search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "falling down stairs"

    • எதிர்பா ராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
    • இதில் சேவியருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி பெரியகொடிவேரி பகுதியைச் சேர்ந்தவர் செல்வமேரி (வயது 71). இவரது மகன் சேவியர் (49). இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சேவியர் வழக்கம் போல் நல்ல கவு ண்டன் பாளையம் மலர் நக ரில் புதிதாக கட்டி வரும் ஒரு கட்டிடத்திற்கு டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு சென்று ள்ளார்.

    அங்கு சேவியர் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது மேல்தளத்திற்கு செல்வதற்காக படியில் ஏறினார். அப்போது எதிர்பா ராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் சேவியருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிரு ந்தவர்கள் சேவியரை கோபி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சை க்காக கோவை அரசு மரு த்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சேவியர் சிகிச்சை பலனி ன்றி உயிரிழந்தார். இதைய டுத்து சேவியரின் தாய் செ ல்வமேரி இது குறித்து கோபி போலீஸ் நிலைய த்தில் புகார் அளித்தார். புகாரியின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×