search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்கு பதிவு"

    • மின் ஒயர் தெரியாமல் அவர் கையின் மீது பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
    • சப் இன்ஸ்பெக்டர் புனித வள்ளி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏனாதி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மனைவி ஆலம்மாள் (வயது60) என்பவர் ஆடு வளர்த்து வருகிறார். இன்று காலை அந்தப் பகுதியில் உள்ள ஆளியம்மன் கோவிலின் பின்புறத்தில் ஆட்டிற்கு தழை வெட்டுவதற்காக சென்று உள்ளார். அறுந்து கிடந்த மின் ஒயர் தெரியாமல் அவர் கையின் மீது பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து தகவலின் பெயரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி சம்பவ இடத்திற்கு சென்று பிரோதத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் புனித வள்ளி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

    • பெருமாள் மின் வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
    • சிகிச்சை பலன் இன்றி பாண்டி பரிதாபமாக இறந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே மின் வாரிய அதிகாரி மனைவி தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவர் பண்ருட்டி மின் வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாண்டி (52). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டின் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் பாண்டி திடீரென விஷம் குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலன் இன்றி பாண்டி பரிதாபமாக இறந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நந்த குமார் வழக்கு பதிவு செய்து பாண்டி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்.

    • சக்திவேல் குடும்பத்தாருக்கும் இடையே நிலத்தகராறில் முன் விரோதம் இருந்து வந்தது.
    • புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள ராமி ரெட்டிபட்டி கிராமம். துட்டம்பட்டியான் வளவு பகுதியை சேர்ந்த மாணிக்கம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் குடும்பத்தாருக்கும் இடையே நிலத்தகராறில் முன் விரோதம் இருந்து வந்தது. இதனிடையே சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர் .இதுபற்றி கொடுத்த புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்த மோளையன் .முருகேசன் .நாகராஜ் .பழனிசாமி .மகேந்திரன் .மோகன் .சக்திவேல் .பழனிசாமி .மாணிக்கம் .மகாதேவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×