

விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏனாதி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மனைவி ஆலம்மாள் (வயது60) என்பவர் ஆடு வளர்த்து வருகிறார். இன்று காலை அந்தப் பகுதியில் உள்ள ஆளியம்மன் கோவிலின் பின்புறத்தில் ஆட்டிற்கு தழை வெட்டுவதற்காக சென்று உள்ளார். அறுந்து கிடந்த மின் ஒயர் தெரியாமல் அவர் கையின் மீது பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து தகவலின் பெயரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி சம்பவ இடத்திற்கு சென்று பிரோதத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் புனித வள்ளி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்