்து நடத்தி வந்துள்ளனர்.

    இந்நிலையில் ராஜேந்திரன், கோபி, புதுக்கரைப் புதூர், தடப்பள்ளி வாய்க்கால், சங்கிலி முனியப்பன் கோயில் மதகு அருகே வாத்து மேய்த்து வரும் தனது தம்பி சரவணனிடம் வாத்து வாங்குவதற்காக நேற்று முன் தினம் மாலை சென்றார்.

    இந்த நிலையில் ராஜேந்திரன் வாய்க்காலில் நேற்று காலை இறந்து கிடந்துள்ளார்.

    இதுகுறித்து தகவலின் பேரில் கோபி போலீசார் ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோத–னைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்ட–னர்.

    அதில் ராஜேந்திரனுக்கு வலிப்பு நோய் உள்ளதாகவும், வாய்க்காலில் விழுந்து வலிப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ராஜேந்திரன் மனைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×