search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "getting stuck in lift"

    • எதிர்பாராத விதமாக லிப்டின் கதவு மூடியதாக தெரிகிறது.
    • இதில் சுப்பிரமணியின் கை சிக்கி துண்டானது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் திண்டல் மாருதி நகரை சேர்ந்தவர் ராமசாமி மகன் சுப்பிரமணி (வயது 69). இவர் துணி இஸ்திரி செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இவருடைய மனைவி ஜோதிமணி (65). சுப்பிரமணி அந்தப் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளுக்கு சென்று துணி வாங்கி வந்து இஸ்திரி செய்து கொடுப்பது வழக்கம்.

    இந்நிலையில் சம்பவத்தன்று சுப்பிரமணி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒருவரது வீட்டிற்கு துணி வாங்குவதற்காக லிப்ட்டில் செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக லிப்டின் கதவு மூடியதாக தெரிகிறது.

    இதில் சுப்பிரமணியின் கை சிக்கி துண்டானது. மேலும் படுகா யம் அடைந்த சுப்பிரமணி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து தீயணை ப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுப்பிரமணியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இதுகுறித்து அவரது மனைவி ஜோதி மணி ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ×