என் மலர்
நீங்கள் தேடியது "Worker dies after"
- ராமசாமி நிலைதடுமாறி கட்டிடத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
- இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி கே.வி.கே. தெருவை சேர்ந்தவர் ராமசாமி (62). கட்டிட தொழிலாளி. இவர் அந்த பகுதியில் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.
அப்போது அவர் நிலைதடுமாறி கட்டிடத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் அவரது மனைவி நாகமணி சம்பவ இடத்து வந்தார்.
இதை தொடர்ந்து அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராமசாமியை மீட்டு ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காலிங்கராயன் வாய்க்காலில் போதையில் தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்துள்ளார்.
- சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அடித்து செல்லப்பட்ட சுந்தர்ரா ஜனை பிணமாக மீட்டனர்.
ஈரோடு,
ஈரோடு அக்ரஹாரம் அடுத்துள்ள மணியகாரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன்(50). கூலி தொழிலாளியான இவர் நேற்றுமுன்தினம் மாலை நஞ்சப்பாநகரில் உள்ள தனது மனைவியை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது அளவுக்கு அதிகமாக மதுஅருந்தியதால் சுந்தர்ராஜ் பேரேஜ் அருகே உள்ள காலிங்கராயன் வாய்க்காலில் போதையில் தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்துள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த வர்கள் ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் தீயணைப்பு துறையினர் சென்று வாய்க்காலில் தேடினர். சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அடித்து செல்லப்பட்ட சுந்தர்ராஜனை பிணமாக மீட்டனர்.
இது குறித்து கருங்க ல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எதிர்பா ராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
- இதில் சேவியருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபி பெரியகொடிவேரி பகுதியைச் சேர்ந்தவர் செல்வமேரி (வயது 71). இவரது மகன் சேவியர் (49). இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சேவியர் வழக்கம் போல் நல்ல கவு ண்டன் பாளையம் மலர் நக ரில் புதிதாக கட்டி வரும் ஒரு கட்டிடத்திற்கு டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு சென்று ள்ளார்.
அங்கு சேவியர் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது மேல்தளத்திற்கு செல்வதற்காக படியில் ஏறினார். அப்போது எதிர்பா ராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் சேவியருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிரு ந்தவர்கள் சேவியரை கோபி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சை க்காக கோவை அரசு மரு த்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சேவியர் சிகிச்சை பலனி ன்றி உயிரிழந்தார். இதைய டுத்து சேவியரின் தாய் செ ல்வமேரி இது குறித்து கோபி போலீஸ் நிலைய த்தில் புகார் அளித்தார். புகாரியின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 10 அடி உயரத்தில் இருந்து முருகன் தவறி கீழே விழுந்தார்.
- இதில் இடுப்பு பகுதியில் காயம் அடைந்தவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கெஞ்சனூர் தண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (50). கட்டிட தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மரத்துக்காடு பகுதியில் புதிய கட்டிட பணிக்கு சென்றார். இரவு கட்டிடத்தின் முதல் தளத்தில் ஜன்னல் பகுதியில் படுத்திருந்தார்.
அப்போது 10 அடி உயரத்தில் இருந்து முருகன் தவறி கீழே விழுந்தார். இதில் இடுப்பு பகுதியில் காயம் அடைந்தவரை சக தொழிலாளிகள் மீட்டு சத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார்.
இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
- எதிர்பாராத விதமாக லிப்டின் கதவு மூடியதாக தெரிகிறது.
- இதில் சுப்பிரமணியின் கை சிக்கி துண்டானது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் திண்டல் மாருதி நகரை சேர்ந்தவர் ராமசாமி மகன் சுப்பிரமணி (வயது 69). இவர் துணி இஸ்திரி செய்யும் தொழில் செய்து வந்தார்.
இவருடைய மனைவி ஜோதிமணி (65). சுப்பிரமணி அந்தப் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளுக்கு சென்று துணி வாங்கி வந்து இஸ்திரி செய்து கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில் சம்பவத்தன்று சுப்பிரமணி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒருவரது வீட்டிற்கு துணி வாங்குவதற்காக லிப்ட்டில் செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக லிப்டின் கதவு மூடியதாக தெரிகிறது.
இதில் சுப்பிரமணியின் கை சிக்கி துண்டானது. மேலும் படுகா யம் அடைந்த சுப்பிரமணி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து தீயணை ப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுப்பிரமணியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து அவரது மனைவி ஜோதி மணி ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.






