search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிபோதையில் வாய்க்காலில் விழுந்து தொழிலாளி பலி
    X

    குடிபோதையில் வாய்க்காலில் விழுந்து தொழிலாளி பலி

    • காலிங்கராயன் வாய்க்காலில் போதையில் தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்துள்ளார்.
    • சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அடித்து செல்லப்பட்ட சுந்தர்ரா ஜனை பிணமாக மீட்டனர்.

    ஈரோடு,

    ஈரோடு அக்ரஹாரம் அடுத்துள்ள மணியகாரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன்(50). கூலி தொழிலாளியான இவர் நேற்றுமுன்தினம் மாலை நஞ்சப்பாநகரில் உள்ள தனது மனைவியை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார்.

    அப்போது அளவுக்கு அதிகமாக மதுஅருந்தியதால் சுந்தர்ராஜ் பேரேஜ் அருகே உள்ள காலிங்கராயன் வாய்க்காலில் போதையில் தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்துள்ளார்.

    இதையடுத்து அங்கிருந்த வர்கள் ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் தீயணைப்பு துறையினர் சென்று வாய்க்காலில் தேடினர். சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அடித்து செல்லப்பட்ட சுந்தர்ராஜனை பிணமாக மீட்டனர்.

    இது குறித்து கருங்க ல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×