search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலத்தகராறில் மோதல்; 10 பேர் மீது வழக்கு
    X

    நிலத்தகராறில் மோதல்; 10 பேர் மீது வழக்கு

    • சக்திவேல் குடும்பத்தாருக்கும் இடையே நிலத்தகராறில் முன் விரோதம் இருந்து வந்தது.
    • புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள ராமி ரெட்டிபட்டி கிராமம். துட்டம்பட்டியான் வளவு பகுதியை சேர்ந்த மாணிக்கம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் குடும்பத்தாருக்கும் இடையே நிலத்தகராறில் முன் விரோதம் இருந்து வந்தது. இதனிடையே சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர் .இதுபற்றி கொடுத்த புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்த மோளையன் .முருகேசன் .நாகராஜ் .பழனிசாமி .மகேந்திரன் .மோகன் .சக்திவேல் .பழனிசாமி .மாணிக்கம் .மகாதேவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×