search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வந்தா ராஜாவாதான் வருவேன்"

    சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் இணைந்து நடிக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் டீசரை ரஜினிகாந்தின் 2.0 படத்துடன் இணைக்க லைகா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. #VandhaRajavadhanVaruven #VRVTeaser #STR
    `செக்கச்சிவந்த வானம்' படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி. இயக்கும் இந்த படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து மெகாஹிட்டான ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது. 

    இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். கேத்தரின் தெரசா, ரம்யா கிருஷ்ணன், மகத் ராகவேந்திரா, யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

    சமீபத்தில் படத்தின் டீசருக்கு சிம்பு டப்பிங் செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிய நிலையில், படத்தின் டீசர் புரோமோவை படக்குழு நேற்று வெளியிட்டது. அந்த புரோமோ வீடியோவில் படத்தின் டீசர் வருகிற 29-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள 2.0 படம் வருகிற 29-ஆம் தேதி உலகமெங்கம் ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில், 2.0 படத்துடன் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீசரை இணைக்க படக்குழு முயற்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #VandhaRajavadhanVaruven #VRVTeaser #STR

    சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக ரசிகர்கள் வெளியிட்டு வரும் வீடியோவால், சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். #STR #Simbu
    சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். 

    தனக்கு நஷ்ட ஈடு கொடுக்காமல் புதிய படங்களில் சிம்பு நடிக்கக்கூடாது என்று மைக்கேல் ராயப்பன் வற்புறுத்திய நிலையில், மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு நடித்து அந்த படமும் ரிலீசாகிவிட்டது.

    தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்த நிலையில் மைக்கேல் ராயப்பன் மீண்டும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “சிம்புவை வைத்து படம் எடுக்கக்கூடாது என்ற தயாரிப்பாளர் சங்க முடிவை சுந்தர்.சி மீறி இருப்பது கண்டிக்கத்தக்கது. பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிடுகிறார்கள். தயாரிப்பாளர்கள் சங்கம் ஓரிரு நாளில் கூடி இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டுவதாக தெரிவித்து உள்ளது” என்றார்.

    இந்த நிலையில் விஷாலும், மைக்கேல் ராயப்பனும் சிம்பு படத்தை வெளிவரவிடாமல் தடுப்பதாக சிம்பு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளனர். அது சமூக வலைத்தளங்களில் வைரலானது.



    இதையறிந்த சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘எனது ரசிகர்களுக்கும் என்னை நேசிப்பவர்களுக்கு ஓர் அழுத்தமான வேண்டுகோள். திரைத்துறையில் அண்மையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து வருந்தாதீர். 

    எந்த ஒரு தனி நபரின் முடிவும் நம்மை ஓரங்கட்டிவிட முடியாது. எந்த முடிவாக இருந்தாலும் அது குழு உறுப்பினர்களால் கவுன்சில் உறுப்பினர்களால் எடுக்கப்படுவதை நாம் உறுதி செய்வோம். அதனால் பதற்றப்பட வேண்டாம். யாரையும் குறிவைத்து விமர்சிக்க வேண்டாம். 

    எப்போதுமே அன்பை பரப்புங்கள். உங்களது தொடர் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நாம் நமது கடமையை செய்வோம். தானாக வழி பிறக்கும். பொங்களுக்கு எப்படியும் திரைக்கு வருவோம்’. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #STR #VandhaRajavaathaanVaruven
    சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தை தடை செய்ய ஏஏஏ படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் முயற்சி செய்து வருவதாக சிம்பு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #STR
    சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். சிம்பு 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்துவிட்டு 27 நாட்களே நடித்து கொடுத்தார் என்றும், படப்பிடிப்பில் ஒத்துழைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி இருந்தார்.

    இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்புவிடம் விளக்கம் கேட்டது. தனக்கு நஷ்ட ஈடு கொடுக்காமல் புதிய படங்களில் சிம்பு நடிக்கக்கூடாது என்று மைக்கேல் ராயப்பன் வற்புறுத்திய நிலையில், மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு நடித்து அந்த படமும் ரிலீசாகிவிட்டது.



    தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்த நிலையில் மைக்கேல் ராயப்பன் மீண்டும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “சிம்புவை வைத்து படம் எடுக்கக்கூடாது என்ற தயாரிப்பாளர் சங்க முடிவை சுந்தர்.சி மீறி இருப்பது கண்டிக்கத்தக்கது. பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிடுகிறார்கள். தயாரிப்பாளர்கள் சங்கம் ஓரிரு நாளில் கூடி இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டுவதாக தெரிவித்து உள்ளது” என்றார்.

    இந்த நிலையில் விஷாலும், மைக்கேல் ராயப்பனும் சிம்பு படத்தை வெளிவரவிடாமல் தடுப்பதாக சிம்பு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளனர். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. #STR #VandhaRajavaathaanVaruven

    சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்காக ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்று சிம்பு அடம்பித்திருக்கிறார். #Simbu #STR #VanthaRajavaThaanVaruven
    திரிவிக்ரம் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அத்தாரின்டிகி தாரேதி’. பவன் கல்யாண் - சமந்தா - பிரணீதா இணைந்து நடித்த அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

    அந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு தற்போது நடித்து வருகிறார். சுந்தர்.சி இயக்கி வரும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். மேலும் கேத்ரின் தெரசா, யோகிபாபு, மகத், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

    பெயரிடப்படாமல் படப்பிடிப்பு நடத்தி வந்த படக்குழுவினர் தற்போது படத்திற்கு ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மேலும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. 



    லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இது சிம்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. #STR
    ×